Wednesday, May 28, 2008

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து......

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
(ஒருவர் மீது )
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு (2)
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
(ஒருவர் சொல்ல )

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள்
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்
(ஒருவர் மீது )

சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்
(ஒருவர் சொல்ல )

கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும்
கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும்
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு (2)
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் ....

1 comment:

Linga Linga said...

நெஞ்சை நெகிழ வைத்த பாடல்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி