Wednesday, May 28, 2008

ஆனந்தம் இன்று ஆரம்பம் ....

ஆனந்தம் இன்று ஆரம்பம்

மெல்ல சிரித்தால் என்ன

இதழ் விரித்தால் என்ன (2)

மலர்கள் சிரிக்கும் கொடியில்

அலைகள் சிரிக்கும் கடலில் (2)

நிலவும் சிரிக்கும் இரவில் நீயும் சிரித்தாள் என்ன -

ஆனந்தம்

உதட்டு சிவப்பெடுத்து பதிக்க முகம் கொடுத்து

உதவும் சமயமல்லவோ

கரும்பின் சுவை வடித்து திரும்ப அதை கொடுக்க

விரும்பும் இதயமல்லவோ

கடல் கரையோரமாய் மர நிழலோரமாய்

ஒரு கதை பேசலாம்

அதில் சுகம் காணலாம்

குளிர் நீரோட்டம் பாய்ந்திருக்க

பூவாட்டம் நான் மிதக்க கண்ணோட்டம் வந்ததென

என்னை அழைக்க என்னை அழைக்க -

ஆனந்தம்

தாலாட்ட காத்திருக்க தென்பாங்கு பாட்டிருக்க

தேவிக்கு தேவை என்னவோ

கண்நூஞ்சல் ஆடிவரும் மன்னாதி மன்னன் முகம்

கண்டாலும் போதை அல்லவோ

முத்துக்களால் கட்டி வைத்த மாலை ஒன்று

தித்திக்கும் புன்னகையில் தோன்றுமோ

செவ்வான கோலம் கொண்ட மேனி ஒன்று

சந்திக்க சொல்லி என்னை தூண்டுமோ -

(ஆனந்தம் )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி