Monday, May 26, 2008

திருவிளையாடல் காணீரோ .....

ஆடல் காணீரோ

விளையாடல் காணீரோ

திருவிளையாடல் காணீரோ ...ஓஒ ..

ஆடல் காணீரோ

பாடல் மதுரையில் ராஜபௌத்திர ...

பாடல் மதுரையில் ராஜபௌத்திர

பாண்டியனாம் எங்கள் ஆண்டவன்

திருவிளையாடல் காணீரோ ..ஓஒ ..

கூட்டு பெருத்தாலே உன்னை கூட்டும் வைகை என்னும்

ஆற்று வெள்ளம் தடுக்கவே ......

கூட்டு பெருத்தாலே உன்னை கூட்டும் வைகை என்னும்

ஆற்று வெள்ளம் தடுக்கவே

வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணை தனை

வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணை தனை

ஏற்று வினை முடிக்கவே ...

பேற்றடயாத ஒரு வந்தியின் கூலி ஆளாய் ..

பிள்ளை பேற்றடயாத ஒரு வந்தியின் கூலி ஆளாய்

பிட்டுக்கு மண் சுமக்கவே ..

வந்து சித்தனை போல கை பிரம்பால் பட்ட அடி !

சித்தனை போல கை பிரம்பால் பட்ட அடி

பேசிடும் சகல ஜீவ ராசிகள் முதுகிலும் பட்டு

வலுவுற்ற ஈசன் - விளையாடல் காணீரோ ..ஓஒ ..

நரிதனை பரியாக்கி பரிதனை நரியாக்கி

நாரைக்கு முக்தி கொடுத்து ...

நரிதனை பரியாக்கி பரிதனை நரியாக்கி

நாரைக்கு முக்தி கொடுத்து

உயர் நால் வேத பொருள் சொல்லி

நாகத்தையும் வதைத்து

நால் வேத பொருள் சொல்லி

நாகத்தையும் வதைத்து

நக்கீரர் புகழ் நேசித்து ...

வரகுண பாண்டியற்கு சிவலோகம் காட்டி

வரகுண பாண்டியற்கு சிவலோகம் காட்டி

வலை வீசி மீன் பிடித்து ...

வாய் -திறவாத கல் யானைக்கு கரும்பூட்டி

வாய் -திறவாத கல் யானைக்கு கரும்பூட்டி

வைர வளை முத்து வளை ரத்ன வளை விற்ற -

விளையாடல் காணீரோ ..

பாடல் மதுரையில் ராஜபௌத்திர பாண்டியனாம்

எங்கள் ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ ..ஓஒ ..

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி