Wednesday, May 21, 2008

வண்ணக்கிளி .....

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..
(வண்ண)


பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ -
அதைத்தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ
கன்னி மன மாளிகையில் காவல் நிற்கவா ? -
அங்கேகாவல் நின்ற மன்னவனை கைப் பிடிக்க வா..
(வண்ண)


அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளி விடவா -
இந்தஊரையெல்லாம் நான் அழைத்துச் சொல்லி விடவா
அல்லி விழி துள்ளி விழ கோபம் என்னவோ -
இங்கேஅஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ...
(வண்ண)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி