Friday, May 30, 2008

பலப் பல ரகமா...

பல பல பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு
கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு

அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும்
அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு
அடுத்தவர் பையில் இருப்பதை கையில்
அள்ளி கொள்ளும் திருடருக்கு கையிலே பூட்டு
புத்தி கெட்டு ...சக்தி கெட்டு....
பொளப்பை எல்லாம் விட்டுவிட்டு
சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு(2) .....
(பல பல பல பலரகமா).......

மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே
வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு
அங்குமில்லாமே இங்குமில்லாமே
அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு
உறக்கம் கெட்டு ........வழக்கம் கெட்டு...
ஊரு வம்ப கேட்டுக்கிட்டு
உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு (2) ....
(பல பல பல பலரகமா).......

அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
அறிவிருந்தாலும் வழித்தடுமாறி
அவதிபடும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கையில்லாமே வாடி போன வீட்டினையும் திறக்குது சாவி
தங்கமக்கா....உள்ளத்திலே...
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தால் உடைத்து போடும்
தர்மத்தின் சாவி(2) ....
(பல பல பல பலரகமா.......)

1 comment:

சு.செந்தில் குமரன் said...

KALA KALAVENUM PAGUTHTHARIVU SAAVI
not kaala kaala

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி