Wednesday, May 21, 2008

வண்ணம் பாடுதே ...

வண்ணம் பாடுதே புது வண்ணம் பாடுதே
வான் எங்கும் நீல ஒடை தன்னில்
நீந்தும் வெண்ணிலா வண்ணம் பாடுதே வண்ணம் பாடுதே
எண்ணம் போல வாழ்வே
எண்ணம் போல வாழ்வே
நேரும் என்றே சொல்லுதே
கண்ணும் கண்ணும் கூடும்
காதல் கீதம் பாடும்
நம்மைக் காணவே நாணம் கொள்ளுதே
நம்மைக் காணவே நாணம் கொள்ளுதே
(வண்ணம் பாடுதே)


பொய்யான வேஷம் போட்டதும் ஏனோ
மெய்யான அன்பை உணர்ந்திடத் தானே
செய்யாத ஜாலம் செய்ததும் ஏனோ
சிங்காரி உன்னையே அடைந்திடத் தானே
சொல்லாலே மனமே சுகம் பெறுதே
சொல்லாலே மனமே சுகம் பெறுதே
உல்லாச வானில் உலவிடுதே
உல்லாச வானில் உலவிடுதே
வெள்ளம் போலவே இன்பம் பொங்குதே
வெள்ளம் போலவே இன்பம் பொங்குதே

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி