Friday, May 23, 2008

ஆசையும் என் நேசமும் ...

தாகமும் சோகமும் தனித்திடும் பானமடா ஹிக் !
தாபமும் கோபமும் காணும் நிதானமடா ஹிக் !

ஆசையும் (ஹிக் !) என் நேசமும் (ஹிக் !)
ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா
என் ஆவலும் (ஹிக் !) நிறைவேரிடும் (ஹிக் !)
என் ஆருயிரே நீ அருகில் வாராயடா
ஆசையும் (ஹிக் !) என் நேசமும் (ஹிக் !)
ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா
என் ஆவலும் (ஹிக் !) நிறைவேரிடும் (ஹிக் !)
என் ஆருயிரே நீ அருகில் வாராயடா

தாரகை சோலையிலே ஜாடை செய்யும் வெண்ணிலவே
தாரகை சோலையிலே ஜாடை செய்யும் வெண்ணிலவே
தயங்குவதேனோ மாறாத உன் கனவே
மனம்போலே வாழ்நாளிலே
தேன் மலர் மேலே (ஹிக் !)
தென்றலை போலே (ஹிக் !) வாழ்ந்திருப்போம் !
ஆசையும் (ஹிக் !) என் நேசமும் (ஹிக் !)
ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா
என் ஆவலும் (ஹிக் !) நிறைவேரிடும் (ஹிக் !)
என் ஆருயிரே நீ அருகில் வாராயடா

மானம் பிரதானம் என்றே ஏங்கிடும் எழில் ரோஜா
மானம் பிரதானம் என்றே ஏங்கிடும் எழில் ரோஜா
மாயையினாலே மயங்குறானே மலை ராஜா
மாயையினாலே மயங்குறானே மலை ராஜா
காரணமே புரியாமலே மயங்குவதேனோ (ஹிக் !)
அசருவதேனோ (ஹிக் !) கவலையிலே !
ஆசையும் (ஹிக் !) என் நேசமும் (ஹிக் !)
ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா
என் ஆவலும் (ஹிக் !) நிறைவேரிடும் (ஹிக் !)
என் ஆருயிரே நீ அருகில் வாராயடா

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி