Tuesday, May 20, 2008

தண்ணீர் எனும் ...

தண்ணீர் எனும் கண்ணாடி,
தழுவுது முன்னாடிபெண்ணின் உடலும் பேதை மனமும்
துள்ளுது சுகத்தில்தள்ளாடி தள்ளாடி தள்ளாடி
(தண்ணீர்)


முழங்கால் தழுவும் குழலோடு
மூடிய குவளை விழியோடு
இனிக்கும் செவ்வாய் இதழோடு
ஏனிந்த மீனுக்கு விளையாட்டு ?
ஏனிந்த மீனுக்கு விளையாட்டு ?
(தண்ணீர்)


பள்ளிக்கூடம் பல சென்று
படித்த கதைகள் பல உண்டு
இன்பத் தேனில் நீராடும்
இந்தக் கலைகள் எதில் உண்டு ?
இந்தக் கலைகள் எதில் உண்டு ?
(தண்ணீர்)


குளிர்ந்த காற்று நடிக்குதம்மா
கூவும் குயிலும் துடிக்குதம்மா
மயிலுக்குப் போர்வை வேண்டுமென்று
மனதும் உடலும் கேட்குதம்மா
கேட்குதம்மா கேட்குதம்மா
(தண்ணீர்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி