Friday, May 23, 2008

கண்களும் காவடிச் ...

கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்


ஆஅஹ்ஹாஅ..ஆஹ்ஹ்...ஆஹ்ஹாஅ...
ஊஹ்ஹ்ஹ்...ஊஹ்ஹ்..ஆஅஹ்ஹ்...ஆஹ்ஹ்ஹ்.. கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

மண்ணகமெல்லாம் நதி பாயட்டும்
மார்கழி துதி பாடி கதிர் சாயட்டும்
கதிர் சாயட்டும் கதிர் சாயட்டும்
என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்

கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்


தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்
தோள்களிலே வீரம் நடை போடட்டும்
நடை போடட்டும் வீரம் நடை போடட்டும்
கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்

கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி