Friday, November 12, 2010

நான் ஏழு வயசுலே..

இளநீ இளநீ இளநீ
நான் ஏழு வயசுலே எளனி வித்தவ
பதினேழு வயசிலே நிலைச்சு நின்னவ
ஏழை பணக்காரனுக்கும் வெறும் வேலை வெட்டிக்காரனுக்கும்
இந்த ஊருக்குள்ள யாவருக்கும்
வந்த தாகத்தை தீர்த்தவ
வாடிக்கை பிடிச்சவ
(இளநீ .....)

தேங்காயிலே பாலிருக்கும்
அத வாயார குடிச்சா சூடு தணிக்கும்
ஓடு மட்டும் தான் மேலிருக்கும்
அது கைத்தொழில் வேலைக்கு கைகொடுக்கும்
இளசானா தண்ணி இருக்கும்
முத்திப் போனா என்ன இருக்கும்
உப்பு கரிக்கும்
மக்கு பயலே
சப்புன்னு இருக்கும்
(நான் ஏழு வயசிலே ...)

இளனியிலே பலனிருக்கு
அது இருக்கிற எடத்த பொறுத்திருக்கு
இது தானே புது சரக்கு இங்கு
மத்தது எல்லாம் கடை சரக்கு
வெயில் நேரம் வேலை ஏறும்
வெலை ஏற சுவை ஏறும்
சூப்பி குடிச்சா
உள்ள தவிப்பும் மெல்ல குறையும்
இளநீ இளநீ இளநீ ...

தென்னை மரமும் பொண்ணு போல தான்
சுவை தருவதில் இரண்டும் ஒண்ணு போல
தென்னம் பாளையும் பொண்ண போல தான்
அது வெடிச்சா சிரிப்பது என்னைப் போல தான்
நல்லதுக்கு தான் பொண்ணு சிரிப்பா
பல்லை இளிச்சா ஒண்ணு குடுப்பா
தப்பு கணக்கு போட நெனச்சா
கன்னம் செவக்கும்
(நான் ஏழு வயசிலே )

இளநீ இளநீ இளநீ

Tuesday, November 2, 2010

இது நாட்டை காக்கும் கை

இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்த கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

அன்பு கை இது ஆக்கும் கை
இது அழிக்கும் கை அல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை
இது திருடும் கை அல்ல
நேர்மை காக்கும் கை
நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை
இது ஊழல் நீக்கும் தாழ்வை போக்கும்
சீர் மிகுந்த கை
(இது நாட்டை ..)

வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை
இது தளரும் கை அல்ல
சுத்த கை புகழ் நாட்டும் கை
இது சுரண்டும் கை அல்ல
ஈகை காட்டும் கை
மக்கள் சேவை ஆற்றும் கை
முள் காட்டை சாய்த்து தோட்டம் போட்டு
பேரெடுக்கும் கை
(இது நாட்டை ..)

உண்மைக் கை கவி தீட்டும் கை
கறை படிந்த கை அல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை
இது கெடுக்கும் கை அல்ல
மானம் காக்கும் கை
அன்னதானம் செய்யும் கை
சமநீதி ஒங்க
பேதம் நீங்க ஆள வந்த கை
(இது நாட்டை... )

Wednesday, September 15, 2010

எந்தன் இன்பம் ..

ஸ்ரீராமன் மீதிலே
பேராசை மீறியே
சீதை போல்
சூர்ப்பனகை உருமாறினாள்
நேராகவே
அந்த நிலை கண்ட ஜானகி
நெஞ்சம் கலங்கியே தடுமாறினாள்

எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள
வந்த நீலி யாரோ
வஞ்சனையாலே
வலை வீசியே
(எந்தன் இன்பம் ..)

மனம் நாடும் மாறனை
மணமாலை சூடி
மகிழ்வுடன்
வாழ்வில் ஒன்றாய்
காதல் கீதம் பாடி
இன்பம் பறிபோனதால்
ஏங்கி வாடுறேனே
(எந்தன் இன்பம் ..)

தாலிக் கட்டிக் கொண்டவளை
தனிமையிலே தவிக்க விடும்
பாதகி நீ
பெண்ணா ?பேயா ?
சொந்தமாய் என் நாதனோடு
உறவாடல் ஏனோ
எந்தன் வாழ்வை நாசம் செய்து
இன்பம் காணத்தானோ
உண்மையான காதலின் உள்ளம் வேகலாமோ

(எந்தன் உள்ளம் )

http://www.youtube.com/watch?v=MI3Py4y8dgc

Saturday, August 28, 2010

வாரேன் வழி பார்த்திருப்பேன் ...

வாரேன்
வழி பார்த்திருப்பேன்
வந்தால்
இன்பம் தந்திடுவேன்

என்ன தருவே ?
என்னை தருவேன்.

அந்தி மயங்குற நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்

போகவே மனசில
அப்ப இரேன்
இருக்கவும் முடியலையே

வரும் தை மாதம் பார்த்து
கையோடு சேர்த்து ஊர்கோலம் போனாலென்ன
இடை தாங்காத பாரம்
நான் கொஞ்சம் தாங்கி
உன்னோடு வந்தால் என்ன

செவ்வானம் பூத்தூவ
தென்பாங்கு தான் வாழ்த்த
கல்யாண நாள் காணும் அன்று
பொன்னான மாப்பிள்ளை பெண்ணோடு பாரென்று
ஊரெங்கும் பாராட்டும் நின்று
( அந்தி மயங்குற ...)

அடி இந்நேரம் உன்னை காணாத கண்கள்
பூவாகி நின்றேனடி
இந்த கட்டாத மாலை
உன் மார்பில் சேர்ந்து
தேனூர வந்தேனுங்க

சித்தாடை காத்தாட
செவ்வாழை கூத்தாட
கண்டாலும் என் பார்வை கொஞ்சும்
மச்சானின் நெஞ்சோடு
மையோடும் கண்ணோடு
போராடும் என் மேனி கெஞ்சும்
(அந்தி மயங்குற ..)

வாரேன்
நான் வாரேன்
போய் வாரேன்
நான் வாரேன்




Tuesday, August 24, 2010

தாரா அவர் வருவாரா ...

தாரா அவர் வருவரா
கண்கள் தவிப்பதை தான் அறிவாரா
தாரா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா

தனியே பேசி மனம் மகிழ்ந்தாடுவாரா
தணியா காதலுடன் உறவாடுவாரா
அழைப்பாரா அணைப்பாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
(என் தாரா ..)

இதய வீணைதனில் ஒலி மீட்டுவாரா
இன்ப காவியமாய் சுவையூட்டுவாரா
புதுமை ஊஞ்சலிலே தாலாட்டுவாரா
புகழ்வாரா மகிழ்வாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
(என் தாரா ..)

http://www.youtube.com/watch?v=k4qJrLGFIwY&feature=channel

Monday, August 23, 2010

காதலெனும் சோலையிலே ..

காதலெனும் சோலையிலே ராதே ராதே
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே
காதல் என்னும் காவியத்தை ராதே ராதே
ராதே ராதே ராதே
காதெலென்னும் காவியத்தை
உந்தன் கண்களிலே கண்டேனடி ராதே ராதே
(காதலென்னும் சோலையிலே ..)

என்னிதய வீணையிலே ராதே ராதே
இன்னொலியை மீட்டி விட்டாய் ராதே ராதே
உன்னழகின் போதையிலே ராதே ராதே
ராதே ராதே ராதே
உன்னழகின் போதையிலே
எந்தன் உள்ளம் வெறி கொள்ளுதடி ராதே ராதே
புன்னகையை வீசுகின்றாய் ராதே ராதே
மௌன போதனைகள் பேசுகின்றாய் ராதே ராதே

கன்னம் குழிவதிலே ராதே ராதே
எந்தன் எண்ணம் சுழலுதடி ராதே ராதே
(காதலென்னும் சோலையிலே ...)

Friday, August 20, 2010

பழத்தோட்டம் என் தோட்டம் ..

பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்

கனி தேடும் குயிலினமே
கதை சொல்லும் கிளியினமே
அடுத்தவரின் பொருள் மீது
ஆசை வைக்க கூடாது
வேல் சிரிக்குது கண்களிலே
கவன் இருக்குது கைகளிலே
பிழை செய்பவர் மீதினிலே
கல் எறிவேன் குருவிகளே
(பழத்தோட்டம் ..)

அதிகாரம் வரும்போது
தவறாத மனம் வேண்டும்
தலைக்கனங்கள் வந்தாலே
தான் வீழும் நிலை தோன்றும்
தினம் உழைப்பது பொதுவுடைமை
நம் உடல் இது தனி உடமை
நல்ல ஆளென பேரெடுத்தல்
அது அவரவர் குண நிலமை
விதை தூவ நிலம் தேவை
புவி ஆழ மதி தேவை
அக்கிரம் நீ செய்தால்
அதை கேட்கும் ஆள் தேவை
நான் துணிவுள இளம் மங்கை
எனை தொடுவது யாரிங்கே
விழி அசைவுகள் கவி கூறும்
அது ஆயிரம் பொருள் கூறும்
(பழத்தோட்டம் ...)

Wednesday, August 18, 2010

ஆடிய பாதங்கள் ..

ஆடிய பாதங்கள் அம்பலத்தில்
இங்கு ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில்
(ஆடிய)

பார்வதி ஓர் அங்கம் உன்னிடத்தில்
அவள் பார்க்கட்டும் தன்னைத்தான் என்னிடத்தில்
(ஆடிய )

கண்ணில் ஒன்றாய் இருக்க
திங்களாய் பிறந்தேனோ
கற்றை குழலிருக்க
கங்கையாய் நடந்தேனோ
கழுத்தில் சுழன்றிருக்க
பாம்பென பிறந்தேனோ
கையில் அமர்ந்திருக்க
மான் என பிறந்தேனோ
(ஆடிய.. )

கல்லை கனியென அருள்தரவரும் தில்லை
திருநகையினில் நடமிடும் உந்தன் வண்ணம்
எந்தன் விழிதன்னில் விளையாடிட
தக தகவென வரும் எழில் முகமொரு
தரிசனம் தந்தோம் தந்தோம் என்று
இங்கும் அங்கும் இன்றி
எங்கெங்கும் மின்னுகிற வடிவே
கொதித்திடும் உடல் உனது நினைவினில்
துடித்திடும் கரம் வருக அருகினில்
மதனினும் கொடியவன் விடும் ஒரு கணையினில்
நலிந்தும்
மெலிந்தும்
வருந்தும் எனக்கோர் துணையென
வழங்கும் சுகங்கள் அருளுக
(ஆடிய )

Saturday, August 14, 2010

ஆட வாங்க ...

ஆட வாங்க அண்ணாத்தே
அஞ்சாதீங்க அண்ணாத்தே
அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
(ஆட வாங்க )

தாளத்தோடு ஆடும் போது
தகிடு தத்தோம் ஆகாது
கால தூக்கி போடும் போதும்
கவனம் மாறக் கூடாது
ஆள பாத்து மயங்கி நின்னா
அபாயம் மிக பொல்லாது
அதனாலே
என்மேலே
பின்னாலே பழி சொல்லாதே
ஆட வாங்க
அய்யா ஆட வாங்க
சும்மா ஆட வாங்க
( ஆட வாங்க)

ஆட்டம் போட்ற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு
சும்மா என்னே சோள கொல
பொம்ம போல எண்ணாதே
எம்மா எல்லாம் பாடி ஆடி
சிரிச்சு கேலி பண்ணாதே
கும்மாளமும் குலுக்கு மினுக்கும்
செல்லாது இவர் முன்னாலே
அதனாலே இனிமேலே
முன்போலே
நீ துள்ளாதே
ஆட்டம் போட்ற
அடி ஆட்டம் போட்ற அம்மாளு
நம்மகிட்டே ஆட்டம் போட்ற
ஆட்டம் போட்ற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு

கவனமாக ஆடிவிட்டா
கண்ணாலமும் உண்டாகும்
காரியத்தை கோட்டை விட்டா
கையும் காலும் ரெண்டாகும்
சமயத்திலே தப்பா விட்டா
ஜம்பமெல்லாம் வீணாகும்
அதனாலே
என்மேலே
பின்னாலே பழி சொல்லாதே
(ஆட வாங்க..)

ஆட்டம் போட்ற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு

ஏமாற்றம் தானா ..

ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே
(ஏமாற்றம்)

கோமகனை மணந்து
குலவி மகிழ்தோம் என்று
கொண்ட என் ஆசைக்கு
தண்டனையோ
(ஏமாற்றம்)

பசிக்கு உணவு தந்து
புசிக்கும் முன்னே
தட்டி பறிப்பது அழகாமோ
குழல் இசைக்கு மயங்கி வரும்
பசுவை கல்லால் அடித்தல்
இரக்கத்தின் செயலாமோ
( இனி ஏமாற்றம் )

கசக்கி ஏறியவோ
மலர் கொய்வார்
பெண்மேல் களங்கம் சுமத்தவோ
மணம் செய்வார்
உங்கள் நிஜ அன்பை ருசி காண
நினைதேங்கும்
என் துயிர் நீங்குமா
பெண் மனம் தாங்குமோ
(ஏமாற்றம் )

நலங்கிட்டு பார்ப்போமடி

நலங்கிட்டு பார்ப்போமடி
ராணிக்கு அலங்காரம் செய்வோமடி
வாடி
குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால்
நம்மை குருடென்று சொல்லாரோடி
காண்பவர் குருடென்று சொல்லாரோடி
போடி
சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும்
எழில் பெற காண்போமடி ராணியால்
ஒளி பெற காண்போமடி
வாடி
(நலங்கிட்டு)

களங்கமில்லா மதிவதனித்திலே களிப்பினை காண்போமடி
கல்யாண சிரிப்பினை காண்போமடி
வாடி
(நலங்கிட்டு)

Friday, June 4, 2010

அழகான பெண்மானைப் பார்...

அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்
எந்நாளும்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்


மீன் போலும் கண்கள்
வெண்சிலை போலும் மேனி
சேர்ந்தே சுகமாகுதே
தினம்
தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
(அழகான பெண்மானை...)


வாடாத ரோஜா
உன் மடிமீதில் ராஜா
மனமே தடை ஏனையா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
(அழகான பெண்மானை ...)


பொன்னான காலம் வீணாகலாமோ
துணையோடு நீ உலகாள வா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்
(அழகான பெண்மானை ...)


தானாக வந்து உன் அருகே நின்றாடும்
அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்

இன்பம் ...

ஆ ஆ ஆ ஹஹஹ்ஹா ஆ ஆ
இன்பம் ...
இரவின் அமைதியிலே
தென்றல் இனிமையிலே


ஆ .......
இன்பம்
வண்ண நிலவினிலே
இன்பம் பேரின்பம்

இசையே வீணையை மீட்டும்
என் இசையே வீணையை மீட்டும்
சொல்ல எழில் மிகும் வீணை இசைத்தே
ஒரு அன்பு முத்தம் கொடுப்பேன்

இன்பம் ,
இக வாழ்வினிலே
எனதழியா பேரின்பம்

என் எண்ணம் கைகூடும்
பொன்னான நாளிதுவே
நீ என்னை பிரியாமல் இருப்பாயா

Thursday, June 3, 2010

கண்ணின் கருமணியே ...

கண்ணின் கருமணியே கலாவதி
இசைசேர் காவியம் நீ,
கவிஞனும் நானே

எண்ணம் நிறைவதனால்
எழில்சேர் ஓவியம் நீ மதனா
(கண்ணின்...)


நல்ல உயிர் நீயே
துடிக்கும் நாடியும் நானே

பஞ்ச பாடல் நீரே என் மதனா
பாவை ரதியும் நானே
(கண்ணின் ...)


ஊனமில்லா நல்லழகே
ஊறுசுவையே கலாவதி

அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
(கண்ணின் ...)


ஆடும் வாழ்க்கை ஊஞ்சலிலே
ஜோடி கிளியென வாழ்வோமே
நாம் வாழ்வோமே
ஜோடி கிளியென வாழ்வோமே

Saturday, February 20, 2010

நடக்கும் என்பார்

நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
(நடக்கும் என்பார் நடக்காது )


தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே
துயர் இங்கே
(நடக்கும் என்பார் நடக்காது )


அறுந்து போன உறவறியாமல்
அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே
அறுந்து போன உறவறியாமல்
அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே
ஆசை கயிறு அறுந்ததாலே
அடைந்து கிடக்கும் பெண் இங்கே
ஆசை கயிறு அறுந்ததாலே
அடைந்து கிடக்கும் பெண் இங்கே
பெண் இங்கே
(நடக்கும் என்பார் நடக்காது )

கலங்காதிரு மனமே

கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே...


இந்த பாடல் நான் குறிப்பிட்டபடி கன்னித்தாய் படத்தில் வரும் பாடல் அல்ல . இது "கன்னியின் காதல்" திரைப்படத்தில் இடம் பெற்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் முதல் திரைப்பாடல் .
இதை சுட்டிகாட்டிய திரு .இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு என் நன்றி .

Tuesday, February 9, 2010

குத்தாலம் அருவியிலே

குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா
மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா


ஒடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
ஒடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
கொட்டும் பனி கடலுக்குள்ளே
குதிச்சதுப் போல் இருக்குது
கொட்டும் பனி கடலுக்குள்ளே
குதிச்சதுப் போல் இருக்குது


பட்டுப்போல் ரோஜாப்பூவு பனித்துளியில் குளிக்குது
பறக்கும் வண்டுகள் எல்லாம் தேனில் குளிக்குது
கட்டறுந்த இளம் மனசு காதலிலே குளிக்குது
காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது
காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா


சுட்டெடுக்கும் வேர்வையிலே ஒரு மனசு குளிக்குது
காற்றை புடிச்சிக்கிட்டு தண்ணீரில் மிதக்குது
உல்லாச கோட்டைகட்டி உச்சியில கொடியும் கட்டி
பல்லாண்டு பாடி ஒண்ணு களிக்குது
உல்லாச கோட்டைகட்டி உச்சியில கொடியும் கட்டி
பல்லாண்டு பாடி ஒண்ணு களிக்குது
பன்னீர ஊத்தி ஊத்தி குளிக்குது
த்சோ ..த்சோ ..த்சோ ..
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா


தங்கம் போல் உடம்பை தொட்டா
தனி மயக்கம் பிறக்குது
தங்கம் போல் உடம்பை தொட்டா
தனி மயக்கம் பிறக்குது
சிங்கார கை பட்டா சிலுசிலுப்பாக இருக்குது
சிங்கார கை பட்டா சிலுசிலுப்பாக இருக்குது


குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குது
மனசும் மயங்குது சுகமும் கிடைக்குது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குது

உண்மையை வெளி இட்டு

உண்மையை வெளி இட்டு
உணர்ச்சிகளை கருக விட்டு
பெண்மைக்கோர் அணிகலமாய்
பிள்ளை நலம் காத்திருந்தாள்
பிள்ளை நலம் காத்திருந்தாள்
கதை முடியும் முன்னாலே
கண்ணை மூடினாள்
சொந்த கடமையிலே
தாய் குலத்தின் தெய்வம் ஆகினாள்
வாழ்வின் கதை முடியும் முன்னாலே
கண்ணை மூடினாள்
சொந்த கடமையிலே
தாய் குலத்தின் தெய்வம் ஆகினாள்

பதி முகத்தை பார்த்திருக்கும்
விதவை ஆகினாள்
இவள் பதில் அளிக்க முடியாத
கேள்வி ஆகினாள்
விதி வகுத்த பாதையிலே
விரைந்து ஓடினாள்
உண்மை வெளியாகும் நேரத்திலே
ஊமை ஆகினாள்


இவள் தெய்வத்தாய்
இவள் தெய்வத்தாய்
இவள் தெய்வத்தாய்

கண்ணிரண்டும் தேவை இல்லை

கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
உண்மை அன்பு இருந்தால் போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா
உண்மை அன்பு இருந்தால் போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா
(கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு)

கண்ணில்லா குமுத மலர் இரவினிலும்
வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா
கண்ணில்லா குமுத மலர் இரவினிலும்
வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா
சின்ன சின்ன இதழ் விரித்து
சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது
எண்ணத்தில் இன்பம் கொண்டு இருப்பதில்லையா
சின்ன சின்ன இதழ் விரித்து
சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது
எண்ணத்தில் இன்பம் கொண்டு இருப்பதில்லையா
(கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு )


நெஞ்சில் எழும் அலைகளுக்கு கண்கள் உண்டு
அதில் நீந்தும் உயிர் கனவுக்கெல்லாம்
செவிகளும் உண்டு
நெஞ்சில் எழும் அலைகளுக்கு கண்கள் உண்டு
அதில் நீந்தும் உயிர் கனவுக்கெல்லாம்
செவிகளும் உண்டு
அன்பு மனம் படைத்தவர்கள்
இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்
எங்கிருந்த போதும் அவை அறிந்து சொல்லாதா
அன்பு மனம் படைத்தவர்கள்
இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்
எங்கிருந்த போதும் அவை அறிந்து சொல்லாதா
(கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு )

Monday, February 8, 2010

எருமைக் கன்னுக்குட்டி

ஊருக்கு உழைப்பவண்டி
ஒரு குற்றம் அறியானடி
உதை பட்டு சாவானடி
உதை பட்டு சாவானடி


எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி

நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
சொல்லப்போனா வெட்கக்கேடு
சொல்லப்போனா வெட்கக்கேடு


எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி


ஏய்ச்சுப் பொழைக்கிறவன்
ஏழடுக்கு மாளிகையில்
எகத்தாளம் போடுறானே...
அவன் பேச்சை மறுக்கிறவன்
பிச்சை எடுக்கிறானே....

எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி


நாட்டுக்குத் தலைவனென்று
நம்பும்படி பேசிவிட்டு
வேணசெல்வம் வாரியே போவாரடி...
நாடு செழிக்க எண்ணி
நாளெல்லாம் வேலை செய்யும்
ஏழைக்குக் காலமில்லே
எவனெவனோ வாழுகிறானே


எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி


(நன்றி :http://sivagnanamji.blogspot.com/2006/07/blog-post.html)

பம்பை உடுக்கை கொட்டி

கொல்லி மலை காட்டுக்குள்ளே
குள்ள நரி கூட்டமடி ....
குள்ள நரி கூட்டத்திலே
புள்ளி மான் நிக்கிதடி
கன்னி வெச்சு வல விரிச்சா ...
சின்ன மான் சிக்குமடி
போடு

பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி
ஹோ ஹோ ஹோ .... ஹோய்
பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு அச்சாரம் சொல்லி
ஹோ ஹோ ஹோ ...

கச்சை சலங்கை கட்டி
கை தாளம் மேளம் கொட்டி
கச்சை சலங்கை கட்டி
கை தாளம் மேளம் கொட்டி
அச்சாரம் ஏற்று கொள்ளும் ஆச மச்சான்
எந்தன் ஆட்டத்தே பாத்து தானே நேசம் வெச்சான்


பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
சிங்கக்குட்டி போலே ஆடும் செவத்த மச்சானே
இந்த சேலைக்கேத்த ஜோடி நீயே
பாடு மச்சானே

கன்னகோல் போடுவதற்கும்
காவல் போர் செய்வதற்கும்
தந்தன தையா தானா தந்தன
தந்தன தையா தானா தந்தன
கன்னகோல் போடுவதற்கும்
காவல் போர் செய்வதற்கும்
களம் என்று பேரு வந்த காரணம் என்ன
கட்டு கதை எல்லாம் அளக்காமல் கூறடி நின்னு
ராத்திரி நேரம் யாரும் பார்த்திடா வண்ணம்
ராத்திரி நேரம் யாரும் பார்த்திடா வண்ணம்
அந்த ரகசியம் நடப்பதாலே
பேருமே வைத்தார்
அந்த ராஜா தான் களம் என்று ஊரிலே சொன்னார்


பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
சிங்கக்குட்டி போலே ஆடும் செவத்த மச்சானே
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி


ஏழ் -எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகிவிட்டு
தந்தன தையா தானா
தந்தன தந்தன தையா தானா தந்தன
ஏழ் -எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகிவிட்டு
வாழாம வாடுறாங்க ரோட்டுல நின்னு
அந்த வாட்டத்த தீர்பதற்கு கூறனும் ஒண்ணு
கணக்காக ஒண்ணு ரெண்டு கச்சிதமாக பெத்து
கணக்காக ஒண்ணு ரெண்டு கச்சிதமாக பெத்து
படுக்கை தனை சுத்தி வைக்க வேணும் மச்சானே
பின்னாலே அதுக்காக சொத்து சுகம் சேரும் மச்சானே


பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும்
சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி

காலையில் தோன்றி நின்று
மாலையில் போய் மறையும்
தந்தன தையா தானா
தந்தன தந்தன தையா தானா தந்தன
காலையில் தோன்றி நின்று
மாலையில் போய் மறையும்
சூரியன் செயலும் என்ன கொஞ்சம் சொல்லடி
அந்த சூட்சுமத்த மட்டும்
எந்தன் காதில் சொல்லடி
பிறப்பதெல்லாம் இறக்கும் பேர் உண்மை தத்துவத்தை
பிறப்பதெல்லாம் இறக்கும் பேர் உண்மை தத்துவத்தை
சிறப்பாக சூரியனும் சொல்லும் மச்சானே
இந்த சேதியிலே சாமி கூட சேரும் மச்சானே


பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி
ஒஹ் ஹோ ஹோ .....

Saturday, January 16, 2010

இவர் போல யாரென்று ......