Thursday, May 22, 2008

தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் .....

தென்றலிலாடும் கூந்தலில்ககண்டேன்
மழைக்கொண்ட மேகம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
இனி என்ன நாணம், இனி என்ன நாணம்

மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பாவை உடல் பார்க்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ
பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வர காத்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்து
பார்த்த விழி பூத்திருந்தேன்


ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும்
காதல் மனம் பார்ப்பதுண்டோ
கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலை வரை கேட்பதுண்டோ
காலை வரை கேட்பதுண்டோ

கற்பகத்து சோலையிலே
பூத்த மலர் நீ அல்லவோ
விழிஎன்னும் கருவண்டு
பாட வந்த பாட்டென்னவோ
காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலே
சுகம் என்ன சுகமென்று
மோஹன பண் பாடியதோ
மோஹன பண் பாடியதோ

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி