Saturday, February 20, 2010

நடக்கும் என்பார்

நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
(நடக்கும் என்பார் நடக்காது )


தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே
துயர் இங்கே
(நடக்கும் என்பார் நடக்காது )


அறுந்து போன உறவறியாமல்
அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே
அறுந்து போன உறவறியாமல்
அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே
ஆசை கயிறு அறுந்ததாலே
அடைந்து கிடக்கும் பெண் இங்கே
ஆசை கயிறு அறுந்ததாலே
அடைந்து கிடக்கும் பெண் இங்கே
பெண் இங்கே
(நடக்கும் என்பார் நடக்காது )

கலங்காதிரு மனமே

கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே...


இந்த பாடல் நான் குறிப்பிட்டபடி கன்னித்தாய் படத்தில் வரும் பாடல் அல்ல . இது "கன்னியின் காதல்" திரைப்படத்தில் இடம் பெற்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் முதல் திரைப்பாடல் .
இதை சுட்டிகாட்டிய திரு .இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு என் நன்றி .

Tuesday, February 9, 2010

குத்தாலம் அருவியிலே

குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா
மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா


ஒடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
ஒடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
கொட்டும் பனி கடலுக்குள்ளே
குதிச்சதுப் போல் இருக்குது
கொட்டும் பனி கடலுக்குள்ளே
குதிச்சதுப் போல் இருக்குது


பட்டுப்போல் ரோஜாப்பூவு பனித்துளியில் குளிக்குது
பறக்கும் வண்டுகள் எல்லாம் தேனில் குளிக்குது
கட்டறுந்த இளம் மனசு காதலிலே குளிக்குது
காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது
காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா


சுட்டெடுக்கும் வேர்வையிலே ஒரு மனசு குளிக்குது
காற்றை புடிச்சிக்கிட்டு தண்ணீரில் மிதக்குது
உல்லாச கோட்டைகட்டி உச்சியில கொடியும் கட்டி
பல்லாண்டு பாடி ஒண்ணு களிக்குது
உல்லாச கோட்டைகட்டி உச்சியில கொடியும் கட்டி
பல்லாண்டு பாடி ஒண்ணு களிக்குது
பன்னீர ஊத்தி ஊத்தி குளிக்குது
த்சோ ..த்சோ ..த்சோ ..
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா


தங்கம் போல் உடம்பை தொட்டா
தனி மயக்கம் பிறக்குது
தங்கம் போல் உடம்பை தொட்டா
தனி மயக்கம் பிறக்குது
சிங்கார கை பட்டா சிலுசிலுப்பாக இருக்குது
சிங்கார கை பட்டா சிலுசிலுப்பாக இருக்குது


குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குது
மனசும் மயங்குது சுகமும் கிடைக்குது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குது

உண்மையை வெளி இட்டு

உண்மையை வெளி இட்டு
உணர்ச்சிகளை கருக விட்டு
பெண்மைக்கோர் அணிகலமாய்
பிள்ளை நலம் காத்திருந்தாள்
பிள்ளை நலம் காத்திருந்தாள்
கதை முடியும் முன்னாலே
கண்ணை மூடினாள்
சொந்த கடமையிலே
தாய் குலத்தின் தெய்வம் ஆகினாள்
வாழ்வின் கதை முடியும் முன்னாலே
கண்ணை மூடினாள்
சொந்த கடமையிலே
தாய் குலத்தின் தெய்வம் ஆகினாள்

பதி முகத்தை பார்த்திருக்கும்
விதவை ஆகினாள்
இவள் பதில் அளிக்க முடியாத
கேள்வி ஆகினாள்
விதி வகுத்த பாதையிலே
விரைந்து ஓடினாள்
உண்மை வெளியாகும் நேரத்திலே
ஊமை ஆகினாள்


இவள் தெய்வத்தாய்
இவள் தெய்வத்தாய்
இவள் தெய்வத்தாய்

கண்ணிரண்டும் தேவை இல்லை

கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
உண்மை அன்பு இருந்தால் போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா
உண்மை அன்பு இருந்தால் போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா
(கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு)

கண்ணில்லா குமுத மலர் இரவினிலும்
வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா
கண்ணில்லா குமுத மலர் இரவினிலும்
வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா
சின்ன சின்ன இதழ் விரித்து
சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது
எண்ணத்தில் இன்பம் கொண்டு இருப்பதில்லையா
சின்ன சின்ன இதழ் விரித்து
சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது
எண்ணத்தில் இன்பம் கொண்டு இருப்பதில்லையா
(கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு )


நெஞ்சில் எழும் அலைகளுக்கு கண்கள் உண்டு
அதில் நீந்தும் உயிர் கனவுக்கெல்லாம்
செவிகளும் உண்டு
நெஞ்சில் எழும் அலைகளுக்கு கண்கள் உண்டு
அதில் நீந்தும் உயிர் கனவுக்கெல்லாம்
செவிகளும் உண்டு
அன்பு மனம் படைத்தவர்கள்
இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்
எங்கிருந்த போதும் அவை அறிந்து சொல்லாதா
அன்பு மனம் படைத்தவர்கள்
இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்
எங்கிருந்த போதும் அவை அறிந்து சொல்லாதா
(கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு )

Monday, February 8, 2010

எருமைக் கன்னுக்குட்டி

ஊருக்கு உழைப்பவண்டி
ஒரு குற்றம் அறியானடி
உதை பட்டு சாவானடி
உதை பட்டு சாவானடி


எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி

நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
சொல்லப்போனா வெட்கக்கேடு
சொல்லப்போனா வெட்கக்கேடு


எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி


ஏய்ச்சுப் பொழைக்கிறவன்
ஏழடுக்கு மாளிகையில்
எகத்தாளம் போடுறானே...
அவன் பேச்சை மறுக்கிறவன்
பிச்சை எடுக்கிறானே....

எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி


நாட்டுக்குத் தலைவனென்று
நம்பும்படி பேசிவிட்டு
வேணசெல்வம் வாரியே போவாரடி...
நாடு செழிக்க எண்ணி
நாளெல்லாம் வேலை செய்யும்
ஏழைக்குக் காலமில்லே
எவனெவனோ வாழுகிறானே


எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி


(நன்றி :http://sivagnanamji.blogspot.com/2006/07/blog-post.html)

பம்பை உடுக்கை கொட்டி

கொல்லி மலை காட்டுக்குள்ளே
குள்ள நரி கூட்டமடி ....
குள்ள நரி கூட்டத்திலே
புள்ளி மான் நிக்கிதடி
கன்னி வெச்சு வல விரிச்சா ...
சின்ன மான் சிக்குமடி
போடு

பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி
ஹோ ஹோ ஹோ .... ஹோய்
பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு அச்சாரம் சொல்லி
ஹோ ஹோ ஹோ ...

கச்சை சலங்கை கட்டி
கை தாளம் மேளம் கொட்டி
கச்சை சலங்கை கட்டி
கை தாளம் மேளம் கொட்டி
அச்சாரம் ஏற்று கொள்ளும் ஆச மச்சான்
எந்தன் ஆட்டத்தே பாத்து தானே நேசம் வெச்சான்


பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
சிங்கக்குட்டி போலே ஆடும் செவத்த மச்சானே
இந்த சேலைக்கேத்த ஜோடி நீயே
பாடு மச்சானே

கன்னகோல் போடுவதற்கும்
காவல் போர் செய்வதற்கும்
தந்தன தையா தானா தந்தன
தந்தன தையா தானா தந்தன
கன்னகோல் போடுவதற்கும்
காவல் போர் செய்வதற்கும்
களம் என்று பேரு வந்த காரணம் என்ன
கட்டு கதை எல்லாம் அளக்காமல் கூறடி நின்னு
ராத்திரி நேரம் யாரும் பார்த்திடா வண்ணம்
ராத்திரி நேரம் யாரும் பார்த்திடா வண்ணம்
அந்த ரகசியம் நடப்பதாலே
பேருமே வைத்தார்
அந்த ராஜா தான் களம் என்று ஊரிலே சொன்னார்


பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
சிங்கக்குட்டி போலே ஆடும் செவத்த மச்சானே
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி


ஏழ் -எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகிவிட்டு
தந்தன தையா தானா
தந்தன தந்தன தையா தானா தந்தன
ஏழ் -எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகிவிட்டு
வாழாம வாடுறாங்க ரோட்டுல நின்னு
அந்த வாட்டத்த தீர்பதற்கு கூறனும் ஒண்ணு
கணக்காக ஒண்ணு ரெண்டு கச்சிதமாக பெத்து
கணக்காக ஒண்ணு ரெண்டு கச்சிதமாக பெத்து
படுக்கை தனை சுத்தி வைக்க வேணும் மச்சானே
பின்னாலே அதுக்காக சொத்து சுகம் சேரும் மச்சானே


பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும்
சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி

காலையில் தோன்றி நின்று
மாலையில் போய் மறையும்
தந்தன தையா தானா
தந்தன தந்தன தையா தானா தந்தன
காலையில் தோன்றி நின்று
மாலையில் போய் மறையும்
சூரியன் செயலும் என்ன கொஞ்சம் சொல்லடி
அந்த சூட்சுமத்த மட்டும்
எந்தன் காதில் சொல்லடி
பிறப்பதெல்லாம் இறக்கும் பேர் உண்மை தத்துவத்தை
பிறப்பதெல்லாம் இறக்கும் பேர் உண்மை தத்துவத்தை
சிறப்பாக சூரியனும் சொல்லும் மச்சானே
இந்த சேதியிலே சாமி கூட சேரும் மச்சானே


பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி
ஒஹ் ஹோ ஹோ .....