Wednesday, May 21, 2008

வளர்வது கண்ணுக்கு ....

வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது
வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது


மலையில் நதிகள் பிறக்கும்
அது கடலில் சென்றே கலக்கும்
மனதில் ஆசைகள் பிறக்கும்
அந்த மயக்கம் உறவை வளர்க்கும்
ஆஹாஹாஹா....


வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது


பறவைக்கு வீதி வானம்
இந்தப் பாவைக்கு வீதி நாணம்
உறவுக்கு வீதி உள்ளம்
அதன் உயர்வுக்கு வீதி எண்ணம்
ஆஹாஹாஹா....

வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது


இதழோ மதுத் தேன் கிண்ணம்
அதன் எழிலைக் கூட்டுது கன்னம்
இளமை தீட்டிய வண்ணம்
அது உமக்கே கிடைப்பது திண்ணம்


வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது
வளர்வது கண்ணுக்குத் தெரியல்லே
கொடி வளருது
மலர்வது நெஞ்சுக்குத் தெரியல்லே
காதல் மலருது

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி