Monday, September 19, 2016

எத்தனை எத்தனை இன்பமடா

எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா

மரம் படைத்தான்
ஒரு கொடி  படைத்தான்
அந்த மரத்தை தழுவி அதை படரவிட்டான்
படரவைத்தான்
மலர் படைத்தான்
நறுமணம் கொடுத்தான்
அதில் வடியும் தேனையும் உனக்களித்தான்
(எத்தனை )

உன்னை படைத்தான்
ஒரு பெண்ணை படைத்தான்
காதல் உறவு கொள்ளவும்
வழி வகுத்தான்
வழி வகுத்தான் 
பொன்னை  படைத்தான்
பல பொருள் படைத்தான்
இந்த பூமியில் சொர்க்கம் காண வைத்தான்
(எத்தனை )

கண் கொடுத்தான்
நீ காண்பதற்கு
பல காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு
களிப்பதற்கு
மனம் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு
நல்ல மதி கொடுத்தான்
எண்ணிப் பார்ப்பதற்கு
(எத்தனை )

ஆஹஹ ஆஹ்ஹா ஆஹாஹா
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
ஹும் ஹும் ஹும்

https://www.youtube.com/watch?v=VU3HplCEgjM