Thursday, November 12, 2009

நமது வெற்றியை நாளை ...

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் பொருள் தேடி,
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
இந்நாட்டில் மலரும் சமநீதி.
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
இயற்கை தந்த பரிசாகும்,
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

Wednesday, November 11, 2009

முத்து போலே ....

முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
(முத்து போலே )

கஷ்டம் தீர்ந்தது, உன்னாலே கவலை ஓய்ந்தது
கண்மணி உன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது
தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது
உன்னை பெற்ற அன்னை பெருமை பெறும் வேளை வந்தது
(முத்து போலே)

கட்டித் தங்கமே என் ஆசை கனவு யாவுமே
கனிந்து பிள்ளை உருவில் வந்த செல்வமே
கண்ணை காக்கும் இமையைப் போல் உன்னை வாழ்விலே
காலமெல்லாம் காத்திருந்து மகிழ்வோமடா
(முத்து போலே )