Tuesday, December 13, 2011

அன்னமிட்டகை

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை


இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன்  உழைப்பாலே உண்ண வேண்டும்
இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்


பாடுபட்ட கை அது பாட்டாளி கை
பாடுபட்ட கை அது பாட்டாளி கை
செய்யும் தொழிலை தெய்வமாக
நிலைநிறுத்தி உடல் வருத்தி


அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை


பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து
பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க
பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து
பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க


வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி


அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை





இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

Saturday, July 30, 2011

ஏய் மச்சான்

ஏய் மச்சான்

என் பொன்னு மச்சான்

என்னை தொடாதே

ஏய் பொண்ணு

அடி என்னா சொன்னே

வாடி முன்னாலே



கைய புடிச்சானே அய்யா கைய புடிச்சானே

காலையிலே ஒருத்தன் வந்து கையை புடிச்சானே

கைய கொடுத்தாயா நீ

கைய கொடுத்தாயா

காதலிலே கண் மயங்கி கட்டிப்புடிச்சாயா ?

கால புடிச்சானே

மெதுவா மெதுவா

ஏதோ கணக்கு வச்சு

காரியத்தோட கால புடிச்சானே

நெஞ்ச தொட்டானே

மெதுவா மெதுவா

நான் நீள  மூச்சு வாங்க வாங்க

நெஞ்ச தொட்டானே

கால குடுத்தாயா அடி நீ

காத்திருக்க மனமில்லாமே

கையில் விழுந்தாயா

நெஞ்ச தொட்டானா

அடி ஒன்

நெஞ்ச தொட்டானா

நெனைச்சி பாக்க முடியலையே

நெருங்கி தொட்டானா

ஏய் பொன்னு

நீ என்னா சொன்னே

என்னை தொடாதே



சேலை எடுத்தானே

பாவி சேலை எடுத்தானே

சேலையோடு ரவிக்கையையும் சேர்த்து எடுத்தானே

நாணங் கெட்டவளே

ஒன்னால் நாலுங் கேட்டு போகுமுன்னே

புத்தி வந்ததடி

அடி போதுமடி

ஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி

மச்சான் மச்சான் ...



கையை புடிச்சான்

வளையல் போட

கால புடிச்சான்

சலங்கை கட்ட

நெஞ்சை தொட்டான்

நோயை பார்க்க

சேலை எடுத்தான் சலவை செய்ய



அடி போடி கண்ணு

எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே

சும்மா போக விட்டு நடிச்சேண்டி

கோபத்தை போல

அடி போடி கண்ணு

எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே

Saturday, June 11, 2011

காமுகர் நெஞ்சில் நீதியில்லை

காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு  தாயென்றும் தாரமென்றும்  பேதமில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை


தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை
கொலை  செய்வதை போல் ஒரு இன்பமில்லை
மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை
மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை  
(காமுகர் நெஞ்சில் ..)


காவியம் போற்றுகிற வீரமெல்லாம்
வளர் காவிரி மண்டல  செல்வமன்றோ
தீரர்களாலே சீர்படும் நாடும்  
தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ
(காமுகர் நெஞ்சில் ...)






 

Friday, June 10, 2011

அடக்கு மனதை அடக்கு

அடக்கு ...ம்....
அடக்கு மனதை அடக்கு
அகந்தை வழியில் அலையும்  மனதை அடக்கு
அடக்கு

ஆபத்துக்கு உதவி செய்தால்  பாவமுமில்லை
வீண் ஆணவத்தை வளர்ப்பதனால் லாபமுமில்லை
அன்புக்காக  ஏங்குவதில் கேவலமில்லை   
அதை அடுத்தவர்க்கு கொடுப்பதனால் கெடுதலுமில்லை
(அடக்கு ....)


ஒருவருக்கு ஒருவர் துணை என்பது உண்மை
இந்த உண்மையை  நீ ஒப்புக் கொண்டால்
உலகுக்கு நன்மை
பொறுமையுடன்  கருணை சேர்ந்து  
பிறப்பது  பெண்மை
இதை  புரிந்து   நடக்கும் பெண்கள் நெஞ்சம்
பாலினும் வெண்மை
(அடக்கு ...)


ஆண்கள் என்றும் பெண்கள் என்றும்
தனித்தனியாக
அந்த ஆண்டவன் ஏன் பிரித்து வைத்தான்
மிக தெளிவாக
ஜகத்தினிலே ஆணும் பெண்ணும்  ஓர் உயிராக 
இங்கே சேர்ந்து வாழும் தத்துவத்தை 
சொல்வதற்காக  
(அடக்கு ... )


Thursday, June 9, 2011

நீங்க நெனச்சா நடக்காதா




நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

ஒரு மாதிரியா இருக்கு

அந்தி பொழுது வந்தா எனக்கு

கண் பேசுது ஜாடையிலே

பெண் வாடுது ஆசையிலே

(நீங்க நெனைச்சா )



ஆத்து நீரோடு அலையிருக்கும்

அலையை அணைத்திட கரையிருக்கும்

கரையின் ஓரத்தின் கொடியிருக்கும்

கொடியை தழுவிட செடியிருக்கும்

ஆ தனிமையில் இருக்கையில் குளிருது

எனக்கொரு துணை எங்கே

(நீங்க நெனச்சா ..)



நீலப் பூப்போட்ட சேலை கட்டி

நெத்தி நெறைய பொட்டு  வச்சேன்

காலம் பூராவும் காத்திருக்கேன்

காதல் போகாம பார்த்திருக்கேன்

ஆ அடிக்கடி துடிக்குது துவழுது

உனக்கிது புரியல்லே

(நீங்க நெனச்சா )



நேத்து நான் வச்ச சின்ன மரம்

பூத்து குலுங்குது தோட்டத்திலே

பூத்து நாளான கன்னி மரம்

காய்ச்சு கனிந்திட நேரம் வல்லே

ஆ மயக்கும் கெறக்கமும் வருகுது

இதுக்கொரு வழியென்ன

(நீங்க நெனச்சா ...)















http://www.mp3glitz.com/song-list.php?name=Kanavan&cate=MGR - Film

Wednesday, May 4, 2011

இங்கு நல்லா இருக்கணும் ...

இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்
நாம ஒண்ணோடு ஒண்ணாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்

ஊரும் உறவும் தொணை இருந்தா
ஒசந்து வாழலாம்
எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா
உலகம் ஏசலாம்
காத்தும் மழையும் யாருக்கும்தான்
பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
கருத்து இருக்குது


ஏத்தம் போட்டு ஊத்து நீரை ஏறச்சது யாரு
நெலத்த ஏறு பூட்டி உழுது போட்டு வெதச்சது யாரு
சோத்து கவலை தீர்த்து வைக்க
ஒழச்சது யாரு ?
அந்த சமுதாயம் காலமெல்லாம் சிரிக்கணும் பாரு


உச்சி வெயில் சூடு பட்டு
ஒடம்பு கருத்தது
இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு
கண்கள் சிவந்தது
கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற
மேனியை பாரு
நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு
கூறடி கூறு

Monday, April 25, 2011

உண்மையின் சிரிப்பை ...

உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது
ஹஹஹா ஹஹஹா ஒஹொஹொ

சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே
சிரிப்பதும் கிடையாது
பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக
வாழ்வதும் கிடையாது
சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால்
உலகம் பழிக்காது
பெரும் தொல்லையில் சிரிக்கும்
தைரியம் இருந்தால்
துன்பங்கள் நெருங்காது
(உண்மையின் சிரிப்பை ...)


ஊர்களை கொளுத்தும் கொடியவர் செயலை
மிருகமும் செய்யாது
ஏழை குடும்பங்கள் அழுது சிந்திய கண்ணீர்
சும்மா போகாது
அடிக்கடி மாறும் மனிதர்கள் கூறும்
அறிவுரை செல்லாது
இங்கே அடைக்க வேண்டியவர் கணக்கை எடுத்தால்
சிறையே கொள்ளாது
ஹஹஹா ஹஹஹா ஓஹொ ஹோ

எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது

Saturday, February 26, 2011

ஆனந்தமாய் வாழ வேண்டுமே

மாநிலத்தின் இருள் நீங்க
வானில் வரும் ஜோதி
மன இருளும் நீங்கிடவே
அருள்வாய் நீயே

ஆனந்தமாய் வாழ வேண்டுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேண்டுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் வலியுமே
அகல வேண்டுமே
(ஆனந்தமாய்...)


அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே
மக்கள் அகத்தின் அழுக்கு என்றும் கோபதாபமே
(ஆனந்தமாய் ..)


ஒடுங்கி கிடைத்த நெஞ்சின் உணர்சசி கொஞ்சவே
உயிரை அள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே
உந்தன் உள்ளம் கண்ட கனவுகளும் பலித்த வாயிலே
கல்வி அறிவு மூட்டியே
(ஆனந்தமாய் ...)


மலர்ந்த முகத்தை காட்டும் சிவந்த ரோஜாவே
சிரித்து
மலர்ந்த முகத்தை காட்டும் ரோஜாவே
உனைப் போல மலர்ந்த முகத்தை காட்டும் மாந்தர் அனைவரும்
வாழ்வில் வளமும் மிஞ்சியே

வாழ்வில்
ஆனந்தமாய் வாழ வேண்டுமே









http://www.youtube.com/watch?v=bAR2otSAdKo&NR=1

Wednesday, February 23, 2011

அன்னமிட்ட வீட்டிலே

உபகாரம் செய்தவர்க்கே
அபகாரம் செய்ய எண்ணும்
முழு மோசக்காரன்
தானே
முடிவிலே
நாசமாவான் ஆ ஆ ஆ

அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே

தேகம் கண்டு மயங்கியே
தீராத ஆசை கொண்டு
மோசமும் போன பின்னால்
மனவேதனை அடைவதாலே
லாபம் என்ன

பாலை ஊற்றி பாம்பை நாம்
வளர்த்தாலும் நம்மையே
கடிக்கத்தானே வரும் அதை
அடித்து கொல்ல நேருமே
(அன்னமிட்ட வீட்டிலே )


http://video.google.com/videoplay?docid=1099261662232911520#docid=-5312265452834569669

Tuesday, February 15, 2011

மனம் போல் ...

மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம்
மெய் அன்பாலே
(மனம் போல் )


என்னுயிர் நாதன் குணமே
பாரில் நேர்மையாகினார் புவிமேல்
இந்த நாளும் வாழ்வில் சுபதினமே
இன்பமே கொள்ளுவோம்
(மனம் போல் )


பெண்மனம் ஒன்றை நினைத்தால்
அதை திண்ணமாக செய்து முடிப்பாள்
உயர் காதல் வாழ்வு பெற துடிப்பாள்
உண்மையே அன்பினால்
(மனம் போல் )

http://www.in.com/music/manthiri-kumari/songs-65127.html