Wednesday, May 21, 2008

உன்னை எண்ணி ...

உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன்
அன்று உன்னைத் தொட்ட தென்றல் வந்து
என்னை தொட்டதோ...
(உன்னை)


காதலர் கண்கள் சங்கமமானால்
கன்னம் சிவக்க என்னென்ன நடக்கும்
நான் அதைத் காண நாழிகையானால்
நடையோடு இடை கூட மெலிவாகுமே
(உன்னை)


பொன்னிற உடலும் செம்மணி இதழும்
காதல் கனியும் உனக்கென கனியும்
நேரம் குறைவு நினைவுகள் அதிகம்
நிழலாடும் விழியோடு முகம் காண வா
(உன்னை)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி