Wednesday, May 21, 2008

திரும்பி வா....

திரும்பி வா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை விரும்பி வா
இட்ட அடி கனிந்திருக்க்க
எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிர்ந்திருக்க
பருவ மழை பொழிந்திருக்க
திரும்ப வா அறிவே திரும்ப வா
திரும்பி வா ஒளியே திரும்பி வா
கன்னி விழி திறந்திருக்க
காதல் வழி புரிந்திருக்க
நல்ல மனம் அழைத்திருக்க
நாலு குணம் தடுத்திருக்க
(திரும்ப)


கண் படுவதில் பட்டுத் தேறும்
கை தொடுவதைத் தொட்டுத் தீரும்
இதை வெளியிட மனமில்லாமல்
உன் மைவிழி பொய்மொழி கூறும்
இது முதல் முதல் சந்திப்பாகும்
இதில் எப்படி வெட்கம் போகும்
பனித்துளி விழும் மலர் என்றாகும்
என் குளிர் முகம் குங்குமமாகும்
(திரும்பி)


ஒரு கிளியென தத்திப் போகும்
உன் கனிமொழி தித்திப்பாகும்
சிறு குழி விழும் அழகிய கன்னம்
அது மதுரசம் ததும்பிடும் கிண்ணம்
பனிப் பொய்கையில் அல்லிப் பூவும்
அதைக் கொஞ்சிடும் வெள்ளி நிலாவும்
இள மயக்கத்தில் இருவரைச் சேர்க்கும்
மனம் இதழ்களில் இருப்பதைக் கேட்கும்
(திரும்பி)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி