Monday, May 26, 2008

ஆடாத மனமும் உண்டோ ....

ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ

நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ

வாடாத‌ ம‌ல‌ர்போலும் விழி பார்வையில்
கை வ‌ளையோசை த‌ருமின்ப‌ இசை கார்வையில்
வாடாத‌ ம‌ல‌ர்போலும் விழி பார்வையில்
கை வ‌ளையோசை த‌ருமின்ப‌ இசை கார்வையில
ஈடேதும் இல்லாத‌ கலைச் சேவையில்
த‌னி இட‌ம் கொண்ட‌ உமைக் கண்டும் இப்பூமியில்
ஈடேதும் இல்லாத‌ கலைச் சேவையில்
த‌னி இட‌ம் கொண்ட‌ உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ

இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும்
குர‌லில் குயில் அஞ்சும் உனைக் காணவே
இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும்
குர‌லில் குயில் அஞ்சும் உனைக் காணவே
ப‌சும் தங்கம் உம‌து எழில் அங்க‌ம்
அதன் அசைவில் பொங்கும் நய‌ம் காணவே
ப‌சும் தங்கம் உம‌து எழில் அங்க‌ம்
அதன் அசைவில் பொங்கும் நய‌ம் காணவே


முல்லைப்பூவில் ஆடும் க‌ரு வ‌ண்டாக‌வே
முகில் முன்னே ஆடும் வ‌ண்ண‌ ம‌யில் போலவே
முல்லைப்பூவில் ஆடும் க‌ரு வ‌ண்டாக‌வே
முகில் முன்னே ஆடும் வ‌ண்ண‌ ம‌யில் போல‌வே
அன்பை நாடி உந்த‌ன் அருகில் வந்து நின்றேன்
இன்ப‌ம் என்னும் பொருளை இங்கு க‌ண்டேன்
த‌ன்னை ம‌ற‌ந்து உள்ள‌ம் க‌னிந்து
இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்

தேனாறு பாய்ந்தோடும் க‌லைச்செல்வ‌மே
தரும் திகட்டாத‌ ஆனந்த நிறை த‌ன்னிலே
தேனாறு பாய்ந்தோடும் க‌லைச்செல்வ‌மே
தரும் திகட்டாத‌ ஆனந்த‌ நிறை த‌ன்னிலே
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
ஆடாத மனமும் உண்டோ

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி