Wednesday, May 21, 2008

விழியே .....


விழியே கதை எழுது..
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்


மனதில் வடித்து வைத்த சிலைகள் -
அதில்மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக் கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்


கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது -
இந்தப்பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை ?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்


தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் -
என்நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி