Saturday, August 28, 2010

வாரேன் வழி பார்த்திருப்பேன் ...

வாரேன்
வழி பார்த்திருப்பேன்
வந்தால்
இன்பம் தந்திடுவேன்

என்ன தருவே ?
என்னை தருவேன்.

அந்தி மயங்குற நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்

போகவே மனசில
அப்ப இரேன்
இருக்கவும் முடியலையே

வரும் தை மாதம் பார்த்து
கையோடு சேர்த்து ஊர்கோலம் போனாலென்ன
இடை தாங்காத பாரம்
நான் கொஞ்சம் தாங்கி
உன்னோடு வந்தால் என்ன

செவ்வானம் பூத்தூவ
தென்பாங்கு தான் வாழ்த்த
கல்யாண நாள் காணும் அன்று
பொன்னான மாப்பிள்ளை பெண்ணோடு பாரென்று
ஊரெங்கும் பாராட்டும் நின்று
( அந்தி மயங்குற ...)

அடி இந்நேரம் உன்னை காணாத கண்கள்
பூவாகி நின்றேனடி
இந்த கட்டாத மாலை
உன் மார்பில் சேர்ந்து
தேனூர வந்தேனுங்க

சித்தாடை காத்தாட
செவ்வாழை கூத்தாட
கண்டாலும் என் பார்வை கொஞ்சும்
மச்சானின் நெஞ்சோடு
மையோடும் கண்ணோடு
போராடும் என் மேனி கெஞ்சும்
(அந்தி மயங்குற ..)

வாரேன்
நான் வாரேன்
போய் வாரேன்
நான் வாரேன்




Tuesday, August 24, 2010

தாரா அவர் வருவாரா ...

தாரா அவர் வருவரா
கண்கள் தவிப்பதை தான் அறிவாரா
தாரா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா

தனியே பேசி மனம் மகிழ்ந்தாடுவாரா
தணியா காதலுடன் உறவாடுவாரா
அழைப்பாரா அணைப்பாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
(என் தாரா ..)

இதய வீணைதனில் ஒலி மீட்டுவாரா
இன்ப காவியமாய் சுவையூட்டுவாரா
புதுமை ஊஞ்சலிலே தாலாட்டுவாரா
புகழ்வாரா மகிழ்வாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
(என் தாரா ..)

http://www.youtube.com/watch?v=k4qJrLGFIwY&feature=channel

Monday, August 23, 2010

காதலெனும் சோலையிலே ..

காதலெனும் சோலையிலே ராதே ராதே
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே
காதல் என்னும் காவியத்தை ராதே ராதே
ராதே ராதே ராதே
காதெலென்னும் காவியத்தை
உந்தன் கண்களிலே கண்டேனடி ராதே ராதே
(காதலென்னும் சோலையிலே ..)

என்னிதய வீணையிலே ராதே ராதே
இன்னொலியை மீட்டி விட்டாய் ராதே ராதே
உன்னழகின் போதையிலே ராதே ராதே
ராதே ராதே ராதே
உன்னழகின் போதையிலே
எந்தன் உள்ளம் வெறி கொள்ளுதடி ராதே ராதே
புன்னகையை வீசுகின்றாய் ராதே ராதே
மௌன போதனைகள் பேசுகின்றாய் ராதே ராதே

கன்னம் குழிவதிலே ராதே ராதே
எந்தன் எண்ணம் சுழலுதடி ராதே ராதே
(காதலென்னும் சோலையிலே ...)

Friday, August 20, 2010

பழத்தோட்டம் என் தோட்டம் ..

பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்

கனி தேடும் குயிலினமே
கதை சொல்லும் கிளியினமே
அடுத்தவரின் பொருள் மீது
ஆசை வைக்க கூடாது
வேல் சிரிக்குது கண்களிலே
கவன் இருக்குது கைகளிலே
பிழை செய்பவர் மீதினிலே
கல் எறிவேன் குருவிகளே
(பழத்தோட்டம் ..)

அதிகாரம் வரும்போது
தவறாத மனம் வேண்டும்
தலைக்கனங்கள் வந்தாலே
தான் வீழும் நிலை தோன்றும்
தினம் உழைப்பது பொதுவுடைமை
நம் உடல் இது தனி உடமை
நல்ல ஆளென பேரெடுத்தல்
அது அவரவர் குண நிலமை
விதை தூவ நிலம் தேவை
புவி ஆழ மதி தேவை
அக்கிரம் நீ செய்தால்
அதை கேட்கும் ஆள் தேவை
நான் துணிவுள இளம் மங்கை
எனை தொடுவது யாரிங்கே
விழி அசைவுகள் கவி கூறும்
அது ஆயிரம் பொருள் கூறும்
(பழத்தோட்டம் ...)

Wednesday, August 18, 2010

ஆடிய பாதங்கள் ..

ஆடிய பாதங்கள் அம்பலத்தில்
இங்கு ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில்
(ஆடிய)

பார்வதி ஓர் அங்கம் உன்னிடத்தில்
அவள் பார்க்கட்டும் தன்னைத்தான் என்னிடத்தில்
(ஆடிய )

கண்ணில் ஒன்றாய் இருக்க
திங்களாய் பிறந்தேனோ
கற்றை குழலிருக்க
கங்கையாய் நடந்தேனோ
கழுத்தில் சுழன்றிருக்க
பாம்பென பிறந்தேனோ
கையில் அமர்ந்திருக்க
மான் என பிறந்தேனோ
(ஆடிய.. )

கல்லை கனியென அருள்தரவரும் தில்லை
திருநகையினில் நடமிடும் உந்தன் வண்ணம்
எந்தன் விழிதன்னில் விளையாடிட
தக தகவென வரும் எழில் முகமொரு
தரிசனம் தந்தோம் தந்தோம் என்று
இங்கும் அங்கும் இன்றி
எங்கெங்கும் மின்னுகிற வடிவே
கொதித்திடும் உடல் உனது நினைவினில்
துடித்திடும் கரம் வருக அருகினில்
மதனினும் கொடியவன் விடும் ஒரு கணையினில்
நலிந்தும்
மெலிந்தும்
வருந்தும் எனக்கோர் துணையென
வழங்கும் சுகங்கள் அருளுக
(ஆடிய )

Saturday, August 14, 2010

ஆட வாங்க ...

ஆட வாங்க அண்ணாத்தே
அஞ்சாதீங்க அண்ணாத்தே
அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
(ஆட வாங்க )

தாளத்தோடு ஆடும் போது
தகிடு தத்தோம் ஆகாது
கால தூக்கி போடும் போதும்
கவனம் மாறக் கூடாது
ஆள பாத்து மயங்கி நின்னா
அபாயம் மிக பொல்லாது
அதனாலே
என்மேலே
பின்னாலே பழி சொல்லாதே
ஆட வாங்க
அய்யா ஆட வாங்க
சும்மா ஆட வாங்க
( ஆட வாங்க)

ஆட்டம் போட்ற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு
சும்மா என்னே சோள கொல
பொம்ம போல எண்ணாதே
எம்மா எல்லாம் பாடி ஆடி
சிரிச்சு கேலி பண்ணாதே
கும்மாளமும் குலுக்கு மினுக்கும்
செல்லாது இவர் முன்னாலே
அதனாலே இனிமேலே
முன்போலே
நீ துள்ளாதே
ஆட்டம் போட்ற
அடி ஆட்டம் போட்ற அம்மாளு
நம்மகிட்டே ஆட்டம் போட்ற
ஆட்டம் போட்ற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு

கவனமாக ஆடிவிட்டா
கண்ணாலமும் உண்டாகும்
காரியத்தை கோட்டை விட்டா
கையும் காலும் ரெண்டாகும்
சமயத்திலே தப்பா விட்டா
ஜம்பமெல்லாம் வீணாகும்
அதனாலே
என்மேலே
பின்னாலே பழி சொல்லாதே
(ஆட வாங்க..)

ஆட்டம் போட்ற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு

ஏமாற்றம் தானா ..

ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே
(ஏமாற்றம்)

கோமகனை மணந்து
குலவி மகிழ்தோம் என்று
கொண்ட என் ஆசைக்கு
தண்டனையோ
(ஏமாற்றம்)

பசிக்கு உணவு தந்து
புசிக்கும் முன்னே
தட்டி பறிப்பது அழகாமோ
குழல் இசைக்கு மயங்கி வரும்
பசுவை கல்லால் அடித்தல்
இரக்கத்தின் செயலாமோ
( இனி ஏமாற்றம் )

கசக்கி ஏறியவோ
மலர் கொய்வார்
பெண்மேல் களங்கம் சுமத்தவோ
மணம் செய்வார்
உங்கள் நிஜ அன்பை ருசி காண
நினைதேங்கும்
என் துயிர் நீங்குமா
பெண் மனம் தாங்குமோ
(ஏமாற்றம் )

நலங்கிட்டு பார்ப்போமடி

நலங்கிட்டு பார்ப்போமடி
ராணிக்கு அலங்காரம் செய்வோமடி
வாடி
குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால்
நம்மை குருடென்று சொல்லாரோடி
காண்பவர் குருடென்று சொல்லாரோடி
போடி
சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும்
எழில் பெற காண்போமடி ராணியால்
ஒளி பெற காண்போமடி
வாடி
(நலங்கிட்டு)

களங்கமில்லா மதிவதனித்திலே களிப்பினை காண்போமடி
கல்யாண சிரிப்பினை காண்போமடி
வாடி
(நலங்கிட்டு)