Wednesday, May 21, 2008

வெண் முகிலே ....

¦வெண் முகிலே.. வெண் முகிலே.
வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு


சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு
இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
வெண் முகிலே.ஏஏஏஏஏஏ


உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு
உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு
உயிரங்கே.. உடலிங்கே உள்ளதென்றும் சொல்லு
உருவிழந்து மகிழ்விழந்து கருகுவதாய் சொல்லு
உடலிழந்து போகும் முன்னே ஓடி வரவும் சொல்லு
ஓடி வரவும் சொல்லு


வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
வெண் முகிலே ஏஏஏஏஏஏஏஏஏ


ஆடும் மயில் ஆடவில்லை என்று மட்டும் சொல்லு
அழகு நிலா சிரிக்கவிலை என்பதையும் சொல்லு
வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு
நான் வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு
வருவதற்குள் நீ விரைந்து வந்து பதிலும் சொல்லு
வந்து பதிலும் சொல்லு


வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
வெண் முகிலே ஏஏஏஏஏஏஏஏஏ

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி