Saturday, May 24, 2008

உன் விழியும் என் வாளும் ....

உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
கொடியும் கனியும் இதழும் மதுவும்
எதுவும் எனதாக
அழகு சிலையின் உரிமை தலைவன் நானே என்றாக

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்


உன் விழிகள்
கத்தியின் கூர்மை
உன் இதழ்கள்....
உன்னை மயக்கும் மதுக்கின்னம்
உன் கன்னம்
உன் முகம் பார்க்கும் கண்ணாடி
உன் இதயம்
உன்னை சிறை வைக்கும் பள்ளியறை
கத்தி முனை காயம் செய்யும்
கண் பட்டால் மாயம் செய்யும்
கத்தி முனை காயம் செய்யும்
கண் பட்டால் மாயம் செய்யும்
தித்திக்கும் முத்தங்கள் எத்தனையோ
தொட்டு சொல்லும் கன்னிப்பெண்ணை
விட்டுச்செல்லும் எண்ணம் என்ன

என் வாளும் உன் தோளும் சந்தித்தால் சந்தித்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக என் வாளும் உன் தோளும் சந்தித்தால்

சின்ன உடல் நீரில் ஆடும்
ஜில்லென்ற காற்றில் வாடும்
சின்ன உடல் நீரில் ஆடும்
ஜில்லென்ற காற்றில் வாடும்
பொன் வண்ண பெண்ண் மேனி தண்ணீரில் தள்ளாடுமோ
தண்ணிக் கொஞ்சம் தழுவிகொள்ள
என்னை கெஞ்சும் பார்வை என்ன
உன் விழியும் என் விழியும் சந்தித்தால்

முத்துமொழி பேசும் கிள்ளை
முத்த மழை சிந்தும் முல்லை
கன்னத்தின் கிண்ணத்தில் என்னென்ன வண்ணங்களோ
இதயம் முழுதும் கவிதை எழுது
இரவும் பகலும் பாடி பழகு
உன் விழியும் என் விழியும் சந்தித்தால்
கதை சொல்லும் மனம் வெல்லும் இன்பத்தால்
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி