Thursday, June 26, 2008

படங்களின் பட்டியல்

Thirties...
11936Sathi Leelavathi /Manorama Films, Ellis R.Dungan
21936Iru Sahothararkal / Parameswari Sound Pictures, Ellis R.Dungan
31938Thadcha Yagnam / Metropolitan Pictures, Raja Chandrasekhar
41938Veera Jegatheesh / V.S.Talkies, TP.Kailasam-R.Prakash
51939Maaya Machendrar / Metropolitan Pictures, Raja Chandrasekha
61939Prahalaatha / Salem Sankar Films, B.N.Rao

Forties..
71941Ashokumar / Murugan Talkies Film Company, Raja Chandrasekhar
81941Vethawathi or Seetha Jananam / Shyamala Pictures, T.R.Ragunath
91942Thamil Ariyum Perumal / Uma Pictures, T.R.Ragunath
101943Thaasi Penn or Jothi Malar/ Puvaneswari Pictures, Ellis R.Dungan
111943Arichandra / Sri Rajarajeswari Film Company, Nagapushanam
121945Meera / Chandraprabha Cinetone, Ellis R.Dungan
131945Saalivaahanan / Bhaskar Pictures, B.N.Rao
141946Sri Murugan / Jupiter, M.Somasundaram-V.S.Narayan
151947Paithiyakaaran / N.S.K.Films, Krishnan-Panju
161947Rajakumari / Jupiter, A.S.A.Sami
171948Abhimanyu / Jupiter, A.S.A.Sami
181948Mohini / Jupiter, Lanka Sathyam
191948Raja Mukthi / Narendra Pictures, Raja Chandrasekhar
201949Ratnakumar / Murugan Talkies Film Company, Krishnan-Panju


Fifties...
211950Manthiri Kumari / Modern Theatres, T.R.Sundaram- Ellis R.Dungan
221950Marutha Naatu Ilavarasi / G.Govindan and Co
231951Marma Yogi /Jupiter, K.Ramnath
241951Ektha Raaja in Hindi/dubbed
251951Sarvaadhikaari / Modern Theatres
261951Sarvaadhikaari in Telugu/dubbed
271952Andamaan Kaithi / Radhakrishna Films, V.Krishnan
281952En Thangai / Asoka Pictures, C.L.Narayanamurthy-M.K.R.Nambiar
291952Kumaari / R.Padmanabhan-Rajeswari, R.Padmanabhan
301953Genoa / Chandra Pictures, F.Nagoor
311953Genoa ; in Malayalam/dubbed
321953Naam / Jupiter-Mekala, A.Kasilingam
331953Panakkaari / Uma Pictures, K.S.Gopalakrishnan
341954Koondu Kili (1954)/ R.R.Pictures, T.R.Ramanna
351954Malai Kallan (1954)/ Pakshiraja, S.M.Sriramulu Naidu
361955Guleba Kaavali (1955)/ R.R.Pictures, T.R.Ramanna
371956Alibaabavum Naarpathu Thirudarkalum / Modern Theatres, T.R.Sundaram
381956Madurai Veeran / Krishna Pictures, Yoganand
391956Thaaiku Pin Thaaram / Devar Films, M.A.Thirumugam
401957Sakravarthi Thirumagal / Uma Pictures, P.Neelakandan
411957Maha Devi / Sri Ganesh Movietone, Sundar Rao Nadkarni
421957Puthumai Piththan / Sivakami Pictures, T.R.Ramanna
431957Raja Rajan / Neela Productions, T.V.Sundaram
441958Nadodi Mannan / M.G.R.Pictures, MGR
451959Thaai Magalukku Kattiya Thaali / Kalpana Kala Mandhir, R.R.Chandran


Sixties...
461960Baghdad Thirudan / Southern Movies, T.P.Sundaram
471960Mannaathi Mannan / Nadesh Art Pictures, M.Nadesan
481960Raja Desingu / Krishna Pictures, T.R.Ragunath
491961Arasilankumari / Jupiter, A.S.A.Sami
501961Nallavan Vaalvaan / Arasu Pictures, P.Neelakandan
511961Sabash Maapillai / Ragavan Productions, S.Ragavan
521961Thaai Sollai Thattathey / Devar Films, M.A.Thirumugam
531961Thirudathey / A.L.S., P.Neelakandan
541962Kudumba Thalaivan / Devar Films, M.A.Thirumugam
551962Maada Pura / P.V.N.Productions, S.A.Subburaman
561962Paasam / R.R.Pictures, T.R.Ramanna
571962Rani Samyukthaa / Saraswathy Pictures, Yoganand
581962Thaayai Kaatha Thanayan / Devar Films, M.A.Thirumugam
591962Vikramaadhithan / Bharat Productions, T.R.Ragunath-N.S.Ramdhas
601963Anantha Jothi / Hariharan Films (P.S.V.), V.N.Reddy
621963Tharmam Thalai Kaakum / Devar Films, M.A.Thirumugam
631963Kalai Arasi / Sarodi Brothers, A.Kasilingam
641963Kaanchi Thalaivan / Mekala Pictures, A.Kasilingam
651963Koduthu Vaithaval / E.V.R.Pictures, P.Neelakandan
661963Neethiku Pin Paasam / Devar Films, M.A.Thirumugam
671963Pana Thottam / Saravana Films, K.Sankar
681963Parisu / Gowri Pictures, Yoganand
691963Periya Idathu Penn / R.R.Pictures, T.R.Ramanna
701964Theiva Thaai / Sathya Movies, P.Madhavan
701964En Kadamai / Nadesh Art Pictures, M.Nadesan
711964Padahotti / Saravana Films, T.Prakash Rao
721964Panakkara Kudumbam / R.R.Pictures, T.R.Ramanna
731964Thaayin Madiyil / Annai Films, Adurthi Subba Rao
741964Tholilaali / Devar Films, M.A.Thirumugam
751964Vettaikkaaran / Devar Films, M.A.Thirumugam
761964Aasai Mugam / Mohan Productions, P.Pulliah
771965Aayirathil Oruvan / Padmini Pictures, B.RPanthulu
781965Enga Veetu Pillai / Vijaya Combines Productions, Sanakya
791965Kalankarai Vilakkam / Saravana Films, K.Sankar
801965Kanni Thaai / Devar Films, M.A.Thirumugam
811965Panam Padaithavan / R.R.Pictures, T.R.Ramanna
821965Thaalam Poo / Sri Bala Murugan Films, S.Ramadas
831966Anbe Vaa / AVM, A.C.Tirulokachandar
841966Naan Aanaiyittaal / Sathya Movies, Sanakya
851966Muharaasi / Devar Films, M.A.Thirumugam
861966Naadodi / Padmini Pictures, B.R.Panthulu
871966Chandrothayam / Saravana Films, K.Sankar
881966Parakkum Paavai / R.R.Pictures, T.R.Ramanna
891966Petraal Thaan Pillaiyaa? / Sri Muthukumaran Pictures, Krishnan-Panchu
901966Thaali Paakiyam / Varalakshmy Pictures, K.B.Nagabhushanam
911966Thani Piravi / Devar Films, N.S.Varma
921967Arasa Kattalai / Satyaraja Pictures, M.G.Chakrapani
931967Kaavalkaaran / Sathya Movies, P.Neelakandan
941967Thaaiku Thalaimagan / Devar Films, M.A.Thirumugam
951967Vivasaayi / Devar Films, M.A.Thirumugam
961967Rahasiya Police 115 / Padmini Pictures, B.R.Panthulu
971968Ther Thiruvizah / Devar Films, M.A.Thirumugam
981968Kudiyiruntha Koyil / Saravana Screens, K.Sankar
991968Kannan En Kaathalan / Sathya Movies, P.Neelakandan
1001968Oli Vilakku / Gemini, Sanakya
1011968Kanavan / Valli Films, P.Neelakandan
1021968Puthiya Bhoomi / J.R.Movies, Sanakya
1031968Kaathal Vaahanam / Devar Films, M.A.Thirumugam
1041969Adimai Penn / M.G.R.Pictures, K.Sankar
1051969Nam Naadu / Vijaya International, Jambu


Seventies...
1061970Maatukaara Velan / Jayanthi Films, P.Neelakandan
1071970En Annan / Venus Pictures, P.Neelakandan
1081970Thalaivan / Thomas Pictures, P.A.Thomas
1091970Thedi Vanda Maapillai / Padmini Pictures, B.R.Panthulu
1101970Engal Thangam / Mekala Pictures, Krishnan-Panchu
1111971Kumari Kottam / Kay Cey Films, P.Neelakandan
1121971Rikshawkaran / Sathya Movies, M.Krishnan Nayar
1131971Neerum Neruppum / New Mani J.Cine Productions, P.Neelakandan
1141971Oru Thaai Makkal / Nanjil Productions, P.Neelakandan
1151972Sange Muzhangu / Valli Films, P.Neelakandan
1161972Nalla Neram / Devar Films, M.A.Thirumugam
1171972Raman Thediya Seethai / Jeyanthi Films, P.Neelakandan
1181972Annamidda Kai / Ramachandra Productions, M.Krishnan
1191972Naan Een Piranthaen? / Kamatchi Agencies, M.Krishnan
1201972Ithaya Veenai / Uthayam Productions, Krishnan-Panchu
1211973Ulagam Suttrum Vaalipan / M.G.R.Pictures, MGR
1221973Paddikaatu Ponnaiah / Vasanth Pictures, B.S.Ranga
1231974Netru Inru Naalai/ Amalraj Films, P.Neelakandan
1241974Urimai Kural/ Chitralaya, C.V.Sridhar
1251974Siriththu Vaazhavendum / Uthayam Productions, S.S.Balan
1261974Ninaithathai Mudippavan / Oriental Pictures, P.Neelakandan
1271975Naalai Namathe / Gajendra Films, K.S.Sedhumadavan
1281975Pallaandu Vaazhha / Uthayam Productions, K.Sankar
1291975Ithaya Kani / Sathya Movies, A.Jeganathan
1301976Neethikku Thalai Vanangu / Sri Umaiyambikai Productions, P.Neelakandan
1311976Uzhaikkum Karangal / Kay Cey Films, K.Sankar
1321976Oorukku Uzhaippavan / Venus Pictures, M.Krishnan
1331977Inru Pola Enrum Vaazhha / Subbu Productions, K.Sankar
1341977Navarathnam / C.N.V.Movies, A.P.Nagarajan
1351977Meenava Nanban / Muthu Enterprise, C.V.Sridhar
1361977Maduraiyai Meedda Sundara Paandiyan (1978)/ Soleeswar Combines, P.Neelakandan

Saturday, June 21, 2008

நந்தவனத்திலோர் ஆண்டி ...

நந்தவனத்திலோர் ஆண்டி....
அவன் வந்த இடத்தில் மங்கையை வேண்டி
(நந்தவனத்தில்)

வார்த்தையைக் கொடுத்துப்புட்டாண்டி...
இவன் வம்பாக மாட்டிக்கிட்டு தொங்கப் போறாண்டி
(நந்தவனத்தில்)

காஷாயம் கட்டிக்கிட்டாண்டி....
கொஞ்சம் காதல் கதையிலும் ஒட்டிக்கிட்டாண்டி (காஷாயம்)
வேஷத்தை மாத்திக்கிட்டாண்டி.....
இப்போ வேறொரு ஆளாகி வெளுத்துக் கட்றாண்டி
(நந்தவனத்தில்)

once a pappa

once a pappa met a mamma
in a little tourist bus
என்னடி பாப்பா சொன்னது டூப்பா
கன்னம் சிவந்தது what is this
my dear pappa thalaiyil topa
what about the hair oil
evening beauty என்னடி duty
meet me in the boat mail
once a pappa met a maama
in a little tourist bus
என்னடி பாப்பா சொன்னது டூப்பா
கன்னம் சிவந்தது what is this

Monday, June 16, 2008

யாருக்கே யார் சொந்தம் ....

யாருக்கு யார் சொந்தம் என்பது -
என்னைநேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
(யாருக்கு)


வாரி முடித்த குழல் எனக்கேதான் சொந்தமென்று
வானத்து கார்முகிலும் சொல்லுதே
மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனமென்று
வண்ண மலரெல்லாம் துள்ளுதே -
இதில்வண்ணமலர் என்றும் வண்டுக்குதான் சொந்தம்
வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்
(யாருக்கு)


தந்தப் பல் எழில் கண்டு தன் இனம்தான் என்று
பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே
குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம்
தங்களின் இனமென்று ஆடுதே
கொத்துக் கிளிக்கேதான் கோவைக்கனி சொந்தம்
குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது
(யாருக்கு)

வருவார் ஒரு நாள்...

வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வளரும் தேயும் நிலவைப் போலே
வளரும் தேயும் நிலவைப் போலே
மறைவார் தன்னாலே
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்


இரவும் பகலும் நிலைப்பதில்லை
அழகும் பொருளும் அது போலே
இரவும் பகலும் நிலைப்பதில்லை
அழகும் பொருளும் அது போலே
இளமைப் பருவம் காணும் கனவு
இருக்கும் வரையில் அழிவதில்லை
இருக்கும் வரையில் அழிவதில்லை


வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்


மரத்தில் இருக்கும் இலையுதிரும்
மறு படி துளிர்க்கும் காலம் வரும்
மரத்தில் இருக்கும் இலையுதிரும்
மறு படி துளிர்க்கும் காலம் வரும்
நல்ல மனிதரின் வாழ்விலும் துன்பம் வரும்
மறையும் மீண்டும் இன்பம் வரும்


வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வளரும் தேயும் நிலவைப் போலே
வளரும் தேயும் நிலவைப் போலே
மறைவார் தன்னாலே
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்

வணக்கம் வணக்கம் வணக்கம் ...

வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்
அணைக்கும் கையால் தள்ளாதீங்க இந்த சமயம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்


வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு
வாட்டுகின்ற பசிப் பிணி துயர் இருக்கு
வாழுவது உங்க கையில் தானிருக்கு
வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு
வாட்டுகின்ற பசிப் பிணி துயர் இருக்கு
வாழுவது உங்க கையில் தானிருக்கு
வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்


பத்திப் படர வந்த பச்சைப் பசுங்கொடியைப்
பந்தலே தள்ளுவதும் சரியா
பத்திப் படர வந்த பச்சைப் பசுங்கொடியைப்
பந்தலே தள்ளுவதும் சரியா
பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் குறைகளைப்
பெரிதாய் கொள்ளுவது முறையா


வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்


அண்ட நிழல் தேடி வரும் நொண்டிகளை
ஆல மரம் அடித்தே விரட்டுவதும் உண்டோ
வந்தவரை வாழ வைக்கும் வசதி படைச்சவங்க
தண்டனைகள் தருவதும் நன்றோ
கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு
கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு
கடவுளும் நீங்க தான் எங்களுக்கு
கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு
கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு
கடவுளும் நீங்க தான் எங்களுக்கு


வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்
அணைக்கும் கையால் தள்ளாதீங்க இந்த சமயம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
அய்யா அம்மா உங்க அபயம்

மனதில் கொண்ட ஆசைகளை ...

மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு


விதைப்பதெல்லாம்முளைப்பதில்லைமண்ணின்மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே


மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலை தன்னிலே
மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலை தன்னிலே
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே


மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு


ஒரு நிலா தான் உலவ முடியும் நீல வானிலே
உணர்ந்த பின்னே கலங்கலாமோ உள்ளம் வீணிலே
ஒரு நிலா தான் உலவ முடியும் நீல வானிலே
உணர்ந்த பின்னே கலங்கலாமோ உள்ளம் வீணிலே


உருகி உருகிக் கரைவதாலே பயனும் இல்லையே
உருகி உருகிக் கரைவதாலே பயனும் இல்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே


மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு

அல்லி மலராடும் ஆணழகன் ..

அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
அணைத்திட நினைத்தே துடிக்க வைத்தான்
அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்

தொட்ட இடம் அனைத்தையும் மணக்க வைத்தான்
தோளை அணையாக தலைக்கு வைத்தான்
அணைத்திட நினைத்தே துடிக்க வைத்தான்
அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்

தொட்ட இடம் அனைத்தையும் மணக்க வைத்தான்
தோளை அணையாக தலைக்கு வைத்தான்
பாலிலும் தேனிலும் குளிக்க வைத்தான்
பார்வையிலே மயக்கம் வைத்தான்

கலைகள் யாவும் படிக்க வைத்தான்
கதையில் பாதி நடத்தி வைத்தான்
அழகன் அழகன் பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்

கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
இருவர் மனதிலும் ஒரு உறவு
இதய வானத்தில் புது நிலவு
இருவர் மனதிலும் ஒரு உறவு
இதய வானத்தில் புது நிலவு

காதல் வழியில் புதுத் திருப்பம் ..புதுத் திருப்பம்
என்ன வருமோ பொறுத்திருப்போம்பொறுத்திருப்போம்
இருவர் மனதிலும் ஒரு உறவு
இதய வானத்தில் புது நிலவு
காதல் வழியில் புதுத் திருப்பம் ..
என்ன வருமோ பொறுத்திருப்போம்


அழகன் அழகன் பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்

Thursday, June 12, 2008

தீர்மானம் சரியாக .....

தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்

கார்மேகக் கூட்டங்கள் கலையாமல் மும்மாரி பெய்திட‌
கார்மேகக் கூட்டங்கள் கலையாமல் மும்மாரி பெய்திட‌
பார் மீது பயிர்கள் செழித்திட
பக்குவமாய் நடனம் புரிவாய் நீ
பார் மீது பயிர்கள் செழித்திட
பக்குவமாய் நடனம் புரிவாய் நீ
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்

நான் கண்ட தெய்வங்கள் யாரென்று சொல்லு
நான் கண்ட தெய்வங்கள் யாரென்று சொல்லு
நல்லோர்களில்லாரை என்றென்றும் தள்ளு
நல்லோர்களில்லாரை என்றென்றும் தள்ளு
ஏனென்று கேட்பார்கள் இதமாக வெல்லு...
ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ..
ஏனென்று கேட்பார்கள் இதமாக வெல்லு
எல்லோர்க்கும் ஒருவ‌ன் உண்டென்று
எப்போதும் ஒரு நிலை நில்லு
இன்ப‌ துன்ப‌ங்க‌ள் யாவும் இயற்கை பொருள் வாழ்வில்
இன்ப‌ துன்ப‌ங்க‌ள் யாவும் இயற்கை பொருள் வாழ்வில்
பண்பில் விளைந்திடுமே பெரும் தெம்பு நிறை சுகமே
பண்பில் விளைந்திடுமே பெரும் தெம்பு நிறை சுகமே


கண்குளிர் காட்சிகளே வெரும் கற்பனை சூழ்ச்சிகளே
கண்குளிர் காட்சிகளே வெரும் கற்பனை சூழ்ச்சிகளே
அற்புதம் என்னவுண்டு உலகில் ஆராய்ந்து பார்த்திடிலோ
அற்புதம் என்னவுண்டு உலகில் ஆராய்ந்து பார்த்திடிலோ
அதிசயம் இல்லையதில் இகபரம் இரண்டிலும்
அன்பே தெய்வமென நினைத்து முடித்து
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்

மொகத்தை பார்த்து முறைக்காதீங்க .....

மொகத்தைப் பார்த்து முறைக்காதீங்க -
சும்மா மொகத்தைப் பார்த்து முறைக்காதீங்க -
பல்லை மூடிக்கிட்டுச் சிரிக்காதீங்க (மொகத்தை )

பொண்ணிருக்கும் வீட்டுக்குள்ளே புகுந்திருக்கும் மாப்பிளே,
போட்டியிலே ஜெயிச்ச நீங்க புதுமையான ஆம்பளே!
என்னத்தான் புடிச்சிருக்கா இல்லையான்னு
மனசுலே இருக்கும் ரகசியத்தை
இழுத்துப்போடுங்க வெளியிலே (மொகத்தை )

முன்னும் பின்னும் பழக்கம் வேணுங்க
இங்கே வர்ரதுன்னா முறையிலேதும் நெருக்கம் வேணுங்க -
எண்ணத்தில் பொருத்தம் வேணுங்க அது இல்லேன்னா
இரண்டு பக்கமும் இன்பம் ஏதுங்க?
அன்னம்போல நடக்குமுங்க ஆளைக்கண்டா பறக்குமுங்க
என்னமோன்னு நினைக்காதீங்க -
நான் சொல்லிப்புட்டேன்... (மொகத்தை )

பாடுபட்டு காத்த நாடு .....

பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
கேடுகெட்ட கும்பலாலே-
நீங்க கேடுகெட்ட கும்பலாலே.... ( பாடு )

சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... ( பாடு )
சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே...

வெள்ளி பணத்துக்கும் ....

வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்
வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்

பிள்ளை எனும் பந்த பாசத்தை தள்ளி பிரிந்தோடும்
தன் உள்ளத்தை இரும்பு பெட்டகமாக்கி தாழ் போடும்
இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும்
இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும்
இணை இல்லாத அன்னை அன்புக்கு கூட
சொல்லால் தடை போடும்
வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்

வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல்
செல்வம் வரும் போகும்
இதை எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்கு துன்பம் வராவாகும்
கள்ளமில்லாத அன்பு செல்வமே என்றும் நிலையாகும்
கஷ்டம் தீரும் கவலைகள் மாறும் இன்பம் உருவாகும்

வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம் இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்
வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்

தமிழில் அது ஒரு ....

தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை (2)
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை (2)

பூந்தோட்டம் பொன்மேடை மணிமண்டபம்
ஒரு பெண்ணாக உருவானதோ...
பெண்ணாக உருவானதோ
பூமீது விளையாடும் பொன்வண்டுகள்
உன் கண்ணாக உருவானதோ...
கண்ணாக உருவானதோ
அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள்
எனக்காக கல்யாண ஒளி காட்டுதோ

தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை

பாராத பார்வைக்கு பரிசல்லவோ
உந்தன் மார்போடு நான் வந்தது...
மார்போடு நான் வந்தது
பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ
நல்ல நாள் பார்த்து நான் வந்தது...
நல்ல நாள் பார்த்து நான் வந்தது
நெய்வாசக் குழல்மீது கைபோட்டு விளையாடும்
கலை உந்தன் கலையல்லவோ (2)
நீராடும் சுகமொன்றும் போராடும் சுவையொன்றும்
நீ தந்த விலையல்லவோ...
நீ தந்த விலையல்லவோ

தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை

இதழ் இரண்டும் பாடட்டும் ...

இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்
இதழ் இரண்டும்..........

புதிய காலம் பிறந்ததென்று
போர் முகத்தில் ஏறி நின்று
பகைவர் வீழ போர் புரியும் நாட்டிலே
நீயும் பழம் பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே
இதழ் இரண்டும்........

வாளோடு போர்க்களத்தில் அவர் ஆடுவார்
கை வளையோடு அவர் மார்பில் நான் ஆடுவேன்
எங்கள் தோளோடு கிளிப்போல நீ ஆடுவாய்
வெற்றித் துணிவோடு தாய் நாட்டின் புகழ் பாடுவோம்
கண்ணே இதழ் இரண்டும்...........

வீறு கொண்ட வேங்கை போல வெற்றி கொள்ளுவார்
தான் வென்று வந்த சேதி எல்லாம் உனக்கு சொல்வார்
மாறி மாறி முத்தம் இட்டு வார்த்தை உரைப்பார் இன்று
மாலை இட்ட மங்கைப்போல என்னை அணைப்பார்


கண்ணே இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்
இதழ் இரண்டும்.........

சித்திரத்தில் பெண் எழுதி ...

சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழ விட மாட்டாயோ

காவியத்தில் காதலென்றால் கரைந்துருகும் கற்பனையே
கண்ணிறைந்த காதலுக்கு கண்ணீர்தான் உன் வழியோ
அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுதத் தெய்வமெல்லாம் ஏட்டில் வரும் தேன்தானோ
மன்னர் குலக் கன்னியரும் கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்துப் பெண்களுக்கு வாய்த்த விதி இதுதானோ

நான் கண்ட கனவில் நீயிருந்தாய் ...

ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...
ஜின்சல... ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...
ஜின்சல... ஜிஞ்சல...ஜல..
ஜிஞ்சல...ஜின்சல... ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...

நான் கண்ட கனவில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம் தந்தாய்
கனவும் கலைய... சுகமும் முடிய
அடுத்ததென்னவோ...ஓ...ஓ..ஒ...


அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது வரும் வரும்
நினைத்தால் மயங்குது மனம் மனம்
உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்


பந்து போல எனை எடுத்து தன் பக்கம் வைத்தானோ
பகல் வருகின்ற வரையில் புரிகின்ற மொழியில்
பாடத்தைச் சொன்னானோ
ஆகட்டும் ஆகட்டும் என்றது என்மேனி
ஆனந்தம் ஆரம்பம் கண்டது பொன்மேனி

அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது வரும் வரும்
நினைத்தால் மயங்குது மனம்
மனம் உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்

என்னவேண்டும் என்று நினைத்து என் நெஞ்சைத்தொட்டானோ
இவள் மயக்கத்தில் கொஞ்சம் மிதக்கட்டும்
என்று முத்திரை இட்டானோ
ஏ. .மிஸ்டர் ஏ...மிஸ்டர்
உனக்கிது கிட்டாது
ஓ...மிஸ்டர் ஓ...மிஸ்டர் கைகளுக்கெட்டாது

அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது வரும் வரும்
நினைத்தால் மயங்குது மனம் மனம்
உன்னைத்தான் நெருங்குது தினம் தினம் ய...ய...ய...

நான் கண்ட கனவில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம் தந்தாய்
கனவும் கலைய... சுகமும் முடிய
அடுத்ததென்னவோ...ஓ...ஓ..ஒ

கண்ணோடு கண்ணு ...

கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு (கண்ணோட)

பொன்னான பொண்ணு தனியா நின்ன
பொல்லாத காலம் கடந்தாச்சு
கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
பொன்னான நேரம் பொறாந்தாச்சு (கண்ணோட)

சின்னஞ் சிறிசிலே அஞ்சு வயசிலே
நெஞ்சிலே கொண்ட அன்பு-
இளம் பிஞ்சிலே கொண்ட அன்பு-
இப்போ என்ன பண்ணியும் பிரிக்க முடியலே
பாராமலே வந்த வம்பு...
எதிர் பாராமலே வந்த வம்பு (கண்ணோட)

கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
அன்னைக்கு வந்த அன்பு....
அதில் என்னைக்கும் இல்லே வம்பு...
அது என்னையும் உன்னையும் கேக்காமே
இணைக்கப் போவுதே வம்பு...
ஆஹா வேண்டாமே இந்த வம்பு (கண்ணோட)

எங்கே என் இன்பம் எங்கே?
என் இதயம் எங்கே?
பகைவர் நடுங்கும் நடை எங்கே?-
என் பக்கம் இருந்த பலம் எங்கே? (எங்கே)
வீரமாமுகம் தெரியுதே-
அது வெற்றிப் புன்னகை புரியுதே
விந்தைப் பார்வையில் மேனி உருகுதே
மேலும் மேலும் என் ஆசை பெருகுதே
காதல் வளருதே! வாழ்வு மலருதே!

நான் ஏன் பிறந்தேன் ....


நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

நாடென்ன செய்தது ந‌ம‌க்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு
நாடென்ன செய்தது ந‌ம‌க்கு
என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு
என நினைத்தால் நன்மை உனக்கு

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

மலையில் பிறந்த நதியால்
மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால்
அவர் பசியும் தணிந்தது
மலையில் பிறந்த நதியால்
மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால்
அவர் பசியும் தணிந்தது
கொடியில் பிறந்த மலரால்
எங்கும் வாசம் தவழ்ந்தது
அன்னை மடியில் பிறந்த உன்னால்
என்ன பயன் தான் விளைந்தது

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

பத்துத் திங்கள் சுமந்தாளே
அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள்
மற்றவராலே போற்றப்பட வேண்டும்
க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌
த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்
உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உல‌க‌ம் அழ‌ வேண்டும்

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

தானே ....

தானே தானே தன்ணான தான

தானே உன் மேனி தள்ளாடலாமா

தானே தானே தண்நானா தான தானே

உன் மேனி தள்ளாடலாமா

அது தாளம் போதும் நினைவென்ன

இடை பாவம் காட்டும் நிலையென்ன

அது தாளம் போதும் நினைவென்ன

இடை பாவம் காட்டும் நிலையென்ன

ரசிகன் இல்லாத அழகும் பெருமை கொள்ளாதம்மா

நடிக்கும் கண்ணோடு படிப்பார் இல்லாமல்

இனிமை உண்டாகுமா

இந்த நாட்டிய கோலம் காட்டிய மேனி

மேடைக்கு வரலாமா

அதை நான் மட்டும் பார்த்து மான்குட்டி போலே

மடியில் விழலாமா

கவிதை கண்டாடும் பருவம் முழுதும்

கண்டால் என்னாகுமோ

கனிகள் கொண்டாடும் உடலில் முன்னாலே

உலகம் என்னாகுமோ

இந்த தோட்டத்தில் நானும் பூப்பறிக்காமல்

தனியே விடலாமோ

இன்னும் சோதனை வேண்டாம்

வேலியை தாண்ட சம்மதம் தரலாமோ

சிரிக்க தெரிந்தால் போதும்.....

சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்

வ‌ன‌த்துக்கு அழ‌கு ப‌சுமை
வார்த்தைக்கு அழகு இனிமை
குளத்துக்கு அழகு தாமரை
நம் முகத்துக்கு அழகு புன்னகை
வ‌ன‌த்துக்கு அழ‌கு ப‌சுமை
வார்த்தைக்கு அழகு இனிமை
குளத்துக்கு அழகு தாமரை
நம் முகத்துக்கு அழகு புன்னகை
சிரிக்கத் தெரிந்தால் போதும்.....

இர‌வும் ப‌க‌லும் உண்டு
வாழ்வில் இள‌மையும் முதுமையும் உண்டு
இர‌வும் ப‌க‌லும் உண்டு
வாழ்வில் இள‌மையும் முதுமையும் உண்டு
உற‌வும் ப‌கையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
உற‌வும் ப‌கையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு

சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்

உறவை வ‌ள‌ர்ப்ப‌து அன்பு
ம‌ன‌ நிறைவைத் த‌ருவ‌து ப‌ண்பு
பொறுமையை அளிப்ப‌து சிரிப்பு
இதை புரிந்த‌வ‌ர் அடைவ‌து க‌ளிப்பு
உறவை வ‌ள‌ர்ப்ப‌து அன்பு
ம‌ன‌ நிறைவைத் த‌ருவ‌து ப‌ண்பு
பொறுமையை அளிப்ப‌து சிரிப்பு
இதை புரிந்த‌வ‌ர் அடைவ‌து க‌ளிப்பு
சிரிக்கத் தெரிந்தால் போதும்....

ம‌னித‌ன் மாறுவ‌தில்லை
அவ‌ன் மாறிடில் ம‌னித‌னே இல்லை
ம‌னித‌ன் மாறுவ‌தில்லை
அவ‌ன் மாறிடில் ம‌னித‌னே இல்லை
வ‌ந்திடும் அவ‌னால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை

சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்

அவர்க்கும் எனக்கும் ...

அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
அருள் புரிந்ததும் கதையா
அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
அருள் புரிந்ததும் கதையா

நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்
நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்
நேசம் கொண்டதுவும் கனவா
அவர்க்கும் எனக்கும்...

இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
பிரிப்பதே உந்தன் செயலா
இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
பிரிப்பதே உந்தன் செயலா
மணக்க மணக்க மலர்ந்த மலரை
மணக்க மணக்க மலர்ந்த மலரை
சிதைப்பதே உந்தன் தொழிலா
அவர்க்கும் எனக்கும் ....

அணைக்கும் அன்னை நீயே என்று
அணைக்கும் அன்னை நீயே என்று
அகிலம் சொல்வதும் தவறா
அணைக்கும் அன்னை நீயே என்று
அகிலம் சொல்வதும் தவறா
துடிக்க துடிக்க எங்கள் அன்பை
துடிக்க துடிக்க எங்கள் அன்பை
பிரிப்பதே உந்தன் சதியா
துடிக்க துடிக்க எங்கள் அன்பை
பிரிப்பதே உந்தன் சதியா
பிரிப்பதே உந்தன் சதியா

அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
அருள் புரிந்ததும் கதையா

ஆசை வைக்கிற ....

ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய்....மாமா....மாமா...

வம்புபண்ணி சண்டைக்கு நின்னா
அன்பு வளருமா? -
அது வளர்ந்தாலும் நீ நினைக்கிற
இன்பம் மலருமா? (ஆசை)


நீ திரும்பிப் பார்க்கும்போது
மனசு திருட்டுப் போகுது -
கண்ணே திருட்டுப் போகுது
சம்மதத்தைச் சொல்லப் போறியா? -
இல்லே என்னைச் சமயம் பார்த்துக் கொல்லப் போறியா?
ஒன்னைக் கண்டாலே கண்ணை எரியுது
காதல் எப்படி மொளைக்கும்? -
ஒங் கனவு எப்படிப் பலிக்கும்?
கையைத் தொடாதே கையைத் தொடாதே -
மானம் காற்றிலே பறக்கும்
மாமோய்....மாமா...மாமா....

கணக்கு மீறி காடு இருக்குது
அடுக்கு மாடி வீடு இருக்குது
அதுக்கு மேலே பணம் இருக்குது
மானே உனக்கு!
அத்தனையும் பாதுகாக்கும் கவலை எனக்கு -
நீ கல்யாண தேதி வைக்கிறியா? -
இல்லே இப்போ காவிக்கடைக்கு ஆள் அனுப்பறியா? கண்ணே....கண்ணே....கண்ணே....
என்னய்யா நீயும் ஒரு ஆம்பளையா?
சும்மா இளிக்கிறியே
சொன்னதெல்லாம் விளங்கலியா?
உண்மையா நீ எனக்கு மாப்பிள்ளையா?
வந்தாலும் ஒட்டாது கசந்துபோகும் வேப்பிலையா?
மாமோய்...மாமா....மாமா....(ஆசை)

நினைக்கும் போது ...

நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ?
நிறைந்த உறவில் கனிந்த காதல்
நிலையிதுதானோ?
அணையை மீறும் ஆசை வெள்ளம்
அறிவை மீறுதே
அதையும் மீறி பருவகாலம்
துணையைத் தேடுதே!....(நினைக்கும் )

சுவரில்லாத வீடுமில்லை
உயிரில்லாத உடலுமில்லை
அவரில்லாமல் நானுமில்லை அன்பு சாட்சியே!
உனக்கு நானும் எனக்கு நீயும்
உரிமைத்தேனேன்று கணக்கில்லாத கதைகள் பேசிக்
கலந்ததை இன்று......(நினைக்கும் )

என்றும் இல்லாமல் ...

என்றும் இல்லாமல்
ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ?

எண்ணங்கள் பண்பாடுது
கண்களும் எங்கோ வழிதேடுது -
எது வேண்டியோ வாடுது ஆடுது
மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது -
என்றும் ....

வீசும் தென்றல் காதோடு பேசிடும்
பாஷை நானறியனே
வெறும் போதையோ ஆசையோ மாயமோ -
இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ -
என்றும் ......

அதிசயம் பார்த்தேன் ...

தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து
அறங் காக்கும் மக்களிடம்
பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே-
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே-
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே

மூணுபக்கமும் கடல் தாலாட்டுது-
தன்மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்துவந்து நிலத்தை நீராட்டுது-
பல வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது (அதிசயம் )

மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு-
அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு,
மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு (அதிசயம் )


அங்கே- சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும்-
தழுவி சந்தமிசைத்துத்
தென்றல் தவழ்ந்து வரும் செந்தாழை மலர்தொட்டு
மணம்சுமந்து வரும்
இங்கே- தங்கிட நிழலுமில்லை
பொங்கிடக் கடலுமில்லை-
சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை
நம்மை தழுவிடத் தென்றலெதும் வருவதில்லை.

பாலாற்றில் ....

பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
மேனி பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது

தேனாற்றில் நீராடுது
அழ‌கு தேரோடுது
மனது போராடுது
காதல் தேனாற்றில் நீராடுது
அழ‌கு தேரோடுது
மனது போராடுது

ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஈரேழு வயதில் மாறுது
அது ஏதேதோ க‌தைகள் கூறுது

எண்ணிர‌ண்டு வ‌ய‌தினிலே
க‌ண்ணிர‌ண்டு மாறுப‌ட்டு
எண்ணிர‌ண்டு வ‌ய‌தினிலே
க‌ண்ணிர‌ண்டு மாறுப‌ட்டு
பெண்ம‌ன‌து ஊஞ்ச‌லாடுது
அத‌ன் பேச்சும் மூச்சும் வேகமாகுது

பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழ‌கு தேரோடுது
மனது போராடுது

கோடைக்கால‌ மாலையிலே
குளிர்ந்த‌ ம‌ல‌ர்ச் சோலையிலே
கோடைக்கால‌ மாலையிலே
குளிர்ந்த‌ ம‌ல‌ர்ச் சோலையிலே
வாடைத் தென்றல் இரண்டும் வ‌ந்த‌து
உன் ஆடை தொட்டு ஆடுகின்ற‌து
ஆடை தொட்ட‌ தென்ற‌லுக்கா
அத்தை ம‌க‌ள் சொந்த‌மென்று
ஆடை தொட்ட‌ தென்ற‌லுக்கா
அத்தை ம‌க‌ள் சொந்த‌மென்று
காளையுள்ள‌ம் வாடுகின்ற‌து
எண்ண‌ம் க‌ரை க‌ட‌ந்து ஓடுகின்றது

பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழ‌கு தேரோடுது
மனது போராடுது

மயங்காத மனம் ...

மயங்காத மனம் யாவும் மயங்கும்
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்

அழகின் முன்னாலே ........ஓ ராஜா ஓ ராஜா
அழகின் முன்னாலே அடிமையன்றோ உலகம்
அறிந்து கொள்வீரா ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்

கன்னத்திலே பழ தோட்டம்
கண்களிலே சதிர் ஆட்டம்
கன்னத்திலே பழ தோட்டம்
கண்களிலே சதிர் ஆட்டம்
கட்டழகு பெண் சிரித்தால் காளையர்க்கு போராட்டம்
கட்டழகு பெண் சிரித்தால் காளையர்க்கு போராட்டம்
உணர்ந்து கொண்டாலே உணர்ந்து கொண்டாலே
உறங்கிடுமோ இளமை
உறவு கொண்டாடும் ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்

கருமுகில் காண வரும் கண்டவுடன் நாணமுரும்
கருமுகில் காண வரும் கண்டவுடன் நாணமுரும்
கன்னியர்தம் கூந்தலுக்கு
கப்பம் கட்டி வாழ்ந்து வரும்
கன்னியர்தம் கூந்தலுக்கு
கப்பம் கட்டி வாழ்ந்து வரும்
புதுமை கண்டாலே புதுமை கண்டாலே
பசித்திடுமோ உமக்கு
பொறுத்திடிவீரா ராஜா
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசை பார்வையாலே
மயங்காத மனம் யாவும் மயங்கும்

வெல்க நாடு ....

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்க செல்கவே

தாயின் ஆணை கேட்பதுக்கு
தலை வணங்கும் தங்கமே
தலை கொடுத்து தாயின் மானம் காத்திடுவாய் சிங்கமே
சென்று வா வென்று வா

குழலைப் போலை மழலை பேசும்
குழந்தைகளின் முத்தம்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்
கோல மொழி சத்தம்
உன் குன்று தோளில் புது பலத்தை
வழங்குமடா நித்தம்
சென்று வா வென்று வா

மகிமை கொண்ட மண்ணின் மீது
எதிரிகளின் கால்கள்
மலர் பறிப்பதில்லையடா
வீரர்களின் கைகள் மாவீரர்களின் கைகள்
சென்று வா வென்று வா

ஓங்கிய வாள் போன்ற வடிவமடா -
அவர் ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா
வேங்கைப் புலி மன்னனடா
வீரர்களின் தலைவனடா -
அவர் கட்டளைக்குக் காத்திருக்கும் வல்லவனே
களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே

இந்த பாடலை இயற்றியவர் கலைஞர் .கருணாநிதி அவர்கள் ..

ஒரு முதல்வர் இயற்றிய பாடலுக்கு இன்னொரு முதல்வர் நடித்த நிகழ்வு

திரை உலகிற்கே அதிசயம் தான் .

மாறாதையா மாறாது ...

மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா )

காட்டு புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையை கொடுத்து
கோபுரத்தின் மேலே நிக்க வைத்தாலும்
வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது


மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது
காத்துல விளக்கை ஏத்திவச்சாலும் எரியாது
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் காலை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வாசாலும்
ஆடும் கண்களை அடக்கி வாசாலும்
(மாறாதையா )

கண்டி ...

கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா
கழுகுமலை பழனிமலை
கால்நடையாய்ப் போக வேணும்
எங்கந்தா, எம்முருகா-என்வேலா எங்குமரா
-ஆ-ஆ சுப்பிரமணியா-ஆறுமுகா-
நீ கண்திறந்து பார்த்திடய்யா

எட்டுஜாண் குச்சிக்குள்ளே...
கந்தையா எத்தனை நாளிருப்பேன்
எட்டுஜாண் குச்சிக்குள்ளே-
கந்தையா எத்தனை நாளிருப்பேன்-
ஒரு மச்சுவீடு கட்டித் தாருங்காணும்-
உச்சி மலையின் மேலோனே-
ஒரு (மச்சு வீடு) சட்டியில் சேர்ந்ததெல்லாம்-
கந்தா உன் சன்னதி சேர்த்திடுவேன் (சட்டியில்)

மொட்டை ஆண்டி ஒன்னை முழுசாவே நம்புறேன்
மோட்சம் தந்திடப்பா-அட (மொட்டை)
தீராத வினைகளெல்லாம்
தீர்த்து வைப்பார் கோவிந்தம்
மாறாத மனசையெல்லாம்
மாத்தி வைப்பார் கோவிந்தம்!
பட்டை நாமம் கண்டால் பசி தீர்ப்பார் கோவிந்தம்-
உன் கட்டை கடைந்தேறக் கைகொடுப்பார் கோவிந்தம்!
கோவிந்தம் கோவிந்தம்
கொடுத்தா புண்ணியம் கோவிந்தம்!
ரகுராமா ரகுராமா நடுத்தெருவிலே என்னை விடலாமா?

அடப்பாவிகளே பாவிகளே
பார்த்துட்டு சும்மா போறீங்களே!
கோவிந்தம் கோவிந்தம் கோவப்படாத கோவிந்தம்!
மானாகி,மயிலாகி,மானாகி,
மயிலாகி நானாகி,நீயாகி,
வடிவாகி வந்த வடிவே-ஏ-ஏ

பெண்ணாகி,ஆணாகி,பேச்சாகி மூச்சாகி
-அடேயப்பா
பெண்ணாகி ,ஆணாகி,பேச்சாகி,மூச்சாகி
கண்ணாலே கொல்லும் கண்ணே-
கண்ணே கண்ணே கண்ணே கண்ணே
கண்ணே உடம்பை நம்பாதே-
கண்ணே உடம்பை நம்பாதே (உடம்பை)

உயிர் பிரிந்த பின்னே-
இது ஒன்றுக்கும் உதவாத மண்ணே
உடம்பை நம்பாதே-கண்ணே
உடம்பை நம்பாதே

Tuesday, June 10, 2008

தொட்டுக் காட்டவா ....

தொட்டுக்காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக்காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் தேஜசோடு வட்டம் போடவா
லலலலா..பப்பாரப்பா
தொட்டுக்காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக்காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் தேஜசோடு வட்டம் போடவா

அதுவாய் கனிவதும் உண்டு
அடித்தால் கனிவதும் உண்டு
சங்கீத ஞானமும் சரசமும் சுகமும்
தானே வருவதும் உண்டு
இசையை ரசிப்பதும் உண்டு
இடையை ரசிப்பதும் உண்டு
எதிலே விழுந்தால் சுகமோ
அதிலே இதயம் படிவதும் உண்டு
...........தொட்டுக்காட்டவா மேலை..................

தாளத்தில் விளைவது பாடல்
தாகத்தில் விளைவது காதல்
தள்ளாடும் இடையுடன் நடமிடும் பெண்ணின்
கண்ணே காதலின் வாசல்
ஆசையை தருவது மேனி
ஆசையை துறந்தவன் ஞாநி
அஞ்சாமல் நடப்பதும் மேநியை பார்ப்பதும்
நவீன உலகத்தின் பாணி
..............தொட்டுக்காட்டவா மேலை...............

பொம்பளை சிரிச்சா போச்சி ....


பொம்பளை சிரிச்சா போச்சி
புகையிலை விரிச்சா போச்சி
பெண்ணே உனக்கென்ன ஆச்சி
நெருப்பா கொதிக்குது மூச்சி
பொம்பளை சிரிச்சா போச்சி
புகையிலை விரிச்சா போச்சி
பெண்ணே உனக்கென்ன ஆச்சி
நெருப்பா கொதிக்குது மூச்சி
நெருப்பா கொதிக்குது மூச்சி

நேரத்துக்கு ஆயிரம் பேச்சி
உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சி
கூடை பந்தாடும் கூந்தல் தள்ளாடும்
மேனாட்டு நாகரிகம்
மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும்
போராட்டம் என்ன கோலம்
கூடை பந்தாடும் கூந்தல் தள்ளாடும்
மேனாட்டு நாகரிகம்
மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும்
போராட்டம் என்ன கோலம்
பெண்ணை பெண்ணாக பார்க்க வேண்டும்
சேலை நான் தரவா
பெட்டை கோழியை காவல் காக்க
சேவல் நான் வரவா
..........பொம்பளை சிரிச்சா..............

கால்கள் பின்னாலும் நாணம் முன்னாலும்
செல்கின்ற பெண்மை கோலம்
கொஞ்சும் அன்போடு பொங்கும் பண்பாடு
நம் நாட்டு நாகரிகம்
பூவும் பொட்டோடும் வீடு காக்கும் தெய்வம் பெண்ணல்லவோ
பூவும் பொட்டோடும் வீடு காக்கும் தெய்வம் பெண்ணல்லவோ
பூவை என்று உன்னை சொல்ல பூவை சூடம்மா
..........பொம்பளை சிரிச்சா...............

கங்கை என்றாலும் எங்கே சென்றாலும்
கடலை கண்டாகவேண்டும்
காட்டு பெண்ணான வள்ளி என்றாலும்
முருகன் வந்தாக வேண்டும்
கங்கை என்றாலும் எங்கே சென்றாலும்
கடலை கண்டாகவேண்டும்
காட்டு பெண்ணான வள்ளி என்றாலும்
முருகன் வந்தாக வேண்டும்
யாரோ ஒருவன் நாளை வருவான் உன்னை பெண்ணாக்க
யாரோ ஒருவன் நாளை வருவான் உன்னை பெண்ணாக்க
பெண்ணே நீயும் மாற்றி விடாதே அவனை பெண்ணாக
.........பொம்பளை சிரிச்சா................

ஜல் ஜல் ஜல் ...

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே


காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்றே
கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்
(ஜல் ஜல் )


அவனே திருடன் என வந்தான்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
(ஜல் ஜல் )


இன்றே அவனை கைதி செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது
(ஜல் ஜல் )

மானைத் தேடி ...

ஜிம்ம்பக்க ஜிம்ப்ப ஜிம்ம்ப ஜிம்ம்ப ஜிம்ப்பா...
ஓஹோ ஹோ ஹோய்...
ஜிம்ம்பக்க ஜிம்ப்ப ஜிம்ம்ப ஜிம்ம்ப ஜிம்ப்பா...
ஓஹோ ஹோ ஹோய்... ஓ...ஓ.........
ஹோ ஹோ ஹோ ஹோய்...
ஜில் ஜில் ஜில் ஜோருக்க ஜம்ப்ப ஜொருக்க ஜம்ப்ப ...
ஹோஹோய்..
ஜிம்ம்பக்க ஜிம்ப்ப ஜிம்ம்ப ஜிம்ம்ப ஜிம்ப்பா.
ஓஹ் ஹோஹோ ஹோஹோ ஓஓ...

மானை தேடி மச்சான் வர போறான்
ஹய் வர போறான்
தாளத்தோட தாலி கட்ட போறான்
ஹய் கட்ட போறான்
மானை தேடி மச்சான் வர போறான்
ஹய் வர போறான்

தாலி கட்டும் வீரன் அவன் யாரு
ஹய் எந்த ஊரு
மாலை கட்ட வேணும் கொஞ்சம் கூறு
ஹய் என்ன பேரு

மானை தேடி மச்சான் வர போறான்
ஹய் வர போறான்

போதும் போதும் கேலி சும்மா போடீ....
ஹேய் பொடி வச்சி பேசும் வம்புக்காரி
போதும் போதும் கேலி சும்மா போடீ....
ஹேய் பொடி வச்சி பேசும் வம்புக்காரி
சின்னஞ்சிறு அன்னம்
நீ எண்ணும் பல எண்ணம்
முன்னும் பின்னுமாக வந்து மின்னும்
பிறகு என்ன பண்ணும்..
உறவு வந்து பின்னும்...
அழகிலே நடையிலே சுகமெல்லாம் வளர்ந்து விடுமோ
ஆசை பொங்கும் தோட்டம்
அமுதூட்டும் பழ தோட்டம்


என்னன்னமோ சொல்லி என் மனதை கிள்ளி
என்னன்னமோ சொல்லி என் மனதை கிள்ளி
இங்கும் அங்கும் ஓட வைக்கும் கள்ளி...ஹேய்...
இங்கும் அங்கும் ஓட வைக்கும் கள்ளி
பருவம் வந்து துள்ளி உருகுறாளே வள்ளி ...

மானை தேடி மச்சான் வர போறான்
ஹய் வர போறான்
தாளத்தோட தாலி கட்ட போறான்
ஹய் கட்ட போறான்
மானை தேடி மச்சான் வர போறான்
ஹய் வர போறான்
ஜிம்ம்பக்க ஜிம்ப்ப ஜிம்ம்ப ஜிம்ம்ப ஜிம்ப்பா...
ஓஹோ ஹோ ஹோய்...
ஜிம்ம்பக்க ஜிம்ப்ப ஜிம்ம்ப ஜிம்ம்ப ஜிம்ப்பா...
ஓஹோ ஹோ ஹோய்... ஓ...ஓ.........
ஹோ ஹோ ஹோ ஹோய்...

தடுக்காதே ...

தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தளுக்கி மினிக்கி என் மனச கெடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே

முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே வேசம் போடாதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே

உன்னையே நம்பினால் பிழைக்க முடியுமா
ஊருக்குள்ளே நிமிர்ந்து நடக்க முடியுமா
சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா ?
வேற வழி ஏதம்மா
சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா ?
வேற வழி ஏதம்மா

தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே

சோறு கண்ட இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா
சோறு கண்ட இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா
தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா
தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா

முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே

ஓசி சோத்துல உடம்ப வளத்துட்டேன்
மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன்
வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்
வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்

தடுக்காதே என்னை தடுக்காதே......ஹே..
தடுக்காதே என்னை தடுக்காதே

தந்தன்னா பாட்டு பாடணும்.....

தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்
அடி கிண்ணிகிணி கிண்ண்கிணி கிண்ண்கிணி
சுத மாங்கனி மாங்கனி தவமணியே
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்

பாம்பை கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்
பாம்பைக்கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்
இந்த பட்டாளத்து வீரரை நம்பினால் கட்டாயமா ஓட்டை ஏந்தி..
தந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்

பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே
பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே
சத்தியமா நீ உத்தமியா இந்த கத்தி முனையிலே
என்னை வெத்து பய போல எண்ணாதே
இந்த கத்தி முனையிலே
என்னை வெத்து பய போல எண்ணாதே
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணும்

அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்
அம்மனை சேவிக்க வந்திடணும்
அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்
அம்மனை சேவிக்க வந்திடணும்
இந்த அம்மனும் கிம்மனும் நிம்மதியாக
இந்த சாமிய சேவிக்க வந்திடணும்
சாமிய சேவிக்க வந்திடணும்
இந்த சாமிய சேவிக்க வந்திடணும்
அம்மன் தான் உலகில் சிறந்தது..
சாமி தான் சால சிறந்தது
அம்மன் தான் உலகில் சிறந்தது..
சாமி தான் சால சிறந்தது
ஆக அம்மனும் சாமியும் சம்மந்தபட்ட
அதைவிட சால சிறந்தது ஏது?
தந்தன்னா பாட்டு பாடணும்
துந்தன்ன தாளம் போடணு

வெல்கம் ஹீரோ ....

Welcome hero happy marriage
காஷ்மீரில் தேன் நிலவு
பள்ளி பாடம் சொல்ல கேட்கும்
பெண்ணல்லவோ பால் நிலவு
கன்னி மயில் பெண் இவளோ மேரி
கட்டியதே இல்ல இவள் சாரி
பாரிஸ் லண்டன் சென்று வந்த
பெண்ணுங்க பொன்னழகு மின்ன உடல் மார்பிள்
கன்னமது தின்ன வரும் ஆப்பிள்
பார்க்க பார்க்க போதை ஊட்டும் கண்ணுங்க
ஏங்கி நின்றாடும் இடையோ பிடில் போலே
ஏங்கி நின்றாடும் இடையோ பிடில் போலே
காதல் காவியம் பாடிட கேட்கும்
அஹா அஹா ஜுனக்கு தா ஜுனக்கு தா ஓகே

மேரி சாரி ஆப்பிள் கீப்பில் ஒன்னுமே புரியலையே

கண்ணகி போல் பெண் மணியை பார்த்து
கார்த்திகையில் கையோடு கை சேர்த்து
மாலை இட்டு தாலி கட்ட செய்யுங்க
கார்த்திகையில் கையோடு கை சேர்த்து
மாலை இட்டு தாலி கட்ட செய்யுங்க
இல்லறமே நல்லறமாய் கொண்டு
வள்ளுவனார் வாசுகி போல் வந்து
வாழபோகும் பாவை உண்டா சொல்லுங்க
நாளை பார்க்கோனும் ஊரை அழைக்கோனும்
நாளை பார்க்கோனும் ஊரை அழைக்கோனும்
மேள வாத்தியம் ஊர்வலம் போக
மேள வாத்தியம் ஊர்வலம் போக
பிப்பிபி டுடுடுடும்ம்

சின்ன இடை பின்னி வரும் பாபி
செல்ல மனம் கிள்ள வரும் பேபி
ஆடி பாடும் டீன் ஏஜ் கேர்ள் ஐ பாருங்க
கன்னி இவள் தந்தை ஒரு சீமான்
கப்பலிலே பங்குகளை பெறும் கோமான்
ஆஸ்திக்கெல்லாம் இந்த பொண்ணு தானுங்க
வான வேடிக்கை பாண்டு கச்சேரி
வான வேடிக்கை பாண்டு கச்சேரி
காரில் ஊர்வலம் சம்மதம் தானா
அஹா அஹா ஜுனக்கு தா ஜுனக்கு தா என்ன

பாபி பேபி ஏஜ் உ கேர்ள் உ போச்சு டா

கார்குழலை ஆம்பளை போல் வெட்டி
காதுகளில் கை வளையல் கட்டி
நேரில் வந்தால் எதோ போல தோணுங்க
காசு பணம் என்னிடமும் உண்டு
காடு வயல் எத்தனையோ உண்டு
தேவை எல்லாம் தெய்வம் போல பொண்ணுங்க
தும்பை பூ போலே துளசி செடி போலே
தும்பை பூ போலே துளசி செடி போலே
பொண்ணை பாருங்க மாப்பிள்ளை இணங்க

பபபபா துடுத்து தும்
Welcome hero happy marriage
காஷ்மீரில் தேன் நிலவு
பள்ளி பாடம் சொல்ல கேட்கும்
பெண்ணல்லவோ பால் நிலவு

சின்னஞ் சிறு சிட்டே ....

சின்னஞ் சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே வா பொன்வண்டே
கிட்டே வா பொன்வண்டே

கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ..
நீ கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து செய்யாதே தாஜா
செய்யாதே தாஜா

சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே

ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே வா பொன்வண்டே
கிட்டே வா பொன்வண்டே
சிட்டு என்றும் பட்டு என்றும்
ஊரை ஏய்க்க பாக்குற
தட்டாதே என் சொல்லை
டௌலத் உன்னை ஏய்க்க பாக்கல
நான் உன்னை ஏய்க்க பாக்கல
கட்டிகொள்ளும் முன்னே நம்ப மாட்டாள் புல்புல்லே
நம்ப மாட்டா புல்புல்லே

சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டி
கொஞ்சம் கிட்டே வாயேண்டி
சீமான் எந்தன் நெஞ்சை தொட்டு தான் பாரேண்டி
தொட்டு தான் பாரேண்டி

கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா
என் கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா
நீ செய்யாதே தாஜா

நம்ப செய்து ஓடி போனால்
நான் என்ன செய்வது
நல்லா இல்லே எந்தன் மேலே
சந்தேகம் நீ கொள்வது
வீண் சந்தேகம் நீ கொள்வது
அல்லா மேலே ஆணை
உன்னை நிக்கா செய்வது நிக்கா செய்வது...

கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா
என் கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து
செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா
சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே
வா பொன்வண்டே கிட்டே வா பொன்வண்டே

உன்னை விட மாட்டேன் ...

உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம்.. கண்டுகொண்டேனே
உண்மைதானே
(உன்னை)


பெண்ணை லேசாய் எண்ணிடாதே
பேதை என்றே இகழ்ந்திடாதே
அன்பு கொண்டால் அமுதம் அவளே
வம்பு செய்தால் விஷமும் அவளே
இன்பக் காதல் இழக்க நேர்ந்தால்
கொஞ்சமேனும் பொறுக்க மாட்டாள்
(உன்னை)


பொங்கும் கடலின் ஆழம்தன்னை
புரிந்து கொள்ளல் மிகவும் எளிது
பெண்கள் நெஞ்சின் ஆழம்தன்னை
இங்கு யாரும் காணல் அரிது
மானைப் போலே வாழும் மங்கை
வன்மம் கொண்டால் பாயும் வேங்கை
(உன்னை)

Monday, June 9, 2008

தர்மம் தலை காக்கும் ...

தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு,..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு


தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்

பாடல் :கண்ணதாசன்

இசை :கே .வி .மகாதேவன்

பாடியவர் :டி .எம் .சௌந்தராஜன்

ஆண்டவன் உலகத்தின் முதலாளி ...


பாடல் :ஆலங்குடி சோமு
பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்
இசை :கே.வி.மகாதேவன்


ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருகு போன்ற தான் கருத்தை நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி


ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
கல்லை கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒரு நாள் திரும்பும்
அதில் நல்லவர் வாழும் சமுதாயம்
நிச்சயம் ஒரு நாள் மலரும்

வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வாழ்க்கை என்றொரு பயணத்திலே
பலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

சித்திரச் சோலைகளே ...

சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே

நித்தம் திருத்திய நேர்மையினால்
மிகு நெல்விளை நன்னிலமே!
உனக்கெத்தனை மாந்தர்கள்
நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே

தாமரை பூத்த தடாகங்களே!
உமைத்தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச்சொல்லவோ ஞாலத்திலே!

மாமிகு பாதைகளே!
உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார்
அவர் ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்


ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?

கீர்த்திகொள் போகப்பொருட்புவியே!
உன்றன் கீழிருக்கும் கடைக்கால்
எங்கள் சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்!

நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே!
உம்மைச்சாரும் புவிப்பொருள் தந்ததெவை?
தொழிலாளார் தடக்கைகளே! தாரணியே!
தொழிலாளர் உழைப்புக்குச்சாட்சியும் நீயன்றோ?
பசி தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதிநன்றோ ?

எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே
சிங்க ஏறுகள் ஏங்கிடுமோ?
இனிப்புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே
பெரும் புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார்
இனிக்கெஞ்சும் உத்தேசமில்லை
சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார்
இந்த வார்த்தைக்கு மோசமில்லை

இந்த பாடலை தயாரிப்பாளரின் பெறும் எதிர்ப்புக்கு இடையே இந்த படத்தில்

கட்டாயப் படுத்தி எம்.ஜி.ஆர் சேர்த்ததாக கமலஹாசன் ஒரு முறை நினைவு

கூர்ந்தார் .

புதியதோர் உலகம் செய்வோம் ...

புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (புதிய)

பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய)

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம் (புதிய)

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய)

சிரிக்கின்றாள் இன்று ...

பாடல் :வாலி
இசை :டி.ஆர்.பாப்பா
பாடியவர்கள் :சீர்காழி கோவிந்தராஜன்,சுசீலா


சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
(சிரிக்கின்றாள்)


அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
உள்ளத்தாமரை மலராதோ ?
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ ?
இருண்ட பொழுதும் புலராதோ ?
(சிரிக்கின்றாள்)


தேன் மலராடும் மீன் விளையாடும்
அருவியின் அழகைப் பாரீரோ
நான் வரவில்லை என்பதனால்
உன்மீன் விழி சிந்திய கண்ணீரோ
மலர் மழை போலே மேனியின் மேலே
குளிர் நீரலைகள் கொஞ்சிடுதே
தளிர்ப் பூங்கொடியைத் தழுவி இருந்தே
குளிர் காய்ந்திடவே கெஞ்சிடுதே
குளிர் காய்ந்திடவே கெஞ்சிடுதே


சிரிக்கின்றோம் இன்று சிரிக்கின்றோம்
சிந்திய கண்ணீர் மாறியதாலே
சிரிக்கின்றோம் இன்று சிரிக்கின்றோம்

மாசி மாசக் கடைசியிலே ....

மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு

ஆத்துப்பக்கம் தோப்புபக்கம் சந்திக்க சொன்னாரு
அடி அக்கம் பக்கம் மெதுவா பாத்து எனையும் பாத்தாரு
ஆத்துப்பக்கம் தோப்புபக்கம் சந்திக்க சொன்னாரு
அடி akkam பக்கம் மெதுவா பாத்து எனையும் பாத்தாரு
போகுமட்டும் கூந்தலை மட்டும் கண்ணில் அளந்தாரு
அட பச்ச புள்ளய போலே அள்ளி நெஞ்சில வச்சாரு
அம்மமோஓஒ வச்சாரு
ஆசையிலே புடிசாறு அர்த்தத்தோட சிரிச்சாரு
(மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு )

கட்டிதங்கம் மேனி என்ன கட்டி அணைச்சாரு
நான் கட்டி கொண்ட சேலைய
மெல்ல தொட்டு இழுத்தாரு
கட்டிதங்கம் மேனி என்ன கட்டி அணைச்சாரு
நான் கட்டி கொண்ட சேலைய
மெல்ல தொட்டு இழுத்தாரு
அச்சப்பட்டு நாணப்பட்டு நிக்கிற வேளையிலே
அவர் ஆசைப்பட்டு ஒண்ணே ஒன்னு தந்திட சொன்னாரு
அம்மமோஒ ஆ சொன்னாரு
ஒன்னு மட்டுமா கொடுத்தேன்
உள்ளதையே தான் கொடுத்தேன்
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு

aagaye

Aa Gaye hain woh
Aaj inka inthazaar
Dil-e-bekaraar ko Mil gaya
karaar Jhoom utti daaliyaan Khil gaye
hain fool Maano phir chaman mein
agayi bahaar

Ladke se mili ladki
Ladki se mila ladka
Dono ka dil phir Eh kahke dhadka
Kaise?
Dhak dhak dhak
Koyi nahin hain mera yahaan
Meri jaan apna bana lo mujhe Dushman
mohabbat ka saara jahaan
Palkon mein apni chupa lo mujhe

Dekha hai jab se tuj ko sanam
Is dil ki kasam hum tere huye
Tu chand bankar badle se niklaa
Door nazar se andhere huye
Alkon mein rahoon teri
Palkon mein rahoon teri
Alkon mein rahoon teri
Palkon mein rahoon teri

Aahon mein raho meri
Baahon mein raho meri
Aahon mein raho
Baahon mein raho Chaahon mein raho
Raahon mein raho Aahon mein raho meri
Baahon mein raho meri
Lekin dar hai mujko
Arre, kyaa dar hai tujko?
Yeh saath rahen kab tak?
Dhadkan dil me jab tak

பொங்கும் கடலோசை ...

பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
((பொங்கும் கடலோசை))

பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ ?
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ ??
((பொங்கும் கடலோசை))

வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன்மலைக்காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை மேடையில்
மீனவன் நாடகம் நடிப்பது மேனோ ?
((பொங்கும் கடலோசை))

அமுத தமிழில் எழுதும் கவிதை .....

அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ (2)

இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ (2)

ஞானம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும்
நெஞ்சில் மிதப்பதென்ன
உன்னை ஒரு கணமும்
என்னை மறு கணமும்
உள்ளம் நினைப்பதென்ன (2)
நாதம் இசைத்துவரும் பாத மணிச்சிலம்பு
என்னை அழைப்பதென்ன
ஊஞ்சல் அசைந்துவரும் நீல விழி இரண்டின்
வண்ணம் சிவப்பதென்ன

எதுகை அது உனது இருக்கை
அதில் எனது பெண்மை ஆடட்டுமே
ஒரு கை குழல் தழுவ
மறுகை உடல் தழுவ இன்பம் தேடட்டுமே (2)
வைகை என்னை நெருங்கி
வைகை அணை மதுரை
வைகை அணை போலவே
மங்கை எனும் அமுத கங்கை
பெருகுவது நீந்தி கரை காணவே

பாடல் :புலமைபித்தன்

இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள் :வாணி ஜெயராம் ,ஜெயச்சந்திரன்

மங்கலம் பொங்கும் ....

மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு
புகழ் மனத்தோடு கதிர் போலே வாழிய நீடு
சங்கமம் கண்ட கவித்திற நாடு
எங்கள் சந்தன தமிழுக்கு வேறெது ஈடு
இன்னிசை தென்றல் காவியம் பாட
புது எழிலொடு மலர் பூத்து சோலையிலாட
பெண்கள் சிரிக்க முத்துக்கள் திறக்க
உயர் பெண்மையின் கற்பெனும் தீக்கனல் பறக்க
அன்பு மலர்ந்திட பண்பு வளர்ந்திட
அறமே வாழ்க
தென்னை செழித்திட கன்னல் தழைத்திட
திருவே வாழ்க
தண்டை குலுங்கிட தாளம் முழங்கிட
கலையே வாழ்க
நெஞ்சு மகிழ்ந்திட கொஞ்சும் பசுங்கிளி
தமிழே வாழ்க செந்தமிழே வாழ்க
பரத கலையே வாழ்க...

புதுமை பெண்கள்

புரட்சி கலை கவிதை நடையே
பொங்கி பெருகும் கங்கை நதியே
பெண்ணின் பெருமை பேசும் அழகே
புதுமை பெண்ணே வருக வருக

புதுமை பென்ன்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
இளமைக்காதல் உரிமைப்பாடல்
இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு
என்றே நாம் பாடுவோம்
அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம்
அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம்


அச்சம் என்றும் நாணம் என்றும்
அடக்கி வைத்தார்கள் ஆண்கள் நம்மை
ஆள திட்டம் தீட்டி வைத்தார்கள்
தீமை தன்னை என்னும் போது அச்சம் கொள்ளுங்கள்
பாவம் வந்து சேரும் போது வெட்க்கம் கொள்ளுங்கள் !
புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி
இதை பண் பாடி சொன்னான் பாரதி

கடவுள் எனும் முதலாளி ...


கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...

முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி ... விவசாயி ....

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி ....

நல்ல நல்ல நிலம் பார்த்து ...

நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கண்ணும்
(நல்ல...)

பள்ளி என்ற நிலங்களிலே
கல்விதனை விதைக்கணும்
பிள்ளைகளை சீர்திருத்தி
பெரியவர்கள் ஆக்கணும்
(நல்ல...)

கன்னியர்க்கும் காளையர்க்கும்
கட்டுப்பாட்டை விதைத்து
கற்பு நிலை தவறாது
காதல் பயிர் வளர்த்து (2)
அன்னை தந்தை ஆனவர்க்கு
தம் பொறுப்பை விதைத்து
பின் வரும் சந்ததியை
பேணும் முறை வளர்த்து
இருப்பவர்கள் இதயத்திலே
இரக்கமதை விதைக்கணும்
இல்லாதார் வாழ்க்கையிலே
இன்பப் பயிர் வளர்க்கணும்
( நல்ல...)

பார் முழுதும் மனிதக்குலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து(2)
போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
( நல்ல...)

Sunday, June 8, 2008

வெள்ளி நிலா முற்றத்திலே ....

வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே

வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு
வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய

முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய

நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே

Saturday, June 7, 2008

பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்டே
கழுத்த நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்

மாங்கா திருடி திங்குற பொன்னே
மாசம் எத்தனையோ ?
கொஞ்சம் மண்ணும் தாரேன் தின்னடியம்மா
மசக்கை தீரலியோ ? ((பொண்ணா ))

காயா ? இது பழமா ?
கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா ?
படு சுட்டி இளங் குட்டி
தண்ணி தொட்டியில் அழுதட்டுமா ?
பறிச்சாலும் துணி போட்டு மறைச்சாலும்
பெண்ணே
பளிச்சென்று தெரியாதோ
இள மாங்கா முன்னே ?

அட ராசாத்தி நடக்குமா ஏ-மாத்தி முழிக்கிறே
உன் புத்தி பெண் புத்தி பின் புத்தி ((பொண்ணா ))

குதிரே துள்ளிக் குடிச்சா இந்த சாட்டையில் அடக்குறவன்
இளங் குமரி என்னை கவனி
உன்னை பார்வையில் மடக்குறவன் !
காத்தாட்டம் ரேக் -ளாவில் பறந்தோடும் வீரன்
என்னை பார்த்தாலும் தெரியாது
படு வேலைக்காரன்
சிறு மான்குட்டி இனிக்கிற தேங்க்கட்டி
துடிக்கிற மீனாட்டம் கண்கட்டும் ((பொண்ணா ))

பருவம் இள உருவம் முழு வடிவம் காட்டுத்தடி
நின்னு பார்த்தா அடி ஆத்தா என்னை பாடா படுத்துதடி
பாவடை மேலாடை எல்லாமே தண்ணி
பூப்பூவா சொட்ட தான் நின்னாளே கன்னி
என் கண்பட்டு மயங்குது பூஞ்சிட்டு
மனkkuthu ஈரெட்டு வயதான இள மொட்டு ((பொண்ணா ))

நிலவு ஒரு பெண்ணாகி ...

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ

புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள் தானோ

பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீழ்ககழுதது அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்

சிரித்து வாழ வேண்டும் ....

சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
எங்கே சொல்லு
வணங்கும்
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
ஆசை இல்லா மனிதர் தன்னை
துன்பம் எங்கே நெருங்கும்
பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும்
பூவைப் போலே சிரிக்கும் உன்னைக்
கண்டால் உண்மை விளங்கும்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே


முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
வானில் நீந்தும் நிலவில் நாளை
பள்ளிக் கூடம் நடக்கும்
பள்ளிக் கூடம் நடக்கும்
காற்றில் ஏறி பயணம் செய்ய
பாதை அங்கே இருக்கும்
பாதை அங்கே இருக்கும்
எங்கும் வாழும் மழலைச் செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடிச் சிரிக்கும்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா

உலகம் உலகம் .....


உலகம் உலகம் உலகம் உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
காலமே ஓடிவா காதலே தேடிவா

பூமி எங்கும் பூமேடை பொங்கி பாயும் நீரோடை
மேகம் போடும் மேலாடை
மின்னல் வந்தால் பொன் ஆடை
மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
இள மாலையில் நான் அதை தர வேண்டும்
மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
இள மாலையில் நான் அதை தர வேண்டும்
காலமே ஓடிவா காதலே தேடிவா

உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிளைகலின் அரங்கம்
காலமே ஓடிவா காலமே தேடிவா
காலமே ஓடிவா காதலே தேடிவா

சிவந்த கன்னம் தாருங்கள்
சேதி கொஞ்சம் சொல்லுங்கள்
இதழ் இரண்டின் ஓரங்கள்
பருக வேண்டும் சாரங்கள்
தேவதை விரித்தது மலர் மஞ்சம்
அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம்
தேவதை விரித்தது மலர் மஞ்சம்
அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
காலமே ஓடிவா காதலே தேடிவா

இன்ப ஏக்கம் கொள்ளாமல்
எந்த நெஞ்சும் இங்கில்லை
இந்த எண்ணம் இல்லாமல்
எந்த நாடும் இன்றில்லை
உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும்
அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும்
உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும்
அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும்
காலமே ஓடிவா காதலே தேடிவா

உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடி வா காதலே தேடிவா
காலமே ஓடிவா காதலே தேடிவா

திருடாதே பாப்பா திருடாதே ...

திருடாதே பாப்பா திருடாதே
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே (திருடாதே ....)

சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ -
தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ (திருடாதே ....)

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது (திருடாதே ....)

கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது -
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா ஆ
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா
பதுக்குற வேலையும் இருக்காது
இனி ஓதுக்குற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா ஆ
உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது (திருடாதே
....)

உழைக்கும் கைகளே ...

உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
உண்டாக்கும் கைகாளே (உழைக்கும்)

ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே
ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே
சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
செக்க வானம் போல என்றும்
சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)

பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே
பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
பச்சை ரத்தம் வேர்வையாக
படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)

உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம்
ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம்
சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம்
தர்ம நீதி மக்கள் ஆட்சி
வாழ்கவென்றே ஆடுவோம்...
நாம் வாழ்கவென்றே ஆடுவோம்.... (உழைக்கும்)

Friday, June 6, 2008

எங்கே போய்விடும் காலம் ....

எங்கே போய்விடும் காலம்?-
அது என்னையும் வாழ வைக்கும்-
நீ இதயத்தை திறந்து வைத்தால்-
அது உன்னையும் வாழவைக்கும்

உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.

ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மூடி வைப்பார்
பொறுத்தவர்எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்

கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்

கட்டி தங்கம் வெட்டி எடுத்து ....

கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா ..(கட்டி)

தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்
நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு

தங்கரதம் போல வருகிறாள்
அல்லி தண்டுகள் போல வளைகிறாள்
குங்குமப் பூப்போல சிரிக்கிறாள்
இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்.. (கட்டி)

காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ
இரவில் மலரும் அல்லிப்பூ,
அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ..(கட்டி)

 https://youtu.be/kzzUVZoAIuE

மனுசன மனுஷன் ....

மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே

மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே
ஆனால் தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே
தானிய மெல்லாம் வலுத்தவருடைய கையிலே
இது தகாது இன்னு எடுத்து சொல்லியும் புரியலே
அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்ட தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
((என்னடா நெளிஞ்சிகிட்டு போற நேரா போடா )

தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு
அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே


அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே

ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
ஆணவதுக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமாம் சாமி போட்டு விடாதே தம்பி பயலே
பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
பூனையும் புலியாய் எண்ணி விடாதே தம்பி பயலே
உண்மை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா தம்பி பயலே டேய்

என்னம்மா ராணி ....

என்னம்மா ராணி... பொன்னான மேனி ...
ஆல வட்டம் போடவந்ததோ...
என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போடவந்ததோ
ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று
ஏழை பக்கம் சாடுகின்றதோ - ஆஹாஹ்
ஏழை பக்கம் சாடுகின்றதோ
உல்லாச தோட்டம் உருவாக்கும் கூட்டம்
பாட்டாளி மக்கள் அல்லவோ
உல்லாச தோட்டம் உருவாக்கும் கூட்டம்
பாட்டாளி மக்கள் அல்லவோ
உருவத்தை பார்த்து உள்ளத்தை மதிப்பது
மாபெரும் தவறல்லவோ - ஆஹாஹ
மாபெரும் தவறல்லவோ (என்னம்மா ராணி)

பட்டோடு பருத்தியை பின்னி எடுத்து
உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தா
பட்டோடு பருத்தியை பின்னி எடுத்து
உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தா
கட்டாந் தரையிலே கல்லை உடைத்து
உங்க கண்ணாடி மாளிகையை யார் படைத்தா
கட்டாந் தரையிலே கல்லை உடைத்து
உங்க கண்ணாடி மாளிகையை யார் படைத்தா - ஆஹாஹ
செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா
செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா (என்னம்மா ராணி)

பத்தும் பறந்தோடும் பசி பிணிக்கு
உங்க பவழமும் வைரமும் பயன் படுமா
பாரோர்க்கு பச்சரிசி படியளக்கும்
இந்த பண்பான மக்களிடம் அலட்சியமா - ஆஹாஹ
செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா
செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா


அத்தரிலே நித்தம் நித்தம் குளித்தாலும்
பட்டு மெத்தையிலே பூ விரித்து படுத்தாலும்
அத்தனையும் ஒரு நாள் முடிந்து விடும்
ஏழை அவசியம் அப்போது புரிந்து விடும் - ஆஹாஹ
செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா
செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா (என்னம்மா ராணி)

அங்கே சிரிப்பவர்கள் ..


அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ
ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது


வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....
(அங்கே சிரிப்பவர்கள் )


நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?
(அங்கே சிரிப்பவர்கள் )


தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
போகப் போகக் காட்டுகிறேன்
(அங்கே சிரிப்பவர்கள் )

கடலோரம் வாங்கிய காத்து ...

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

சிறு மணல் வீட்டில் குடிஏறும் நண்டானது
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது
பொங்கும் நுரையோடு கரை சேரும் அலையானது
இந்த பெண் பார்த்து நிலவென்று விளையாடுது

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது
அதை பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது
இடம் கொடுக்காமல் தளிர் கைகள் தடுக்கின்றது
வெட்கம் தாளாமல் இளம் நெஞ்சம் துடிக்கின்றது

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போடுதோ
இரு விழி கொண்டு என்னை பார்த்து எடை போடுதோ
ஒரு துணை வந்து விலை கொள்ள தடை போடுதோ
அதை நான் வாங்க அவள் நாணம் தடை போடுதோ

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ
காதலித்தாள் ஆறிடுமோ
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

திருவளர்செல்வியோ ...

திருவளர்செல்வியோ
நான் தேடிய தலைவியோ
நீ தென் பாங்கு திருமகளோ
பண்பாடு குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ
திருவளர்செல்வியோ
நான் தேடிய தலைவியோ


ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை
தேவை ஒரு காவிய செல்வம்
தேடாமல் தேடிய தெய்வம்
நீயானால் சம்மதம் அம்மா
நெஞ்சம் உன் சந்நிதி அம்மா
எல்லாம் உன்னோடு தானோ ஓ ஓ ஓ ஓஓஒ
(திருவளர்செல்வியோ நான் தேடிய தலைவியோ )


பஞ்சனை மேலே நெஞ்சினில் ஆடும் தோகை
என் பார்வை அறிந்து காலமறிந்த சேவை
மனதோடு காவல் இருந்து இம்ம்ம்ம்
மணவாளன் ஆசை அறிந்து இம்ம்ம்ம்ம்
உறவோடு ஊடல் புரிந்து இம்ம்ம்ம்ம்
நிலவோடு தேடும் விருந்து இம்ம்ம்ம்
எல்லாம் உன்னோடு தானோ
( திருவளர்செல்வியோ நான் தேடிய தலைவியோ ) லலலலல

மஞ்சள் அணிந்து குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை பின்னி எடுத்த நங்கை
நாணத்தில் ஆடிய பாதம்
ராகங்கள் பாடிய கண்கள்
மானத்தில் ஊறிய உள்ளம்
வரவேண்டும் நாயகன் இல்லம்
எல்லாம் உன்னோடு தானோ

நான் உங்கள் வீட்டு பிள்ளை ...

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை


நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை

காலம்தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும்
செயலே எந்தன் சேவை
காலம்தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும்
செயலே எந்தன் சேவை
இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்
இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும் (நான் உங்கள் வீட்டுப் பிள்ளை)

கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோவில்
பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
கோபுரமாகும் கொள்கை
(நான் உங்கள் வீட்டுப் பிள்ளை )

உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி

தாயில்லாமல் நானில்லை ....


தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் ( 2)
(தாய் இல்லாமல் நான் இல்லை)

தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
(தாய் இல்லாமல் நான் இல்லை)

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி


அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

Thursday, June 5, 2008

கண்ணென்ன கண்ணென்ன ...

பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை
பார்க்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே


கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
(பட்டணம் பார்த்த)

குங்குமத்தை சுமந்து கொண்டு
குலுக்கி வரும் சிங்காரி
குண்டு மல்லி பூவை கொண்டு
கொழஞ்சி வரும் ஓய்யாரி ( 2 )
கட்டி முகம் கொண்டவளே
காதல் பேச வந்தவளே
எட்டி எட்டி நின்னு நின்னு
தவிப்பதென்ன இருட்டிலே
(பட்டிகாட்ட பார்த்து )

ஆற்றங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா ?
அழகழகா ஆடை கட்டி பழக வந்த பருவமா ?( 2)
நேற்றிரவு வந்தவனா நெருங்க இன்பம் தந்தவனா
அவனா இவன் எனவே அசைவதென்ன விழியிலே
அங்கும் இங்கும் பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே

பட்டுப் பாவாடை எங்கே ...

கால் கட்டு கை கட்டு இல்லாத பெண்களுக்கு
காதல் இல்லை என்றாலும்
காவல் ஒன்று வேண்டுமம்மா
காவல் ஒன்று வேண்டுமம்மா....

பட்டுப் பாவாடை எங்கே
கட்டி வைத்த கூந்தல் எங்கே
பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா... சொல்லம்மா...
(பட்டுப் பாவாடை)

கட்டழகை ஆடை கொண்டு
சுற்றி விட்ட கோலம் என்ன
வட்டமிடும் கண்கள் ரெண்டும்
கொட்டிவிட்ட பாவம் என்ன
பெண்மை ஒன்று ஆண் என்று
மாறி வந்த சேதி என்ன (பட்டுப் பாவாடை)

கள்ளிலிருக்கும் முல்லை மொட்டு
கண்ணெடுத்து பார்ப்பதென்ன
கன்னம் மின்னும் வெள்ளி தட்டு
துள்ளி வந்து கேட்பதென்ன
தேரோடு சிற்பம் வந்து ஊர்வலந்தான் போவதென்ன (பட்டுப் பாவாடை)

பெண்ணுக்கு பெண் காதல் கொள்ளும்
கன்னி இன்று போவதெங்கே
முன்னும் பின்னும் காவல் இன்றி
தன்னந்தனி ஆவதெங்கே
குறை சொல்லும் மாப்பிள்ளை
யாரும் இன்றி செல்வதெங்கே (பட்டுப் பாவாடை)

என்னதான் நடக்கும் ...


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தநனாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே - ஹாஹ
(என்னதான் நடக்கும்)

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு - ஹாஹ
(என்னதான் நடக்கும்)

Wednesday, June 4, 2008

எனக்கொரு மகன் பிறப்பான்...

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான் ஹேய்..
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்

காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை அழைப்பான்
காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை அழைப்பான்
இரண்டு வரி கொண்டு மூன்று நெறி கண்ட
குறளின் பொருள் தேடிச் செல்வான்
நாளை வருகின்ற வாழ்வு நமக்கென்று
ஏழை முகம் பார்த்து சொல்வான்
ஏழை முகம் பார்த்து சொல்வான்

(எனக்கொரு மகன் பிறப்பான் )

கல்லைக் கனியாக்க கனவை நனவாக்க
கையில் ஏர் கொண்டு வருவான்
சாந்தி வழி என்று காந்தி வழி சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான்
உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்
உதவும் நாள் கண்டு துடிப்பான்
சுற்றிப் பகை வந்து சூழும் திரு நாளில்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்

(எனக்கொரு மகன் பிறப்பான் )

இந்த பாடலை எழுதிய வாலியிடம் ஒரு முறை "நீங்கள் ,நான் ஆணையிட்டால் என்று எழுதினீர்கள் ,அதன் போலவே நான் இன்று முதலமைச்சராகி என் ஆணைகள் நடக்கின்றன ,ஆனால் நீங்கள் எனக்கொரு மகன் பிறப்பான் என்று எழுதினீர்கள், அது நடக்காமலேயே போய் விட்டது"என்று வருந்தினாராம் எம்.ஜி.ஆர்.





பல்லாக்கு வாங்கப் போனேன் ....

பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
பல்லாக்கு வாங்க வந்தேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக


மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பெண்ணுக்கு சூட
அதை மண் மீது போட்டுவிட்டேன்
வெய்யிலில் வாட ..வெய்யிலில் வாட
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக

மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
மன மேடை போட சொன்னேன் மங்களம் இல்லை
மணமகளை காண வந்தேன் குங்குமம் இல்லை
காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை
கல்யாணம் கொள்வதுமட்டும்
என் வசமில்லை..என் வசமில்லை .............பல்லாக்கு.............

கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவை சொல்லி வந்தது பாவம்
வெறும் கூடாக பூமியில் இன்னும்
வாழ்வது பாவம்..வாழ்வது பாவம் ...........பல்லாக்கு..................

அத்தை மகள் ரத்தினத்தை ...

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை

சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்
சிட்டு விழி வீசி முத்து மொழி பேசி
சின்ன மயில் மறந்து விட்டாள்
செங்கரும்பு சாரும் தென்னை இளநீரும்
தந்த மயில் பறந்து விட்டாள்
தந்த மயில் பறந்து விட்டாள்
வண்ண ரதம் காண வந்திருந்த மன்னன்
வான ரதம் தேடுகிறார்
பொன்னிருந்த மடியை பூவிருந்த கொடியை
எண்ணி எண்ணி வாடுகிறார் ...........அத்தை மகள் ............

கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன்
காலத்தை அழைத்து விட்டேன்
காதல் மண மேடை நாடகத்தில் ஆடும்
கோலத்தை கலைத்து விட்டேன்
கோலத்தை கலைத்து விட்டேன்
அன்னை மீதாணை தந்தை மீதாணை
என்னை நீ தீண்டாதே .
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம்
அது வரை தடுக்காதே ...........அத்தை மகள் ............

நான் ஒரு குழந்தை ...

நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி
நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி

நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது

பவளக்கொடியே வா சிந்தாமணியே வா
மணிமேகலையே வா மங்கம்மாவே வா
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி

ஊரறியாமல் உறவறியாமல்
யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே
ஓடிய கால்கள் ஓடவிடாமல்
யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே
ஆவி துடித்தது நானுமழைத்தேன்
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே
ஆவி துடித்தது நானுமழைத்தேன்
நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே

பவளக்கொடியே வா சிந்தாமணியே வா
மணிமேகலையே வா மங்கம்மாவே வா
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி

கல்யாண பொண்ணு ...

கல்யாண(ப்) பொண்ணு கண்ணான(க்) கண்ணு
கொண்டாடி வரும் வளையல் ! அம்மா --
பூவோடு வருமே ! பொட்டொடு வருமே !
சிங்காரத் தங்க வளையல் !
வங்கி வளையல் ! சங்கு வளையல் !!
முத்து முத்தான வளையலுங்க !!! ((கல்யாண))

அத்தானின் காதல் முத்தாமலிருந்தால்
பித்தாகச் செய்யும் வளையல்
சில சித்தான உடம்பு வத்தாமலிருந்தால்
ஒத்தாசை செய்யும் வளையல்!
அன்ன நடை பின்னி வர
சின்ன இடை மின்னி வர
முன்னாடி வரும் வளையல்
இது அத்தை மவ ரெத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல் ! ((கல்யாண))

பொண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தா
மூணாக செய்யும் வளையல் !
இது ஒட்டாத மனசில் கிட்டாத சுகத்தை
கட்டாயம் தரும் வளையல்
மாமியாரை மாமனாரை சாமியாரா மாத்தி விட
மந்திரிச்சுத் தந்த வளையல்
இளங் காளையர்கள் கெஞ்சி வர
கன்னியர்கள் கொஞ்சி வர
தூதாக வந்த வளையல் ! ((கல்யாண))

போயும் போயும்...

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் குடுத்தானே-
இறைவன் புத்தியை குடுத்தானே -
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே -
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்-
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்-
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை
இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே-
இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே -
இதய போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே

கைகளை தோளில் போடுகிறான்-
அதை கருணை என்றவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்-
அதை கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே-
இறைவன் புத்தியை குடுத்தானே -
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே -
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே


உலகம் பிறந்தது ...

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்

பாடினாள் ஒரு பாட்டு ....

பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ


பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ

நல்ல தமிழ் இசை அமுதென வருகையில்
நெஞ்சம் அங்கே சென்றது
மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை
தென்றல் சொந்தம் கொண்டது
வெள்ளி ரதமென உருகிய பனியினில்
பெண்மை தெய்வம் நின்றது
உள்ளம் முழுவதும் புதுவித கவிதைகள்
அள்ளி அள்ளி தந்தது
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ

ஆளில்லாத நீரோ
நீரில்லாத ஆறோ
ஆறில்லாத ஊரோ
அவளில்லாத நானோ
மனக்கோயில் வாழ வந்த தெய்வீக பெண் என்பதோ
எனக்காக ஏங்குகின்ற
செவ்வல்லி கண் என்பதோ

பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ

பருவம் கொண்ட பாவை
பனி படர்ந்த பார்வை
வரவு சொல்ல தோன்றும்
உறவு கொள்ள வேண்டும்
மலர் மாலை யாருக்கென்று
பெண் பாவை கண் தேடுமோ
எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம்
என்னோடு ஒன்றாகுமோ

தைரியமாகச் சொல் நீ ....


தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்

மானை போல் மானம் என்றாய்-
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்-
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

அலையாடும் கடலை கண்டாய்
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

பொருள் வேண்டிதிருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா -இல்லை மனிதன் தானா
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்

கண்ணை நம்பாதே ....

கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும்
வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும் கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)

குறிப்பு :
இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
முதலில் பாடலை இயற்றிய மருதகாசி 'பொன் பொருளைக் கண்டவுடன் ...'என்று வரும் இடத்தில 'தன் வழியே போகிறவர் போகட்டுமே' என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து 'கண் மூடி போகிறவர் போகட்டுமே ......'என்று மாற்றி எழுதினாராம் .