Friday, May 30, 2008

ஏற்றமுன்னா ஏற்றம் ...

ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலே இருக்கு முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்

கிணற்று நீரை நிலத்துக்கு தான் எடுத்து தரும் ஏற்றம்
கிளைவெடிக்கும் பயிர்களுக்கு உயர்வளிக்கும் ஊட்டம்
தந்தனத் தானே
ஏலேலோ .....
தந்தனத் தானே
ஏலேலோ .....

எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
இடுப்பே வளையா மனிதர்
எதிர் பார்த்து பொழைக்கணும் -
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்

உடும்பு போல உறுதிவேனும்
ஓணான் நிலைமை திருந்தனும்
உடைஞ்சு போன நமது இனம்
ஒன்னா வந்து பொருந்தனும்
தந்தனத் தானே
ஏலேலோ .....
தந்தனத் தானே
ஏலேலோ .....

ஓதுவார் தொழுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையிலே
உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாத்தா மனசிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாத்தா மனசிலே
நீதிஎன்ற நெல் விளையும்
நெருஞ்சி படர்ந்த தரிசிலே
போடு .... தந்தனத் தானே
ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ

விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
நிதியை எண்ணும் பெரியவங்க
நெஞ்சில் அன்பு சேரனும்
நிரந்தரமா சகலருமே சுதந்திரமா வாழனும்
தந்தனத் தானே ஏலேலோ .....
தந்தனத் தானே ஏலேலோ .....

2 comments:

MuthukumarERA said...

அருமையான முயற்சி .
வாழ்த்துக்கள்

பூங்குழலி said...

நன்றி முத்துக்குமார்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி