Saturday, May 24, 2008

நினைத்ததை நடத்தியே .....

நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் !
என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம் !!

தங்கம் தங்கும் எந்தன் அங்கம் எங்கெங்கும் ! பொன்னும் பெண்ணும் வந்து மின்னும் கண் எங்கும் !
விளையாட்டு (ப்) பிள்ளைகள் தலையாட்டும் பொம்மைகள்
வர வேண்டும் எல்லோரும் உறவாட இந்நேரம் !
பட்டாடை தொட்டாட (க்) கட்டாயம் வா !! ((நினைத்ததை))

பன்னீரில் குளிப்பது மாளிகை நெஞ்சம் !
கண்ணீரில் மிதப்பது ஏழைகள் உள்ளம் !
படைத்தான் ஒரு உலகம்
பணம் தான் அதன் உருவம் !
எதுவும் இதில் அடக்கம் -
இது ஏன்னென்று எதிர்காலம் விடை கூறட்டும் !! ((நினைத்ததை))

செந்தேனை வடிப்பது தாமரை கன்னம் -
அதை சிந்தாமல் கொடுப்பது பூவிழி(க்) கிண்ணம்
முதல் நாள் - மெல்ல தொடலாம்
மறு நாள் - மிச்சம் பெறலாம்
அவன்தான் நல்ல ரசிகன்
இதை அறியாத நீ யாரோ புது(ப்) பாடகன் ((நினைத்ததை))

சொல்லாமல் நடப்பது நாடக மொன்று
அது இன்றோடு நில்லாமல் நாளையும் உண்டு !
இதழ்மேல் ஒரு பாடல்
மடிமேல் விளையாடல்
இடையில் சிறு ஊடல்
இதை நான் சொல்லத் தானிந்த விழி ஜாடைகள் ((நினைத்ததை))

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி