Monday, October 12, 2009

ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும் ....

ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
சேர்ந்து வருகுறார் வண்டியிலே
யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
என்ன சேதியோ தெரியல

வெட்கத்தாலே பெண்ணின் முகத்திலே
இட்ட மஞ்சளும் சிவக்குது
பட்டுக் கைவிரல் பட்டதுமே
அவள் பளிங்கு விழிகள் ஏன் தவிக்குது
(ஊர்வலமாக )

விறகு வெட்டியிடம் வீணை கிடைத்தால்
குருடன் கையிலே கவிதை கொடுத்தால்
இருவரும் தவிப்பது அதிசயமா
இது இவருக்கும் பொருந்திடும் உவமையம்மா