Friday, May 30, 2008

இரண்டு கண்கள் ...

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
முடிவதும் இல்லை
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
முடிவதும் இல்லை

ராமன் பார்த்த சீதை கண்கள்
சீதை கேட்ட ராமன் உள்ளம்
ராமன் பார்த்த சீதை கண்கள்
சீதை கேட்ட ராமன் உள்ளம்
கவிதை ஆனதம்மா கவிதை ஆனதம்மா
நான்கு கண்கள் கூடும் போது
கனவு காணுதம்மா கனவு காணுதம்மா

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
முடிவதும் இல்லை

முத்தான பனி துளி சீர் கொடுத்து முல்லை சிரிக்கின்றதோ
முன்னூறு வைரத்தில் மாலை இட்டு பெண்ணை அணைக்கின்றதோ பெண்ணை அணைக்கின்றதோ
முத்தான பனி துளி சீர் கொடுத்து முல்லை சிரிக்கின்றதோ
முன்னூறு வைரத்தில் மாலை இட்டு பெண்ணை அணைக்கின்றதோ பெண்ணை அணைக்கின்றதோ


கள்ளத் தென்றல் பிள்ளை தமிழை அள்ளித் தந்ததோ
கள்ளத் தென்றல் பிள்ளை தமிழை அள்ளித் தந்ததோ
உன் கவிதை உள்ளம் இதயம் சொல்லி
அதையும் கேட்காதோ
ஏன் கேட்கக் கூடாதோ

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
முடிவதும் இல்லை

சிங்கார தோப்புக்கு சீதனங்கள் தென்னை தருகின்றதோ
சிந்தாத தேன் துளி பருகவென்று என்னை அழைக்கின்றதோ
சின்ன தேரில் நீயும் நானும் சிலைகள் ஆகலாம்
சின்ன தேரில் நீயும் நானும் சிலைகள் ஆகலாம்
நல்ல சிவப்பு ரோஜா மாலை சூடும் தேவ திருநாளாம்
தேவ திருநாளாம்

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
முடிவதும் இல்லை

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி