Tuesday, September 30, 2008

நேருக்கு நேராய் .....

நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்
நேர்மை திறமிருந்தால்
(நேருக்கு நேராய் )

உழைப்போர் யாவரும் ஒன்று
பெரும் புரட்சிகள் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது
(நேருக்கு நேராய் )

பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா
சில பாவிகள் ஆணவம்
மக்களின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா
வாட்டத்தை மாற்றட்டும் இல்லையேல் மாற்றுவோம்
தீமைகள் யாவையும் கூண்டிலே ஏற்றுவோம்
(நேருக்கு நேராய் )

நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்
(நேருக்கு நேராய் )

பட்டத்து ராஜாவும் ...

பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலமிது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது


ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது
சில கோழை கும்பல் தான் வாழவேண்டி
பேதங்கள் கொண்டாடுது
உன்மகள் பொன்மகள் கேவலம் மீனவன்
எனையே காதலித்தாள்
ஊரினில் யாவரும் ஓரினம் தான் எனும்
நீதியை ஆதரித்தாள் நீதியை ஆதரித்தாள்
(பட்டத்து ராஜாவும் )


மாமா உங்க முன்னேற்றம் எங்கள்
கண்ணீரில் தான் வந்தது
அட ராமா உண்மை சொன்னாலே கோபம்
என் மேலே ஏன் வந்தது ?
நீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள்
சிறையாய் இருக்குதய்யா
நான் கொண்ட நாணயம் நாட்டிலும் வீட்டிலும்
நிறைவாய் இருக்குதையா
நிறைவாய் இருக்குதையா
(பட்டத்து ராஜாவும் )


கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட
கூட்டங்கள் என்னானது
பல ஓட்டை கண்டு தண்ணீரில் மூழ்கும்
ஓடங்கள் போலானது
ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு
இதுதான் பாடமையா
நாளிதழ் சொல்வதை நாட்டினில் நடப்பதை
கண்கொண்டு பாருமையா
கண்கொண்டு பாருமையா
(பட்டத்து ராஜாவும் )

Thursday, September 18, 2008

ஒன்றே சொல்வான் ...

எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்

ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
இரண்டும் உலகில் தேவை
ஆடும் போதும் நேர்மை வேண்டும்
என்றோர் கொள்கை தேவை
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்

யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்

உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம் !
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான் !

Wednesday, September 17, 2008

சும்மா இருந்தா ...

சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்
உண்மையோடு உழைக்கணும்
தானேய் தனன--
மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும்
தானேய் தண்னன்ன

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
கொடுத்த வேலையை முடிப்பது சிரேஷ்டம்
குடிசை தொழிலில் வேணும் நாட்டம்
அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை
இப்படி செய்வதனாலே தொல்லை
ஏற்பட்டதென்றால் கேட்பதுமில்லை
தெரிஞ்ச தொழிலை செய்தாலே
தான தண்னன்ன-மச்சான்
தாழ்வுமில்லை அதனாலே
தானேய் தண்னன்ன

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா
பாடு பட்டாலே பலனுண்டு
தானேய் தண்னன்ன-மச்சான்
பஞ்சம் தீர்க்க வழியுண்டு
தானேய் தண்னன்ன

மலைதனில் சிறியதும் பெரியதும் உண்டு
மனிதர்கள் அறிவிலும் அது போலுண்டு
உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

பிறந்த இடம் தேடி ...

பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக‌
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !

ஆலமரம் போல நீ வாழ
அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட‌
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட‌
காலமகள் உன்னைத் தாலாட்ட‌
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட‌

பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக‌
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக

புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கிடும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே

பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக‌
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !

கடவுள் வாழ்த்து பாடும் ..

கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து

தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
அவள் தாழ் பணிந்து எழுந்தால்
நம் தொழிலில் மேன்மை விளையும்

கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து

ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய‌ரும் போது
இம‌ய‌ம் போலத் தெரிந்திட‌ வேண்டாமோ
ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய‌ரும் போது
இம‌ய‌ம் போலத் தெரிந்திட‌ வேண்டாமோ
பிற‌ருக்காக வாழும் நெஞ்சம்
விரிந்திட‌ வேண்டாமோ
அது விரிந்திடும் போது
குன்றினைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ

கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து

வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்
வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்
நாடும் வீடும் நம்மால் என்றும்
நலம் பெற வேண்டாமோ
அந்த கடமைக்காக உடலும் மனமும்
பலம் பெற வேண்டாமோ

கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து !

பாடல் :வாலி
இசை:எம்.எஸ்.விசுவநாதன்
பாடியவர்:டி.எம் .சௌந்தராஜன்

ஆதி கடவுள் ஒன்றே தான் ...

ஊருக்கு நீ உழைத்தால்
உன்ன‌ருகே அவ‌ன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும்
ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர்
பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே
தினமும் குடியிருப்பான்
ஆஆஆஆ..ஆஆஆஆ...


ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
ஆதிகடவுள் ஒன்றே தான்

உள்ளத்தில் உள்ளவனை
ஒளிவிளைக்காய் நிற்பவனை ஆஆஆஆஆ..
ஊரெங்கும் தேடினாலும்
ஒரு நாளும் காண்பதில்லை
க‌ண்ட‌வ‌ரும் சொன்ன‌தில்லை
சொன்ன‌வ‌ரும் க‌ண்ட‌தில்லை
காற்றைப் போல் பூமியிலே
கலந்திருப்பான் ஆண்டவனே

ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
ஆதிகடவுள் ஒன்றே தான்

ம‌த‌ம் என்ற‌ சொல்லுக்கு
வெறி என்றோர் பொருளும் உண்டு
ம‌னித‌ராய் பிறந்த‌வ‌ர்க‌ள்
ம‌த‌த்தால் பிரிந்து விட்டார்
ம‌த‌த்தால் பிரிந்தவ‌ர்க‌ள்
அன்பினால் ஒன்றுப‌ட்டு
ஒன்றே குலமாக‌ ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்

ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
ஆதிகடவுள் ஒன்றே தான் !

பாடல் :உடுமலை நாராயணகவி
இசை :ஜி.ராமநாதன்
பாடியவர்:சீர்காழி கோவிந்தராஜன்

Tuesday, September 16, 2008

சிலர் குடிப்பது போலே ...

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார் !

மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !
அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே
நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது ந‌ல்ல‌வ‌னும் தீய‌வ‌னே
கோப்பை ஏந்தும் போது

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார்

புகழிலும் போதை இல்லையோ
பிள்ளை மழலையில் போதை இல்லையோ
காதலில் போதை இல்லையோ
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ
மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ ?
நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு !

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார் !

பாடல் :கண்ணதாசன்

இசை :எம் .எஸ் .விஸ்வநாதன்

பாடியவர் :டி .எம் . சௌந்தராஜன்

Tuesday, September 2, 2008

அறிவுக்கு வேலை கொடு ..

அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம்
மனதுக்குப் பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்
பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ

அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

பாடல் :வாலி

இசை :எஸ்.எம்.சுப்பையா நாயுடு

பாடியவர் :டி.எம்.சௌந்தராஜன்

Monday, September 1, 2008

கையை தொட்டதும் ...

கையை தொட்டதும் மெய்யை சிலிர்க்குதே
காதலின் வேகம் தானா
அந்திகாலத்தின் போகந்தானா ?
அனுராகத்தின் யோகந்தானா ?

தெய்வீக காதல் கனிந்திடும்
தேகத்திலே ஒரு சக்தியுண்டு
தெய்வீக காதல் கனிந்திடும்
தேகத்திலே ஒரு சக்தியுண்டு
அதை தேடி சித்தி பெற்று விட்டால்
இந்த லோகத்திலே பெரும் முக்தியுண்டு

பழுத்த பழம் ஆசைப் பட்டு
சும்மா பாசாங்கு பண்ணாதே பேசிக்கிட்டு
களைத்து போற நேரத்திலே
இங்கு கல்யாண மாப்பிள்ளை போல வந்து
பழுத்த பழம் தித்திக்கும்டி
இந்த பாழும் காயெல்லாம் புளிக்குமடி
அழுத்தமாக பேசாதேடி பெண்ணே
அத்தனையும் இள ரத்தமடி

குடுகுடு வயசிலே கும்மாளமா நீ போடுறே
சின்ன குழந்தை போலவே
அங்கையும் இங்கையும் ஓடுறே
கடுகடு வெனவே பேசியே ஏளனம் பண்ணாதே
அன்னக்காவடி சத்திரம் சாவடியாகவே எண்ணாதே
திடுதிடுவெனவே வந்தது ஏன் இங்கு நில்லாதே
நடு தெருவில் தள்ளியே
கதவை சாத்துவேன் துள்ளாதே