Tuesday, May 27, 2008

பதினாறு வயதினிலே ...

பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா


ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்


வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்
வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்
உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம்

ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்
ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்
பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம்


பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளயம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லயம்மா

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி