Wednesday, May 28, 2008

தங்கப் பதக்கத்தின் மேலே ....

தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ

முல்லை பூ பல்லக்கு ஆடை சுமந்து
மெல்ல தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவது உண்டு
அழகு நடையை பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே (தங்க)

பட்டாடை தொட்டாட தென்றல் துணிந்து
பக்கம் நடந்தது என்ன ?
உயிர் காதல் தலைவன் காவல் இருக்க
தொட்டு இழுத்தது என்ன ?
பனியில் நனையும் மலரின் உடலில் குளிர் எடுக்கதோ ? ஒருவன் மடியில் மயங்கும் பொழுது சுகம் பிறக்கதோ ? (தங்க பதக்கத்தின்) மேலே

கொத்தோடு முத்தாட வஞ்சி கொடியை
தொட்டு தொடர்ந்தது என்ன
அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
கொட்டி அளப்பது என்ன ?
அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
கொட்டி அளப்பது என்ன ?
ஊரும் உறவும் அறியும் வரையில்
கண்கள் மட்டோடு
மண மாலை தோளில் சூடும் நாளில்
கைகள் தொட்டாடு (தங்க)

1 comment:

clayhorse said...

One can feel the Gatorade energy in this song. Wow.

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி