Sunday, May 25, 2008

சுகம் எதிலே .....

சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா


இரண்டு கண்கள் எங்கும் சொல்லும் ஒரே மொழி
இங்கே மயங்கும் நெஞ்சம் செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா

ஆசை உண்டாக காரணம் யாரோ அழகான பெண்களோ
அழகான பெண்ணை அறிபவர் யாரோ தெரியாத ஆண்களா ...
பெண்ணே உன் பார்வை பேசும்போது சொல்லாத போய் இல்லையே
பொய்யோடு வந்த பூவையின் கண்கள் செல்லாத நெஞ்சில்லையே
கண்ணில் விழுந்த கண்கள் சொல்லும் ஒரே மொழி
நெஞ்சில் விழுந்த நெஞ்சம் செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா

முன்னே உலாவும் பெண்ணை கண்டால் முனிவரும் மாறுவார்
பின்னே உலாவும் ஆண்களை பெண்கள் நிறம் கூட மாற்றுவார்
பட்டாடை மாற்றும் பாவையின் மேனி என்னென்ன வண்ணங்களோ
அது இல்லாத போது ஏங்கும்போது என்னென்ன துன்பங்களோ
நெஞ்சம் மயங்கும் இன்பம் சொல்லும் ஒரே மொழி
துன்பம் தெரிந்த துன்பம் செல்லும் ஒரே வழி
சுகம் எதிலே இதயத்திலா பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா கண்ணாடி கின்னமா

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி