Wednesday, May 21, 2008

உண்மை அன்பின் ....

உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே
உனை நினைந்து மனம் மயங்க செய்தாயே
ஊரை எல்லாம் கொள்ளை கொள்ளும் என்னையே
பார்வையாலே கொள்ளை கொண்டாய் கன்னியே
உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே
உனை நினைந்து மனம் மயங்க செய்தாயே

கள்ளம் இல்லா காதல் இன்பம் தன்னையே
கள்வா நீயும் காண செய்வாய் என்னையே
சொல்ல சொல்ல எல்லை மீறி உள்ளுக்குள்ளே பாயுதே
பள்ளம் நாடும் வெள்ளம் போலே
உன்னை கண்டு தாவுதே
சொல்ல சொல்ல எல்லை மீறி உள்ளுக்குள்ளே பாயுதே
பள்ளம் நாடும் வெள்ளம் போலே
உன்னை கண்டு தாவுதே

ஆதாம் ஏவாள் தன்னை சேர்த்த அணையா ஜோதியே
ஆதாம் ஏவாள் தன்னை சேர்த்த அணையா ஜோதியே
உந்தன் மின்னல் ரூபம் எந்தன் கண்ணில் வந்து கொஞ்சுதே
இன்பம் கொள்வாய் மன்னா
என்று சொல்லி என்னை கெஞ்சுதே
உந்தன் மின்னல் ரூபம் எந்தன் கண்ணில் வந்து கொஞ்சுதே
இன்பம் கொள்வாய் மன்னா
என்று சொல்லி என்னை கெஞ்சுதே
விந்தை காதல் பெண் புறாவே அருகே வாராய்
விந்தை காதல் பெண் புறாவே அருகே வாராய்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி