Friday, June 6, 2008

அங்கே சிரிப்பவர்கள் ..


அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ
ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது


வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....
(அங்கே சிரிப்பவர்கள் )


நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?
(அங்கே சிரிப்பவர்கள் )


தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
போகப் போகக் காட்டுகிறேன்
(அங்கே சிரிப்பவர்கள் )

3 comments:

சு.செந்தில் குமரன் said...

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில், மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....


நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித் தலைகுனிய வைப்பதா?

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..

நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்


இதுதான் முழுமையான பாட்டு.


என் வாழ்க்கையில நான் அர்த்தம் புரிஞ்சு ரசிச்சு சிலிர்த்த முதல் பாட்டு இது.
இது குத‌ற‌ப்ப‌ட்டு இருக்க‌ற‌த‌ப் பார்க்கும்போது ரொம்பக் க‌ஷ்ட‌மா இருக்கு. ச‌ரி ப‌ண்ணுங்க‌ பிளீஸ்

Selvi said...

Nice post

ஈழமும் காதலும் said...

பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி