Thursday, June 12, 2008

ஆசை வைக்கிற ....

ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய்....மாமா....மாமா...

வம்புபண்ணி சண்டைக்கு நின்னா
அன்பு வளருமா? -
அது வளர்ந்தாலும் நீ நினைக்கிற
இன்பம் மலருமா? (ஆசை)


நீ திரும்பிப் பார்க்கும்போது
மனசு திருட்டுப் போகுது -
கண்ணே திருட்டுப் போகுது
சம்மதத்தைச் சொல்லப் போறியா? -
இல்லே என்னைச் சமயம் பார்த்துக் கொல்லப் போறியா?
ஒன்னைக் கண்டாலே கண்ணை எரியுது
காதல் எப்படி மொளைக்கும்? -
ஒங் கனவு எப்படிப் பலிக்கும்?
கையைத் தொடாதே கையைத் தொடாதே -
மானம் காற்றிலே பறக்கும்
மாமோய்....மாமா...மாமா....

கணக்கு மீறி காடு இருக்குது
அடுக்கு மாடி வீடு இருக்குது
அதுக்கு மேலே பணம் இருக்குது
மானே உனக்கு!
அத்தனையும் பாதுகாக்கும் கவலை எனக்கு -
நீ கல்யாண தேதி வைக்கிறியா? -
இல்லே இப்போ காவிக்கடைக்கு ஆள் அனுப்பறியா? கண்ணே....கண்ணே....கண்ணே....
என்னய்யா நீயும் ஒரு ஆம்பளையா?
சும்மா இளிக்கிறியே
சொன்னதெல்லாம் விளங்கலியா?
உண்மையா நீ எனக்கு மாப்பிள்ளையா?
வந்தாலும் ஒட்டாது கசந்துபோகும் வேப்பிலையா?
மாமோய்...மாமா....மாமா....(ஆசை)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி