Thursday, June 12, 2008

கண்டி ...

கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா
கழுகுமலை பழனிமலை
கால்நடையாய்ப் போக வேணும்
எங்கந்தா, எம்முருகா-என்வேலா எங்குமரா
-ஆ-ஆ சுப்பிரமணியா-ஆறுமுகா-
நீ கண்திறந்து பார்த்திடய்யா

எட்டுஜாண் குச்சிக்குள்ளே...
கந்தையா எத்தனை நாளிருப்பேன்
எட்டுஜாண் குச்சிக்குள்ளே-
கந்தையா எத்தனை நாளிருப்பேன்-
ஒரு மச்சுவீடு கட்டித் தாருங்காணும்-
உச்சி மலையின் மேலோனே-
ஒரு (மச்சு வீடு) சட்டியில் சேர்ந்ததெல்லாம்-
கந்தா உன் சன்னதி சேர்த்திடுவேன் (சட்டியில்)

மொட்டை ஆண்டி ஒன்னை முழுசாவே நம்புறேன்
மோட்சம் தந்திடப்பா-அட (மொட்டை)
தீராத வினைகளெல்லாம்
தீர்த்து வைப்பார் கோவிந்தம்
மாறாத மனசையெல்லாம்
மாத்தி வைப்பார் கோவிந்தம்!
பட்டை நாமம் கண்டால் பசி தீர்ப்பார் கோவிந்தம்-
உன் கட்டை கடைந்தேறக் கைகொடுப்பார் கோவிந்தம்!
கோவிந்தம் கோவிந்தம்
கொடுத்தா புண்ணியம் கோவிந்தம்!
ரகுராமா ரகுராமா நடுத்தெருவிலே என்னை விடலாமா?

அடப்பாவிகளே பாவிகளே
பார்த்துட்டு சும்மா போறீங்களே!
கோவிந்தம் கோவிந்தம் கோவப்படாத கோவிந்தம்!
மானாகி,மயிலாகி,மானாகி,
மயிலாகி நானாகி,நீயாகி,
வடிவாகி வந்த வடிவே-ஏ-ஏ

பெண்ணாகி,ஆணாகி,பேச்சாகி மூச்சாகி
-அடேயப்பா
பெண்ணாகி ,ஆணாகி,பேச்சாகி,மூச்சாகி
கண்ணாலே கொல்லும் கண்ணே-
கண்ணே கண்ணே கண்ணே கண்ணே
கண்ணே உடம்பை நம்பாதே-
கண்ணே உடம்பை நம்பாதே (உடம்பை)

உயிர் பிரிந்த பின்னே-
இது ஒன்றுக்கும் உதவாத மண்ணே
உடம்பை நம்பாதே-கண்ணே
உடம்பை நம்பாதே

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி