உழைக்கும் கைகளே  உருவாக்கும் கைகளே
 உலகை புது முறையில்  உண்டாக்கும் கைகளே 
உண்டாக்கும் கைகாளே  (உழைக்கும்) 
ஆற்று  நீரை தேக்கி வைத்து  அணைகள் கட்டும் கைகளே 
ஆண்கள் பெண்கள் மானம் காக்க  ஆடை தந்த கைகளே 
சேற்றில்  ஓடி நாற்று நட்டு  களை எடுக்கும் கைகளே 
செக்க வானம் போல என்றும் 
சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே  (உழைக்கும்) 
பலன் மிகுந்த எந்திரங்கள்  படைத்தது விட்ட கைகளே 
பாதை போட்டு உலகை ஒன்றாய்  இணைத்து வைத்த கைகளே 
பாரில் உள்ள பெருமை யாவும்  படைத்ததெங்கள் கைகளே 
பச்சை ரத்தம் வேர்வையாக 
படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே  (உழைக்கும்) 
உலகம் எங்கும் தொழில் வளர்க்கும்  மக்கள் ஒன்றாய் கூடுவோம் 
ஒன்று எங்கள் ஜாதி என்று  ஓங்கி நின்று பாடுவோம் 
சமயம் வந்தால் கருவி ஏந்தி  போர் முனைக்கு ஓடுவோம் 
தர்ம நீதி மக்கள் ஆட்சி 
வாழ்கவென்றே ஆடுவோம்...
நாம்  வாழ்கவென்றே ஆடுவோம்....  (உழைக்கும்)
Saturday, June 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அடேயப்பா இத்தனை அருமையான பாடல்களா!
அன்று போல இசை வார்த்தைகளை விழுங்ககாமல் இருந்தால், பாடலும் வாழும், இசையும் வாழும்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி