Tuesday, June 10, 2008

தொட்டுக் காட்டவா ....

தொட்டுக்காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக்காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் தேஜசோடு வட்டம் போடவா
லலலலா..பப்பாரப்பா
தொட்டுக்காட்டவா
மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக்காட்டவா
வட்டம் போடவா
வாலிபத்தின் தேஜசோடு வட்டம் போடவா

அதுவாய் கனிவதும் உண்டு
அடித்தால் கனிவதும் உண்டு
சங்கீத ஞானமும் சரசமும் சுகமும்
தானே வருவதும் உண்டு
இசையை ரசிப்பதும் உண்டு
இடையை ரசிப்பதும் உண்டு
எதிலே விழுந்தால் சுகமோ
அதிலே இதயம் படிவதும் உண்டு
...........தொட்டுக்காட்டவா மேலை..................

தாளத்தில் விளைவது பாடல்
தாகத்தில் விளைவது காதல்
தள்ளாடும் இடையுடன் நடமிடும் பெண்ணின்
கண்ணே காதலின் வாசல்
ஆசையை தருவது மேனி
ஆசையை துறந்தவன் ஞாநி
அஞ்சாமல் நடப்பதும் மேநியை பார்ப்பதும்
நவீன உலகத்தின் பாணி
..............தொட்டுக்காட்டவா மேலை...............

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி