Tuesday, June 3, 2008

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் ...

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்
(நல்ல வேளை )

நானே எழுதி நானே நடித்த
நாடகத்தில் ஒரு திருப்பம்
என்னை நம்பியிருந்தாள் அவள் நலம் அடைந்தாள்
என்றும் அது தானே என் விருப்பம்
எதிர் காலம் ஒன்று புது கோலம் கொண்டு
மனவாசல் தேடி வருமே
(நல்ல வேளை )

கண் மேல் பிறந்து கை மேல் முடியும்
கதையில் என்ன தயக்கம்
மலர் கட்டில் அறையில் அன்று கிட்டும் வரையில்
சொல்லும் காவியத்தில் வரும் மயக்கம்
ஒரு பாதி அங்கும் மறு பாதி இங்கும்
சரி பாதி இங்கு வருமே
(நல்ல வேளை )

மடி மேல் துயிலும் கொடி போல் துவளும்
பேரழகை படம் பிடித்தேன்
அந்த பட்டு முகத்தை இந்த சுட்டு விரலால்
தொட்டு பார்க்கையிலே உயிர் துடித்தேன்
காதல் போன்ற உள்ளம் கரை மீறி துள்ளும்
உடல் சேரும் எண்ணம் வருமே
(நல்ல வேளை )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி