Monday, June 16, 2008

அல்லி மலராடும் ஆணழகன் ..

அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
அணைத்திட நினைத்தே துடிக்க வைத்தான்
அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்

தொட்ட இடம் அனைத்தையும் மணக்க வைத்தான்
தோளை அணையாக தலைக்கு வைத்தான்
அணைத்திட நினைத்தே துடிக்க வைத்தான்
அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான்

தொட்ட இடம் அனைத்தையும் மணக்க வைத்தான்
தோளை அணையாக தலைக்கு வைத்தான்
பாலிலும் தேனிலும் குளிக்க வைத்தான்
பார்வையிலே மயக்கம் வைத்தான்

கலைகள் யாவும் படிக்க வைத்தான்
கதையில் பாதி நடத்தி வைத்தான்
அழகன் அழகன் பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்

கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
இருவர் மனதிலும் ஒரு உறவு
இதய வானத்தில் புது நிலவு
இருவர் மனதிலும் ஒரு உறவு
இதய வானத்தில் புது நிலவு

காதல் வழியில் புதுத் திருப்பம் ..புதுத் திருப்பம்
என்ன வருமோ பொறுத்திருப்போம்பொறுத்திருப்போம்
இருவர் மனதிலும் ஒரு உறவு
இதய வானத்தில் புது நிலவு
காதல் வழியில் புதுத் திருப்பம் ..
என்ன வருமோ பொறுத்திருப்போம்


அழகன் அழகன் பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி