Thursday, June 12, 2008

நான் கண்ட கனவில் நீயிருந்தாய் ...

ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...
ஜின்சல... ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...
ஜின்சல... ஜிஞ்சல...ஜல..
ஜிஞ்சல...ஜின்சல... ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...

நான் கண்ட கனவில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம் தந்தாய்
கனவும் கலைய... சுகமும் முடிய
அடுத்ததென்னவோ...ஓ...ஓ..ஒ...


அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது வரும் வரும்
நினைத்தால் மயங்குது மனம் மனம்
உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்


பந்து போல எனை எடுத்து தன் பக்கம் வைத்தானோ
பகல் வருகின்ற வரையில் புரிகின்ற மொழியில்
பாடத்தைச் சொன்னானோ
ஆகட்டும் ஆகட்டும் என்றது என்மேனி
ஆனந்தம் ஆரம்பம் கண்டது பொன்மேனி

அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது வரும் வரும்
நினைத்தால் மயங்குது மனம்
மனம் உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்

என்னவேண்டும் என்று நினைத்து என் நெஞ்சைத்தொட்டானோ
இவள் மயக்கத்தில் கொஞ்சம் மிதக்கட்டும்
என்று முத்திரை இட்டானோ
ஏ. .மிஸ்டர் ஏ...மிஸ்டர்
உனக்கிது கிட்டாது
ஓ...மிஸ்டர் ஓ...மிஸ்டர் கைகளுக்கெட்டாது

அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது வரும் வரும்
நினைத்தால் மயங்குது மனம் மனம்
உன்னைத்தான் நெருங்குது தினம் தினம் ய...ய...ய...

நான் கண்ட கனவில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம் தந்தாய்
கனவும் கலைய... சுகமும் முடிய
அடுத்ததென்னவோ...ஓ...ஓ..ஒ

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி