Monday, June 9, 2008

புதுமை பெண்கள்

புரட்சி கலை கவிதை நடையே
பொங்கி பெருகும் கங்கை நதியே
பெண்ணின் பெருமை பேசும் அழகே
புதுமை பெண்ணே வருக வருக

புதுமை பென்ன்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
இளமைக்காதல் உரிமைப்பாடல்
இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு
என்றே நாம் பாடுவோம்
அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம்
அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம்


அச்சம் என்றும் நாணம் என்றும்
அடக்கி வைத்தார்கள் ஆண்கள் நம்மை
ஆள திட்டம் தீட்டி வைத்தார்கள்
தீமை தன்னை என்னும் போது அச்சம் கொள்ளுங்கள்
பாவம் வந்து சேரும் போது வெட்க்கம் கொள்ளுங்கள் !
புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி
இதை பண் பாடி சொன்னான் பாரதி

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி