Monday, June 2, 2008

புன்னகையில் கோடி ...

புன்னகையில் கோடி பூங்கவிதை
பாடி கண்ணிரண்டில் மேவி
காட்சி தரும் தேவி பெண்ணொருத்தி
உன் போலே இன்னொருத்தி ஏது
விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது


ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தூங்குது கொஞ்சம்
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ

வானில் தோன்றும் மாலை சிவப்பு
வானில் தோன்றும் மாலை சிவப்பு
விழிகளில் பாதி விரல்களில் பாதி
விழிகளில் பாதி விரல்களில் பாதி
மூன்று கனிகளின் சுவை கொண்டு
நேர் வந்து நின்றது கொடிஒன்று
ஒன்றும் அறியாத பெண்ணோ

நிலவென்ன நெருப்பென்ன
உலவும் பேரழகே
உனக்குள்ளே முள்ளோ மலரோ என மயக்கம் பிறக்குதடி
எனக்குள்ளே என்னென்று ஏதென்று இனங்கான வடிவத்தை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை
நாம் பருகி பார்க்கையில் மது போலே
ஒன்றும் அறியாத பெண்ணோ

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி