Tuesday, June 10, 2008

உன்னை விட மாட்டேன் ...

உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம்.. கண்டுகொண்டேனே
உண்மைதானே
(உன்னை)


பெண்ணை லேசாய் எண்ணிடாதே
பேதை என்றே இகழ்ந்திடாதே
அன்பு கொண்டால் அமுதம் அவளே
வம்பு செய்தால் விஷமும் அவளே
இன்பக் காதல் இழக்க நேர்ந்தால்
கொஞ்சமேனும் பொறுக்க மாட்டாள்
(உன்னை)


பொங்கும் கடலின் ஆழம்தன்னை
புரிந்து கொள்ளல் மிகவும் எளிது
பெண்கள் நெஞ்சின் ஆழம்தன்னை
இங்கு யாரும் காணல் அரிது
மானைப் போலே வாழும் மங்கை
வன்மம் கொண்டால் பாயும் வேங்கை
(உன்னை)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி