Thursday, June 12, 2008

சித்திரத்தில் பெண் எழுதி ...

சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழ விட மாட்டாயோ

காவியத்தில் காதலென்றால் கரைந்துருகும் கற்பனையே
கண்ணிறைந்த காதலுக்கு கண்ணீர்தான் உன் வழியோ
அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுதத் தெய்வமெல்லாம் ஏட்டில் வரும் தேன்தானோ
மன்னர் குலக் கன்னியரும் கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்துப் பெண்களுக்கு வாய்த்த விதி இதுதானோ

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி