Tuesday, June 3, 2008

ஓடி ஓடி உழைக்கணும் ...


ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்

வயத்துக்காக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
வயத்துக்காக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறந்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
நான் அன்போட சொல்லுறத கேட்டு
நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவ பாரு அய்யாவ கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்

சோம்பேரியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
சுறுசுருப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா
துணியும் கிடைக்காது தம்பி
சோம்பேரியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
சுறுசுருப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா
துணியும் கிடைக்காது தம்பி
இத அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லி போடு

ஓடி ஓடி உழைக்கணும்

வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
படிப்பினை தந்தாகணும்

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்

1 comment:

Unknown said...

மிக்கமகிழ்ச்சி மிகவும் கருத்துகள் நிறைந்த அற்புத பாடல் வரிகளில் மனித வாழ்க்கை பற்றிய பொதுநோக்கு சிந்தனை.
இப்பொழுது இப்படி யாரும் எழுதுவது இல்லை.அப்படியே கவிஞர் எழுதினாலும் அவரை மக்கள் ஒரு பக்கத்தில் ஒதுக்கிவிடுகிறார்கள். காலத்திற்கு தகுந்தவாறு பாடலும் பாத்திரமும் மாறுபாடுகிறது. எல்லாமே மக்களின் மனதை பொறுத்ததுதான்,நன்றி.

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி