Tuesday, June 10, 2008

பொம்பளை சிரிச்சா போச்சி ....


பொம்பளை சிரிச்சா போச்சி
புகையிலை விரிச்சா போச்சி
பெண்ணே உனக்கென்ன ஆச்சி
நெருப்பா கொதிக்குது மூச்சி
பொம்பளை சிரிச்சா போச்சி
புகையிலை விரிச்சா போச்சி
பெண்ணே உனக்கென்ன ஆச்சி
நெருப்பா கொதிக்குது மூச்சி
நெருப்பா கொதிக்குது மூச்சி

நேரத்துக்கு ஆயிரம் பேச்சி
உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சி
கூடை பந்தாடும் கூந்தல் தள்ளாடும்
மேனாட்டு நாகரிகம்
மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும்
போராட்டம் என்ன கோலம்
கூடை பந்தாடும் கூந்தல் தள்ளாடும்
மேனாட்டு நாகரிகம்
மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும்
போராட்டம் என்ன கோலம்
பெண்ணை பெண்ணாக பார்க்க வேண்டும்
சேலை நான் தரவா
பெட்டை கோழியை காவல் காக்க
சேவல் நான் வரவா
..........பொம்பளை சிரிச்சா..............

கால்கள் பின்னாலும் நாணம் முன்னாலும்
செல்கின்ற பெண்மை கோலம்
கொஞ்சும் அன்போடு பொங்கும் பண்பாடு
நம் நாட்டு நாகரிகம்
பூவும் பொட்டோடும் வீடு காக்கும் தெய்வம் பெண்ணல்லவோ
பூவும் பொட்டோடும் வீடு காக்கும் தெய்வம் பெண்ணல்லவோ
பூவை என்று உன்னை சொல்ல பூவை சூடம்மா
..........பொம்பளை சிரிச்சா...............

கங்கை என்றாலும் எங்கே சென்றாலும்
கடலை கண்டாகவேண்டும்
காட்டு பெண்ணான வள்ளி என்றாலும்
முருகன் வந்தாக வேண்டும்
கங்கை என்றாலும் எங்கே சென்றாலும்
கடலை கண்டாகவேண்டும்
காட்டு பெண்ணான வள்ளி என்றாலும்
முருகன் வந்தாக வேண்டும்
யாரோ ஒருவன் நாளை வருவான் உன்னை பெண்ணாக்க
யாரோ ஒருவன் நாளை வருவான் உன்னை பெண்ணாக்க
பெண்ணே நீயும் மாற்றி விடாதே அவனை பெண்ணாக
.........பொம்பளை சிரிச்சா................

1 comment:

Information said...

பழைய அருமையான பாடல்.

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி