Wednesday, June 4, 2008

எனக்கொரு மகன் பிறப்பான்...

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான் ஹேய்..
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்

காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை அழைப்பான்
காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை அழைப்பான்
இரண்டு வரி கொண்டு மூன்று நெறி கண்ட
குறளின் பொருள் தேடிச் செல்வான்
நாளை வருகின்ற வாழ்வு நமக்கென்று
ஏழை முகம் பார்த்து சொல்வான்
ஏழை முகம் பார்த்து சொல்வான்

(எனக்கொரு மகன் பிறப்பான் )

கல்லைக் கனியாக்க கனவை நனவாக்க
கையில் ஏர் கொண்டு வருவான்
சாந்தி வழி என்று காந்தி வழி சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான்
உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்
உதவும் நாள் கண்டு துடிப்பான்
சுற்றிப் பகை வந்து சூழும் திரு நாளில்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்

(எனக்கொரு மகன் பிறப்பான் )

இந்த பாடலை எழுதிய வாலியிடம் ஒரு முறை "நீங்கள் ,நான் ஆணையிட்டால் என்று எழுதினீர்கள் ,அதன் போலவே நான் இன்று முதலமைச்சராகி என் ஆணைகள் நடக்கின்றன ,ஆனால் நீங்கள் எனக்கொரு மகன் பிறப்பான் என்று எழுதினீர்கள், அது நடக்காமலேயே போய் விட்டது"என்று வருந்தினாராம் எம்.ஜி.ஆர்.





2 comments:

Information said...

சூப்பர் பாடல்

Information said...

சூப்பர் பாடல்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி