Monday, June 2, 2008

என்ன உறவோ ....

என்ன உறவோ ? என்ன பிரிவோ ?
காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம்
கன்னி பூவிழி ஜாடையில் ((என்ன))

யாரை சொல்லி என்ன லாபம் ?
கானல் நீரை தேடினேன்
தாகம் தீர மோகம் தீர
பாலை வானத்தில் ஓடினேன் ((என்ன))

நேற்று சிரித்த சிரிப்பு எங்கே ?
நிலவு முகத்தை கேட்கிறேன்
நீயும் நானும் பாடிய பாட்டை
பாடி பாடி பார்க்கிறேன் ((என்ன))

கண்ணை நம்பி பெண்ணை நம்பி
வாழ்ந்த வாழ்க்கை போதுமே
பாதை மாறிப் பயணம் போகக்
கற்று கொண்டேன் பாடமே ((என்ன))

1 comment:

Information said...

அருமையான பாடல்.

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி