Thursday, May 15, 2008

என்ன கொடுப்பாய் ........

என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்
மின்னலது பின்னி விழும்
உன்னழகு கண் மலரில்என் மனது இன்பமுற ..
என் மனது இன்பமுற என்ன கொடுப்பாய்

தென்னவர்கள் காவியத்தில் தேடுகின்ற காதலினை
என்னழகுப் பூ விழியால் பின்னிக் கொடுப்பேன்
ம்ம்ம்.. என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்


தேனுரிமை கொண்டாடும் செவ்வரளிப் புவிதழை
நான் உரிமை கொள்ள வந்தால் ...
நான் உரிமை கொள்ள வந்தால்
என்ன கொடுப்பாய்

சேர்த்தவைகள் அத்தனையும் கேட்டதனால்
நான் எடுத்து சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொடுப்பேன்
ஆஹா .. என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்


காவலில்லா மாளிகைக்கு காவலுக்கு வந்தவனே
கன்னமிட வந்து நின்றால் ...கன்னமிட வந்து நின்றால்
என்ன கொடுப்பாய்
தேவை எனும் காரணத்தால்
திருடனையும் நான் மதித்து
திரும்பவும் கன்னமிட என்னைக் கொடுப்பேன்
என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்


ஓ.. என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்
ஓஹோ.. ம்ஹ¤ம்
என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்

1 comment:

Anonymous said...

Fentastic

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி